sivamgi.blogspot.com

Wednesday, 29 March 2017



Swamy Temple
  • Spiritual
  • General
  • Astrology
  • Jothidam
  • Panjangam
  • Mantra
  • Wonders



திருமண தடை நீக்கும் கல்யாணசுந்தர விரதம்

 March 29, 2017  admin
சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும்.
சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.
இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது.
இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பார்கள். பகல் வேளைகளில் உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக் கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.
இன்றைய தினம் விரதமிருந்து சிவன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த விரதத்தை முறையாக கடைபிடிப்பவர்களுக்கு திருமண தடை, குழந்தை பாக்கியம் என்பன கிடைக்கும்
sivamgi.blogspot.com at 01:49 No comments:
Share

திருமண தடை ஏற்படுத்தும் தோஷங்களும் பரிகாரங்களும்

 March 29, 2017  admin

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. ஆனால் இந்த திருமணம் என்பது சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
இந்த தோஷங்களில் பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர ராகுஃகேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகிய தோஷங்களும் காணப்படுகின்றன.
செவ்வாய் தோஷம் : ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.
ராகு – கேது தோஷம் : லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும்.
மாங்கல்ய தோஷம் : இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8-ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.
சூரிய தோஷம் : ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.

sivamgi.blogspot.com at 01:48 No comments:
Share

Tuesday, 21 March 2017

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் வைத்து, அதில் ஊறும் சாற்றை விழுங்கினால் . . .

Posted on May 15, 2015 by vidhai2virutcham

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் வைத்து, அதில் ஊறும் சாற்றை விழுங்கினால் . . .

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் வைத்து, அதில் ஊறும் சாற்றை விழுங்கினால் . . .
அதிமதுரம் என்கிற அற்புத மூலிகையின் சிறு துண்டு ஒன்றை எடுத்து அதை அப்ப‍டி வாயில் போட்டு முடிந்தால்
நாக்குக்கு அடியில் முடியா விட்டால் வாயில் எங்கேனும் ஒரு ஓரத்தில் அடக்கி வைத்திருக்கும் போது அதில் ஊறும் சாறு, நமது வாயில் சுரக்கும்  உமிழ் நீரோடு கலக்கும். இந்த உமிழ்நீர் கலந்து சாற்றை நாம் விழுங்க வேண்டும். அப்ப‍டி விழுங்கினால்  நீண்ட நாட்களாக இருந்து வந்த தொண்டைக் கரகரப்பு, குரல் கம்மல் போன்றவை குண மடைந்து சுகம் காண்பீர் மேலும்  தொண்டைச் சளியையும் இது கரைத்து தொண்டைக்கு இதமளிக்கும்.
sivamgi.blogspot.com at 21:43 No comments:
Share

ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்: சிந்தனை துளிகள்

ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்: சிந்தனை துளிகள்:                         சிந்தனை துளிகள் தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன் வேறு எதற்கும் வசப்படமாட்டான். அவனே வாழத் தகுதியுள்ளவன். * நம்...
sivamgi.blogspot.com at 21:41 No comments:
Share

Saturday, 18 March 2017

இது இருக்கும்போது சர்க்கரை நோய் குணமாக வேறு மருந்துகள் எதற்காக

sivamgi.blogspot.com at 01:21 No comments:
Share

இது இருக்கும்போது சர்க்கரை நோய் குணமாக வேறு மருந்துகள் எதற்காக

sivamgi.blogspot.com at 01:20 1 comment:
Share

Putham Puthu Kaalai | Mooligai Maruthuvam |(07/09/2016) | [Epi-740]

sivamgi.blogspot.com at 01:15 No comments:
Share

Putham Puthu Kaalai | Mooligai Maruthuvam |(07/09/2016) | [Epi-740]

sivamgi.blogspot.com at 01:15 No comments:
Share

வீட்டின் வாஸ்து தோஷத்துக்கான பரிகாரம்

நாம் வாழும் வீடு, நமக்கு நன்மை அளிப்பதாகவும், சுப காரியங்கள் நிகழ்வதாகவும், நோய்கள் அண்டாமலும், கடன் தொல்லை போன்ற பிரச்னைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும். இல்லையெனில் வாழ்க்கையை வெறுப்பாக தோன்றும். முக்கியமாக வீட்டின் வாஸ்து சரியாக இருக்க வேண்டும்.
வாஸ்து தோஷம், முச்சந்தி வீடு, இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு, அல்லது ஒரு சிலருக்கு புதியதாக குடி போனதிலேயிருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும், எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விசயமே நடக்காது, எவ்வளவோ பரிகாரம் செய்தும் நீங்கியிருக்காது இப்படிபட்ட அமைப்பில் உள்ள வீடுகளில் எப்போதும் ஏதாவது குறையோ தோஷமோ இருந்து கொண்டே இருக்கும்
இப்படிபட்ட தோஷங்கள், குறைகள் நீங்க பைரவ வழிபாடு செய்யலாம். வீட்டின் நான்கு மூலையிலும் ஒரு விளக்கு என நான்கு விளக்கு பைரவரை நினைத்து கொண்டு 90 நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும். 90 நாள் என்பது ஒரு கணக்கு தான் நமக்கு இப்போ ஓரளவு பரவாயில்லை, பிரச்சனை இல்லை அப்படியென்று உணரும் வரை விளக்கு போட வேண்டும் வாழ்நாள் முழுமையும் கூட விளக்கு போடலாம்.
ஒருவேளை வீட்டுக்கு காம்போண்டு சுவற்றுக்குள் விளக்கு போட்டால் யாரவது எதாவது நினைபாங்க அப்படின்னு சங்கடபட்டால், வீட்டுக்கு உள்ளேயே நான்கு மூலைக்கும் விளக்கு ஏற்றலாம், (விளக்கு எரிந்து முடியும் வரை கவனம் தேவை). விளக்கு ஏற்றும் போது பைரவர் கவசம், பைரவர் காயத்ரி, பைரவர் ஸ்லோகம், ஸ்துதி, பைரவர் போற்றி என ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே விளக்கு ஏற்றலாம்.
இவ்வழிபாட்டினைஆரம்பிக்கும் முன் பைரவர் கோவிலுக்கு சென்று அங்கு விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி (வழிபாடு வெற்றி அடைய) பிறகு பைரவருக்கு ஒரு விளக்கேற்றி அனுமதியும் ஆசிர்வாதமும் பெற்று பிறகு வீட்டிற்கு வந்து விநாயகரை வணக்கி அவருக்கும் ஒரு விளக்கேற்றிய பிறகே பைரவரை நினைத்து விளக்கு போட வேண்டும்
இந்த வழிபாட்டினை செய்ய ஆரம்பிக்க மிகவும் உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி, வாஸ்து நாள், பௌர்ணமி அப்படியும் இல்லையென்றால் உங்கள் குடும்ப உறுபினர்கள் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் வராத நாள் எதுவானாலும் ஆரம்பிக்கலாம். இந்த வழிபாட்டு செய்து பாருங்கள், வீட்டில் அனைத்து மங்களமும் உண்டாகும்.
sivamgi.blogspot.com at 01:13 No comments:
Share

ஒரே நாளில் சளியை வெளியேற்ற சூப்பரான மருந்து இதோ

sivamgi.blogspot.com at 01:08 No comments:
Share

ஒரே நாளில் சளியை வெளியேற்ற சூப்பரான மருந்து இதோ

sivamgi.blogspot.com at 01:08 No comments:
Share

Thursday, 2 March 2017

ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்: வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்?

ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்: வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்?:        வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்?  வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம் ? பொதுவாக கடவுள்...
sivamgi.blogspot.com at 06:44 No comments:
Share

ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்: 20 வீட்டு பூஜை குறிப்பு மந்திரங்கள்

ஸ்ரீஆனந்தாய்பேச்சியம்மன்: 20 வீட்டு பூஜை குறிப்பு மந்திரங்கள்: வீட்டு பூஜை குறிப்பு மந்திரங்கள் 1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். 2. வீட்ட...
sivamgi.blogspot.com at 06:43 No comments:
Share
‹
›
Home
View web version

About Me

sivamgi.blogspot.com
Karur, Tamilnadu, India
View my complete profile
Powered by Blogger.