SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Thursday 31 August 2017

Brihadeeswarar Temple 360 view | Brihadeeswarar Temple Varahi amman sannathi | Temple virtual Tour | 360 view | 360 degree virtual tour | tamilnadu temples 360 degree | Brihadeeswarar Temple | Brihadeeswarar Temple Thanjavur | Brihadeeswarar koil | பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர்

Brihadeeswarar Temple 360 view | Brihadeeswarar Temple Varahi amman sannathi | Temple virtual Tour | 360 view | 360 degree virtual tour | tamilnadu temples 360 degree | Brihadeeswarar Temple | Brihadeeswarar Temple Thanjavur | Brihadeeswarar koil | பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர்: பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் » வாராஹி சன்னதி : Brihadeeswarar Temple 360 view, Brihadeeswarar Temple Varahi amman sannathi, Brihadeeswarar Temple, Thanjavur Brihadeeswarar, Brihadeeswarar koil, Thanjavur, 360 degree temple view, tamilnadu temples 360 degree view, 360 degree virtual tour in tamil voice, 360 degree view murugan temples, 360 degree view vinayagar temples, Thanjavur Temple, RajaGopuram, tamilnadu temple, temple, பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர்

USEFUL AND HEALTH INFORMATION: மருந்தாகும் உணவு வகைகள்

USEFUL AND HEALTH INFORMATION: மருந்தாகும் உணவு வகைகள்: மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்….. கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.  1. நீங்க...

ஆட்டுக் கால் பாயா | Aatukal paya | Samayalkurippu

வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி? | How to make Peanut Chutney | South In...

Kovakkai Varuval / The ivy gourd Fry / கோவக்காய் வறுவல்

Mutton chukka(மட்டன் சுக்கா)Sivakasi Samayal/Recipe - 1

Kudal/Boti Varuval (குடல் வறுவல் ) Tamil - Sattur Parambariya Samayal - 37

Aappam | Aattukal Paya | Mutton Paya | Goat Leg| Coconut Milk| Breakfast-10

குடல் குழம்பு KUDAL KULAMBU/ Boti Curry Tamil - Sattur Parambariya Samay...

ஆட்டுக்கால் சூப்                                                    குருமா                                                

கோவக்காய் பொ‌றி‌யல்             

காரசாரமான காளான் மசாலா                                கோதுமை தோசை 

 சூப் செய்வது எப்படி                                  ஆணை நெருஞ்சி                          http://samayalkurippu.com                             முருங்கை காம்பு சூப்                                                                                                                                                                                                                                                             குடல் குழம்பு                                                                                                                                                                                                                                                                                                                 ஓஷோ                                                                      குடல் குழம்பு

Village Foods - Amazing Roasted Whole Chicken Recipe - BBQ Chicken Recip...

Mutton Leg Soup Recipe | Spicy Soup Nepali Style | Learn to cook with me

Goat Leg Soup || Healthy Goat Legs Recipe By My Grandmother's

சுவையான ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி|| Attukal soup Recipe in Tamil

ரவா தோசை - Tasty Rava Dosai

kovakkai poriyal fry recipe in tamil/kovakkai pepperfry (கோவக்காய் பொ‌...

ஈஸி குருமா/ Easy kurma (simple veg stew with less spices)

சுவையான சத்தான ஆட்டுக்கால் சூப்!

ஆந்திரா கோவைக்காய் பெப்பர் ஃப்ரை

சோயா 65 /Soya 65

காரசாரமான காளான் மசாலா in Tamil | Side dish for Roti,chapati

ரவா தோசை / ரவை தோசை - தமிழ் / Rava Dosai - Tamil

கோதுமை தோசை recipe in Tamil | Gothumai dosai |deepstamilkitchen

தோசை கல்லில் ஒட்டாமல் வர வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!!

சர்க்கரை நோய் புற்று நோய் வராமல் தடுக்கணுமா - prevention of cancer in ta...

N S Krishnan Super Hit 48 Songs| என்.எஸ்.கிருஷ்ணன் சூப்பர் ஹிட் சாங்ஸ்

NSK Comedy Songs | சிரிப்பு மூலம் சிந்திக்க வைத்து சிரிக்க வைத்த N.S.கிர...

N S Krishnan Comedy சிரிப்பும் சிந்தனையும் கலந்தN.S.கிருஷ்ணன் நகைச்சு...

Tuesday 29 August 2017

கும்மிருட்டிலும் தெளிவாக பார்க்க உதவும் அரிய இந்திய மூலிகை அனைவருக்கும் ...

http://muthupetblog.blogspot.in/ கண் நோய்க்கான மூலிகை மருத்துவம்.

Kan paarvai nandraga பாரம்பரிய வைத்தியர் Dr.ராஜமாணிக்கம் கண் பார்வை நன்ற...

தமிழ் அரிச்சுவடி





உயிரெழுத்துக்கள்→
மெய்யெழுத்துக்கள்
க்காகிகீகுகூகெகேகைகொகோகௌ
ங்ஙாஙிஙீஙுஙூஙெஙேஙைஙொஙோஙௌ
ச்சாசிசீசுசூசெசேசைசொசோசௌ
ஞ்ஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ
ட்டாடிடீடுடூடெடேடைடொடோடௌ
ண்ணாணிணீணுணூணெணேணைணொணோணௌ
த்தாதிதீதுதூதெதேதைதொதோதௌ
ந்நாநிநீநுநூநெநேநைநொநோநௌ
ப்பாபிபீபுபூபெபேபைபொபோபௌ
ம்மாமிமீமுமூமெமேமைமொமோமௌ
ய்யாயியீயுயூயெயேயையொயோயௌ
ர்ராரிரீருரூரெரேரைரொரோரௌ
ல்லாலிலீலுலூலெலேலைலொலோலௌ
வ்வாவிவீவுவூவெவேவைவொவோவௌ
ழ்ழாழிழீழுழூழெழேழைழொழோழௌ
ள்ளாளிளீளுளூளெளேளைளொளோளௌ
ற்றாறிறீறுறூறெறேறைறொறோறௌ
ன்னானினீனுனூனெனேனைனொனோனௌ

BIGGEST CHICKEN COOCKED BY INDIAN VILLAGE AUNTY |TRADITIONAL CHICKEN BIR...

மனத்தின் ஆற்றல்கள்(அற்புதமான மனம்)சொற்பொழிவு-SWAMI VIVEKANANDA

Palaya Paadala Puthiya Padala பழையபாடலா புதிய பாடலா திண்டுக்கல் ஐ.லியோனி...

மூலிகை உலகு: ஹீமோகுளோபினை அதிகரிக்க எளிய முறை

மூலிகை உலகு: ஹீமோகுளோபினை அதிகரிக்க எளிய முறை: உடலில் அதிகமான அசதி, எந்த செயலை செய்ய வேண்டு மானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை, உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்...

KKR Health Care : இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்...

KKR Health Care : இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்...: இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..? 1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். ...

அக்கிப் புண்

அக்கிப் புண்: அக்கிப் புண் !!! கோடை காலத்தில் வெப்ப மிகுதியால் சிலருக்கு உடலில் அக்கி என்னும் நோய் தோன்றலாம் அந்தக் காலத்தில் குயவர்களிடம் சென்று மண்...

KKR Health Care : MEDICAL FITNESS - Reference Level

KKR Health Care : MEDICAL FITNESS - Reference Level: *MEDICAL FITNESS* ( PREVENTION IS BETTER THAN CURE )        *CHOLESTEROL*            ------------------ Cholesterol ---   <  200 HD...

Saturday 26 August 2017

PRICKLY PEAR FRUIT Eating My Village Children's/VILLAGE FOOD CLUB

கற்றாழை ஜூஸ் செய்முறை - Aloe vera juice Recipe

HOW TO ? Aloe vera juice - chennai Road Shop

Aloe Vera Ginger Lemon Juice...!!!!|||How to make Aloe Vera Juice

ஆவாரம் பூ குடிநீர் என்னென்ன உடல் ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்

ஆவாரம்பூ மூலிகை குடிநீர்

ஆவாரம் பூ குடிநீர் என்னென்ன உடல் ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும்

ஆணை நெருஞ்சி அற்புதமான மருந்து நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை முழுமையாக கரைத்துவிடும்...

சிறுநீரக கல்லை கரைக்கும் பெரு நெருஞ்சில்

கண்டங்கத்தரி என்னும் அற்புத மூலிகை....!!!!!!!

அடிக்கடி சிறுநீர் போவதன் காரணம் தடுக்க சில வழிமுறைகள்

டெங்கு கொசு ஒன்றுகூட உங்கள் வீட்டில் நுழையாமல் தடுக்கும் இயற்கை வழிகள்!!...

நினைத்ததை நிறைவேற்றும் சாய்பாபாவின் 9 வியாழக்கிழமை விரதம்

விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம்.
எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்
காலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இருந்து இந்த விரதத்தை செய்யவே கூடாது.
பலகையில் மஞ்சள் துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்
மஞ்சள் நிறமலர்களால் ஆன மாலையை சாய்பாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி, பிரசாதம். (பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும்) நெய்வேத்தியம் வைத்து, விநியோகம் செய்து சாய்பாபாவை ஸ்மரணை செய்யவும்.
முடிந்தால் சாய்பாபாவின் கோவிலுக்குச் செல்லவும். வீட்டிலேயே சாய் பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும். சாய் விரத கதை, சாய் பாமாலை, சாய் பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும்.
வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.
விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.
விரத நிறைவு விதிமுறைகள் :
1) ஒன்பதாவது வியாழக்கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும் (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும்.
2) சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக 9-வது வியாழக்கிழமை இந்த சாய் விரத புத்தகங்களை நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இலவசமாக விநியோகிக்கவும் (5 அல்லது 11 அல்லது 21 என்ற எண்ணிக்கையில்).
3) விநியோகிக்கும் அன்று பூஜையில் வைத்த பிறகு விநியோகிக்கவும். இதனால் புத்தகத்தை பெறும் பக்தர்களின் விருப்பங்களும் நிறைவேறும்.
4) மேற்கூறிய விதிமுறைகளின்படி விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.

டெங்கு கொசு ஒன்றுகூட உங்கள் வீட்டில் நுழையாமல் தடுக்கும் இயற்கை வழிகள்!!...

Friday 25 August 2017



1. கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, தும்பை, சீரகம், பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து காலை மாலை பாலில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.

கண்டங்கத்தரி என்னும் அற்புத மூலிகை....!!!!!!!

அடிக்கடி சிறுநீர் போவதன் காரணம் தடுக்க சில வழிமுறைகள்

மனதை வகைப்படுத்தலும் (சில சமயங்களில்அதிலிருந்து வெளியே வருதலும் 
மனதை மாற்றுங்கள்.
மனதில் வெகுநாள் பழக்கமாக இருக்கும் ஒரு பாணியை மாற்றவேண்டுமென்று கருதினால், சுவாசம்தான் சிறந்தவழி. மனதின் எல்லாபழக்கங்களுமே சுவாசத்தின்பாணியை பொறுத்தே இருக்கிறது.
 சுவாசத்தின் பாணியை மாற்றுங்கள், உடனே மனது மாறுகிறது, சட்டென்று மாறுகிறது. முயன்று பாருங்கள்!
எப்போதேல்லாம் நீங்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் வருகிறதோ, நீங்கள் பழைய பழக்கத்திற்கே போகிறீர்கள்,
உடனே மூச்சை வெளியே விடுங்கள் – ஏதோ அந்த முடிவை அந்த வெளியேவிடும் மூச்சுவழியாக தூக்கிஎறிவது மாதிரி.  வயிற்றை உள்ளே இழுத்து வெளியே மூச்சைவிடுங்கள், நீங்கள் அந்த காற்றை வெளியே எறியும்போது, அந்த முடிவை தூக்கி எறிவதைப் போல உணருங்கள், அல்லது நினையுங்கள்.
பிறகு புதிய காற்றை ஒன்றிரண்டுமுறை ஆழமாக உள்ளே இழுங்கள்.
என்ன நடக்கிறது என்று பாருங்கள். முழுமையான புத்துணர்ச்சியை
உணர்வீர்கள். பழைய பழக்கங்கள் வந்து ஆக்ரமிக்க முடியாது.
அதனால் மூச்சை வெளியே விடுவதிலிருந்து துவங்குங்கள், உள்ளே இழுத்தல்ல. எதையாவது உள்ளே எடுக்க வேண்டுமென்றால், மூச்சை உள்ளே
இழுக்கத் துவங்குங்கள். எதையாவது வெளியே தூக்கி எறிய நினைத்தால்,
மூச்சை வெளியே விடத்துவங்குங்கள். மனம் உடனே எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை பாருங்கள்.  உடனே உங்கள் மனது வேறு எங்கோ நகர்ந்துவிட்டதை காண்பீர்கள்; ஒரு புதிய காற்று உள்ளே வந்திருக்கிறது.  நீங்கள் அந்த பழையபள்ளத்தில் இல்லை, அதனால் அந்த பழையபழக்கத்தை மறுபடியும் கொண்டுவரமாட்டீர்கள்.
இது எல்லா பழக்கத்திலும் உண்மை.
உதாரணமாக, நீங்கள் புகைபிடிக்கிறீர்கள்., புகைக்கவேண்டுமென்கிற உந்துதல் வரும்போது,
உடனே அதைச் செய்யவேண்டாம், அப்போது மூச்சை வெளியேவிடுங்கள், அந்த உந்துதலை தூக்கி வெளியேஎறியுங்கள். புதியகாற்றை உள்ளே இழுங்கள்,
உடனே அந்த உந்துதல் போய்விட்டதை காண்பீர்கள்.
உள்மாற்றத்திற்கு இது மிக,மிக முக்கியமான கருவியாக இருக்கும்

Thursday 24 August 2017

  • ஓஷோ பதில்கள   ஒரு 2 நிமிடம் ஒதுக்கி இதை படித்து பாருங்கள்……..
விழிப்புணர்வு பற்றி பல கேள்விகள்.
ஓஷோவின் பதில்கள்.(மூலம். விழிப்புணர்வு – நோய்கள் பல மருந்து ஒன்று #3 – 4)
.
மன இறுக்கமும் ஓய்வும்.
-----------------------------------------------------
இப்போது ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மனோவசியம் செய்பவர்கள், ஒரு அடிப்படை விதியைக் கண்டு பிடித்துள்ளார்கள். அவர்கள் அந்த விதியை, எதிரிடை விதி என்று அழைக்கிறார்கள். ஒன்றின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளாமல் நீங்கள் ஏதாவது செய்வதற்கு, நீங்கள் கடின முயற்சி மேற்கொண்டால், வெறுமனே அதற்கு எதிரான முடிவுதான் ஏற்படும்.
.
இது, நீங்கள் ஒரு சைக்கிளை முதன்முதலாக ஓட்டுவதற்கு கற்றுக் கொள்வதைப் போன்றது. அப்படிக் கற்றுக் கொடுக்கும்போது நீங்கள் ஒரு அமைதியான, போக்குவரத்து இல்லாத சாலையில், அதிகாலையில் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது நீங்கள் சாலையின் ஓரத்தில் சிவப்பு நிறத்தில் நிறுத்தப் பட்டுள்ள மைல்கல்லைப் பார்க்கிறீர்கள். சாலையோ அறுபது அடி அகலம் இருக்கும். ஆனால், அந்த மைல்கல் மிகவும் சிறியதாக சாலை ஓரத்தில் நிற்கும். ஆனால் நீங்கள் அதைப் பார்த்து பயப்படுவீர்கள். நீங்கள் சைக்கிளில் அந்த மைல்கல்லில் மோதிவிடுவோமோ என்று பயப்படுவீர்கள். இப்போது நீங்கள் அந்த அறுபது அடி சாலையை மறந்துவிடுவீர்கள். உண்மையில் கண்ணைக் கட்டிக் கொண்டு சென்றாலும்கூட அந்த மைல்கல்லில் மோதுவதற்கு அதிக சந்தர்ப்பம் கிடையாது. ஆனால் இப்போதோ, கண்களை திறந்து கொண்டு இருக்கும்போதே அந்த அறுபது அடி சாலை மறக்கப் பட்டு உங்களது மனம் அந்த மைல்கல்லில்மீது குவிக்கப்பட்டு விட்டது. முதலில் அதன் சிவப்பு நிறம் மனதில் குவிகிறது. எனவே நீங்கள் அதைப் பார்த்து பயப்படுகிறீர்கள். எனவே அதன்மீது மோதுவதைத் தவிர்ப்பதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் ஒரு சைக்கிளின் மீது இருப்பதையும் மறந்துவிடுவீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவீர்கள். இப்போது உங்களுக்கு உள்ள ஒரே பிரச்னை அந்த மைல்கல்லில் மோதாமல் இருப்பது எப்படி என்பதுதான். இல்லையெனில் அதன்மீது மோதி உங்களது கை காலை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
.
இப்போது நீங்கள் அந்த மைல்கல்லின் மீது மோதுவது தவிர்க்கமுடியாமல் போய்விடும். நீங்கள் நிச்சயம் அந்த கல்லின்மீது மோதிவிடுவீர்கள். அதன்பிறகு நீங்களே, நான் இந்தக் கல்லின் மீது இடிக்காமல் இருப்பதற்கு கவனமாக முயற்சி செய்தேன். என்றாலும் தோற்று விட்டேன் என்று நினைத்து ஆச்சரியப்படுவீர்கள். உண்மையில் நீங்கள் கடினமாக முயற்சி செய்ததால்தான் நீங்கள் அந்த கல்லின்மீது மோதினீர்கள். நீங்கள் அதை நெருங்கி வர வர, அதன்மீது மோதாமல் இருப்பதற்கு நீங்கள் கடினமாக முயற்சி செய்தீர்கள். ஆனால் நீங்கள் எந்த அளவுக்கு அந்த கல்லை தவிர்த்துவிட முயற்சி செய்தீர்களோ அந்த அளவுக்கு உங்களது மனம் அதன்மீது குவிந்துவிட்டது. அது ஒரு மனோவசிய சக்தியாக ஆகிவிட்டது. அது உங்களை மனோவசியம் செய்துவிட்டது. அது ஒரு காந்தம் போல் ஆகிவிட்டது.
.
இது வாழ்க்கையின் ஒரு அடிப்படை விதி. அநேக மக்கள், அநேக விஷயங்களை தவிர்ப்பதற்கு விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் அதே விஷயங்களில் விழுந்து விடுகிறார்கள். அதிக முயற்சி செய்து, ஏதாவது ஒன்றை தவிர்த்துவிடப் பாருங்கள். நிச்சயமாக நீங்கள் அதே குழியில் விழுந்துவிடுவீர்கள். அதை நீங்கள் தவிர்க்கமுடியாது. அதை தவிர்ப்பதற்கான வழி அது அல்ல.
.
ஓய்வாக இருங்கள். கடின முயற்சி செய்யாதீர்கள். ஏனெனில் ஓய்வாக இருப்பதன் மூலமே நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க முடியும். கடினமாக முயற்சி செய்வதால் இருக்க முடியாது. எனவே, அமைதியாக, ஓய்வாக, அடக்கமாக இருங்கள்.
.
பதற்றம் என்பது என்ன, பதற்றம் என்பது நீங்கள் உங்களது எண்ணங்கள் பயங்கள் இவற்றோடு உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதாகும். மரணம், திவால், டாலர் மதிப்பு வீழ்ச்சி இப்படி எல்லாவிதமான பயமும் இருக்கிறது. இவைகள்தான் உங்களது பதற்றம் மேலும், இவை உங்களது உடலையும் பாதிக்கின்றன. உங்களது உடலும் பதற்றம் அடைகிறது. ஏனெனில் உடல் மற்றும் மனம் என்பது, இரண்டும் தனித்தனியாக இருப்பவை அல்ல. உடல் மனம் என்பது ஒரே அமைப்புதான். ஆகவே மனம் பதற்றம் அடையும்போது உங்களது உடலும் பதற்றம் அடைகிறது.
.
நீங்கள் முதலில் விழிப்புணர்வுடன் ஆரம்பிக்கலாம். அதன்பின்னர் இந்த விழிப்புணர்வு உங்களை உங்களது மனத்திலிருந்தும், மனதோடு உங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதில் இருந்தும் வெளியே எடுத்துவிடுகிறது. உடனே இயல்பாக உங்களது உடல் ஓய்வுடன் இருக்க ஆரம்பித்துவிடும். அப்போது நீங்கள் எதோடும் பற்றிக் கொண்டு இருக்க மாட்டீர்கள். மேலும் விழிப்புணர்வு என்னும் வெளிச்சத்தில் பதற்றம் என்பது இருக்கமுடியாது.
.
அதே போன்று, நீங்கள் அடுத்த பக்கத்தில் இருந்தும் ஆரம்பிக்கலாம். வெறுமனே தளர்வுடன் இருங்கள். ஓய்வுடன் இருங்கள். அப்போது தானாகவே எல்லாப் பதற்றமும் விட்டு விலகிவிடும். மேலும், நீங்கள் ஓய்வாக இருக்க ஆரம்பித்துவிட்டால், உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வு எழுவதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவைகள் பிரிக்கமுடியாதவை. ஆனால் விழிப்புணர்வில் இருந்து ஆரம்பிப்பது சுலபம், ஓய்வாக இருப்பதில் இருந்து ஆரம்பிப்பது கொஞ்சம் கடினம். ஏனெனில் நீங்கள் ஓய்வாக இருக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் எடுக்கின்ற முயற்சியே ஒரு குறிப்பிட்ட பதற்றத்தைக் கொடுத்துவிடும்.
.
அமெரிக்காவில் ஒரு புத்தகம் உள்ளது – நீங்கள் முட்டாள்தனமான புத்தகங்களை காண விரும்பினால் அதற்கான இடம் அமெரிக்காதான். அந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்த மாத்திரத்திலேயே என்னால் அதை நம்ப முடியவில்லை. அந்த புத்தகத்தின் தலைப்பு You must Relax ( நீங்கள் கண்டிப்பாக ஓய்வுடன் இருக்க வேண்டும்) இப்போது அங்கே must ( கண்டிப்பாக ) என்பது இருந்தால், உங்களால் எப்படி ஓய்வுடன் இருக்கமுடியும், அந்த கண்டிப்பாக என்பதே உங்களைப் பதற்றமாக்கி விடும். அந்த வார்த்தையே உடனடியாக உங்களிடம் பதற்றத்தை ஏற்படுத்திவிடும். அந்த கண்டிப்பாக என்னும் வார்த்தை, ஏதோ கடவுளிடம் இருந்து வந்த வார்த்தை போல பதற்றம் அடைந்துவிடுவீர்கள். ஒருவேளை, அந்தப் புத்தகத்தை எழுதியவர், ஓய்வாக இருப்பது என்பதைப் பற்றியும், ஓய்வாக இருப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் ஒன்றுமே அறியாதவர் போல் தெரிகிறது.
.
கீழைநாடுகளில் நாங்கள் ஓய்வாக இருப்பதில் இருந்து ஒருபோதும் தியானத்தை ஆரம்பித்ததில்லை. நாங்கள் விழிப்புணர்வில் இருந்துதான் தியானத்தை ஆரம்பிக்கிறோம். அதன்பிறகு, ஓய்வு என்பது அதுவாகவே, தானாகவே வந்து விடுகிறது. நீங்கள் ஓய்வை கொண்டு வர வேண்டியதில்லை. நீங்கள் அதைக் கொண்டு வர வேண்டுமெனில் அங்கே ஒருவித பதற்றம் இருக்கும். அது தானாகவே வரவேண்டும். அப்போதுதான் அது சுத்தமான ஓய்வு நிலையாக இருக்கும். மேலும் அது வரும்.
.
நீங்கள் விரும்பினால், நீங்கள் முதலில் ஓய்வாக இருப்பதில் இருந்தே கூட ஆரம்பிக்கலாம். ஆனால் அந்த அமெரிக்க அறிவுரையாளர்களைப் போல இருக்காதீர்கள். நமது உள் உலக அனுபவத்தைப் பொருத்தமட்டில் இந்த பூமியில் அமெரிக்கா மிகவும் குழந்தைதனமான இடத்தில் உள்ளது. ஐரோப்பா கொஞ்சம் வயதானதாக உள்ளது. ஆனால் கீழைநாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த அக ஆன்மாவின் தேடுதலில் வாழ்ந்து வருகிறது.
.
அமெரிக்காவானது நாடு என்று பார்த்தால் அதற்கு 300 வருடங்கள் மட்டுமே ஆகிறது. எனவே அந்த 300 வருடங்கள் என்பது பெரிய விஷயம் அல்ல. எனவே அமெரிக்காதான் இந்த உலகின் மிகப்பெரிய அபாயம். குழந்தைகளின் கையில் அணுஆயுதங்கள்…….. ரஷ்யா கொஞ்சம் அதிக பகுத்தறிவுடன் நடந்து கொள்ளும். அது ஒரு வயதான பழமை வாய்ந்த நாடு. மேலும் அதற்கு ஒரு நீண்ட வரலாற்றின் அனுபவமும் உள்ளது. அமெரிக்காவிற்கு என்று எந்த சரித்திரமும் கிடையாது. அங்குள்ள ஒவ்வொருவரும் அவர்களின் தந்தையின் பெயர், தந்தையின் முன்னோர்கள் பெயர் ஆகியவைதான் தெரியும். அவ்வளவுதான். அங்கே அவர்களின் குடும்ப மரத்தின் கிளைகள் நின்று விடும்.
.
அமெரிக்கா வெறும் கைக்குழந்தைதான். சரியாக சொன்னால் கைக்குழந்தை கூட அல்ல. அது இன்னும் கருவறையில்தான் உள்ளது. இந்தியா மற்றும் சீனாவில் உள்ள சமுதாயங்களோடு ஒப்பிடும்போது, அமெரிக்கா இப்போதுதான் கருவுற்றிருப்பது போன்றது. எனவே, இந்த மக்களிடம் அணு ஆயுதங்களைக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது.
.
இங்கே அரசியல், மத, சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள் உள்ளன. அவைகள் எல்லாம் உங்களை துன்புறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆகவே முதலில் ஓய்வுடன் இருப்பதில் இருந்து ஆரம்பிப்பது கடினமானது. அதனால்தான் கீழைநாடுகளில் நாங்கள் முதலில் ஓய்வுடன் இருப்பதில் இருந்து ஆரம்பிப்பதில்லை. ஆனால் நீங்கள் அப்படி ஆரம்பிக்க விரும்பினால், நீங்கள் எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று என்னிடம் சில கருத்துக்கள் உள்ளன. நான் மேலைநாட்டு மக்களிடம் பழகி வந்துள்ளேன். மேலும் அவர்கள் இந்த கீழைநாட்டிற்குச் சொந்தமானவர்கள் அல்ல என்பதையும், அவர்களுக்கு நமது கீழைநாட்டின் தன்னுணர்வு என்னும் சக்தியினைப் பற்றி தெரியாது என்பதையும் நான் அறிவேன். விழிப்புணர்வு என்று எதையும் ஒருபோதும் அறிந்திராத ஒரு வித்தியாசமான பாரம்பரியத்தில் இருந்து அவர்கள் வந்திருக்கிறார்கள்.
.
இப்படிப்பட்ட மேலைநாட்டினருக்காக, நான் Dynamic Meditation (டைனமிக் தியானம்) போன்ற தியானங்களை உருவாக்கி இருக்கிறேன். மேலும் தியான முகாம்களை நான் நடத்தி வந்தபோது, நான் ஜிப்ரிஷ் தியானம் மற்றும் குண்டலினிதியானம் ஆகியவற்றையும் பயன்படுத்தியுள்ளேன். எனவே, நீங்கள் ஆரம்பத்தில் ஓய்வாக தியானம் செய்வதை ஆரம்பிக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் மேற்கூறிய தியானங்களை நீங்கள் செய்ய வேண்டும். அவைகள் உங்களது மனதிலும், உடலிலும் உள்ள பதற்றத்தை எடுத்துவிடுவதால், அதன்பிறகு நீங்கள் ஓய்வுடன் இருப்பது சுலபம். நீங்கள் உங்களுக்குள் எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கி வைத்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. எனவே, அந்த விஷயங்கள்தான் உங்களின் பதற்றத்திற்கு காரணங்கள்.
.
நான் மலைப்பிரதேசங்களில் ஜிப்ரிஷ் தியானத்தை நடத்தும்போது ……….இந்த தியானத்தை நகரங்களில் அனுமதிப்பது கடினம். ஏனெனில் உங்களுக்குப் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அவர்கள் உடனே காவல்துறைக்கு தொலைபேசியில், எங்களது முழு வாழ்க்கையும் நாசமாகிக் கொண்டிருக்கிறது. என்று புகார் கொடுத்துவிடுவார்கள். அவர்களும் அவர்களுடைய வீடுகளில் இந்த தியானத்தைச் செய்தால், இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பைத்தியகாரத்தனத்திலிருந்து வெளிவந்து விடலாம் என்பதை அந்த பக்கத்து வீட்டு மக்கள் அறிய மாட்டார்கள். அவர்களது பைத்தியகாரத்தனமே முதலில் அவர்களுக்குத் தெரியாது.
.
ஜிப்ரிஷ் தியானம் என்பது ஒவ்வொருவரும் தங்களது மனதிற்குள் என்னவெல்லாம் வருகிறதோ, அதையெல்லாம் சத்தமாக வெளியே சொல்வதற்கு அனுமதிப்பதாகும். மேலும், இப்படி மக்கள் சம்பந்தம் இல்லாமல் முட்டாள்தனமாக உளருவதைக் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஏனெனில் அப்போது நான் மட்டுமே சாட்சியாக இருப்பேன். மக்கள் எல்லாவிதமான விஷயங்களையும் செய்து கொண்டிருப்பார்கள். மேலும், இதில் உள்ள ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால், நீங்கள் வேறு யாரையும் தொடக் கூடாது என்பதுதான். நீங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்கள் செய்யலாம் – சிலர் தலைகீழாக நின்றுகொண்டிருப்பார்கள், சிலர் தங்களது ஆடைகளை கழற்றி எறிந்துவிட்டு நிர்வாணமாக இருப்பார்கள், சுற்றிலும் ஓடிக் கொண்டும் இருப்பார்கள். அந்த ஒருமணி நேரமும் இப்படி இருப்பார்கள்.
.
அப்போது, ஒருவர் எனது முன்னால் உட்கார்ந்திருப்பது வழக்கம். அவர் ஒரு பங்குச் சந்தை தரகரோ அல்லது வேறு எதுவோ தெரியாது. ஆனால், தியானம் ஆரம்பித்த உடன், முதலில் அவர் சிரிப்பார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை நினைத்து அவரே சிரிப்பார். அதன்பின்னர், தனது தொலைபேசியை எடுத்து ஹலோ, ஹலோ…. என்று பேசுவார். அவரது ஓரக்கண்ணால் என்னையும் பார்த்துக் கொண்டே இருப்பார். நானும், அவரது தியானத்தை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து விடுவேன். அவர் தொலைபேசியில் அவரது பங்குச் சந்தை பங்குகளை விற்பார், வாங்குவார்….. அந்த ஒருமணி நேரமும் அவர் தொலைபேசியில் பேசிக் கொண்டே இருப்பார்.
.
ஒவ்வொருவரும் இதுவரை தாங்கள் உள்ளடக்கி வைத்திருந்த விநோதமான செயல்களைச் செய்வார்கள். அந்த தியானம் முடியும்போது, அதில் பத்து நிமிட ஓய்வு இருக்கும். மேலும், அப்போது அந்த பத்து நிமிடத்தில் அந்த மக்கள் முற்றிலும் களைப்பாக இருப்பதால் எந்தவிதமான முயற்சியும் இல்லாமல் கீழே படுத்துக் கிடப்பதைக் காண முடியும். எல்லா குப்பைகளும் வெளியேற்றப் பட்டு விட்டதால், அவர்களுக்குள் ஒரு சுத்தமான தன்மை உருவாகிவிடுவதால், அவர்கள் ஓய்வுடன் இருப்பார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பார்கள். ஆனால், உங்களால் அங்கு ஆயிரகணக்கானவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
.
மக்கள் என்னிடம் வந்து, அந்த பத்து நிமிடத்தை இன்னும் கொஞ்சம் நீட்டியுங்களேன். ஏனெனில் எங்களது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு ஓய்வு நிளையை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. அந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தது. விழிப்புணர்வு என்றால் என்னவென்று நாம் எப்போதாவது புரிந்துகொள்வோம் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததேயில்லை. ஆனால் அந்த விழிப்புணர்வு வருவதை எங்களால் உணர முடிந்தது. என்று கூறுவார்கள்.
.
ஜிப்பரிஷ் என்கிற இந்த வார்த்தை எங்கிருந்து வந்தது என்று நீங்கள் அறியாமல் இருக்கலாம். இது ஜாப்பர் என்னும் சூபி ஞானியின் பெயரில் இருந்து வந்தது. மேலும் அதுதான் அந்த ஞானியின் தியானமாகவும் இருந்தது. யார் அவரிடம் வந்தாலும், அவர்களிடம் அவர், கீழே உட்காருங்கள் இப்போது ஆரம்பியுங்கள் என்று கூறுவார். மேலும் மக்களுக்கும் அவர் என்ன அர்த்தத்தில் கூறுகிறார் என்று புரியும். அவர் ஒருபோதும் பேசியதில்லை. ஒருபோதும் சொற்பொழிவாற்றியதில்லை. அவர் வெறுமனே மக்களிடம் ஜிப்ரிஷ் தியானத்தை கற்பித்து வந்தார்.
.
உதாரணத்திற்காக, எப்போதாவது அவர் அந்த தியானத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று செய்து காட்டுவார். அரைமணி நேரம் அவர் எல்லாவிதமான அர்த்தமற்ற வார்த்தைகளையும், யாருக்கும் என்ன பாஷை என்று புரியாத ஒரு பாஷையில் பேசுவார். அது ஒரு பாஷை கிடையாது. அவர் மனதில் என்னவெல்லாம் வருகின்றதோ, அதையெல்லாம் அவர் பேசிக் கொண்டே போவார். அதுதான் அவரது ஒரே போதனையாக இருந்தது. மேலும், அதைப் பற்றி புரிந்தவர்களிடம் அவர், கீழே உட்கார்ந்து ஆரம்பியுங்கள் என்று கூறுவார்.
.
ஆனால் ஜாப்பர், அநேக மக்கள் முழுமையான அமைதியுடன் இருப்பதற்கு உதவினார். உங்கள் மனதால் எவ்வளவு நேரம்தான் பேசமுடியும் எனவே அது காலியாகிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு ஆழ்ந்த வெறுமை மேலும் அந்த ஆழ்ந்த வெறுமையில் விழிப்புணர்வு என்னும் ஒரு ஒளிச்சுடர். அது எப்போதும் இந்த ஜிப்பரிஷ்ஷால் சூழப்பட்டு தான் இருந்தது. இந்த ஜிப்ரிஷ்ஷை நீங்கள் வெளியே எடுத்துவிட வேண்டும். அதுதான் உங்களின் விஷம்.
.
இதே உண்மை, உங்களது உடலுக்கும் பொருந்தும். உங்களது உடலிலும் பதற்றங்கள் உள்ளன. உங்களது உடல் எந்தவிதமான அசைவுகளைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறதோ, அந்தவிதமான அசைவுகளை வெறுமனே செய்ய ஆரம்பியுங்கள். நீங்கள் அதை செய்யும்படி தூண்டக்கூடாது. அது நடனமாட விரும்பலாம். அது குதிக்க விரும்பலாம், அது ஓடுவதற்கு விரும்பலாம், அது தரையில் உருள விரும்பலாம், எதுவாக இருந்தாலும் நீங்களாக அதைச் செய்யக் கூடாது. நீங்கள் வெறுமனே அதைச் செய்வதற்கு அனுமதியுங்கள். உங்களது உடலிடம், நீ சுதந்திரமடைந்துவிட்டால் என்னவெல்லாம் விரும்புகிறாயோ அதையெல்லாம் செய் என்று மட்டும் கூறிவிடுங்கள். அப்போது நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். அடக் கடவுளே, இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் எனது உடல் செய்வதற்கு ஆசைப் பட்டுள்ளது. ஆனால், நான் அதை எனக்குள் அடக்கி வைத்திருக்கிறேன். மேலும், அதுதான் எனது உடல் முறுக்கேறி இருப்பதற்கான காரணம். என்று அறிந்து ஆச்சரியப்படுவீர்கள்.
.
ஆகவே இரணடு வகையான பதற்றங்கள் இருக்கின்றன. உடல் பதற்றம், மற்றும் மனப்பதற்றம். நீங்கள் ஓய்வுடன் தியானம் செய்வதற்கு முன்பு இந்த இரண்டும் வெளியேற்றப்பட வேண்டும். அப்போதுதான் விழிப்புணர்வு கொண்டு வரப்படும். ஆனால், விழிப்புணர்வில் இருந்து ஆரம்பிப்பது ரொம்பவும் சுலபமானது. அதிலும் குறிப்பாக, மிகவும் எளிமையான விழிப்புணர்வு என்னும் செயல்முறையைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் அதிலிருந்து ஆரம்பிப்பது நல்லது. நாள் முழுவதும் நீங்கள் சில விஷயங்களில் அதை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறீர்கள். போக்குவரத்து நெரிசலிலும் கூட நீங்கள் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் பைத்தியகாரத்தனமாக உள்ளது.
.
சில தினங்களுக்கு முன்பு, நான் ஏதென்ஸ் நகரத்தைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேன். அங்கே டாக்ஸி ஓட்டுபவர்களுக்காக அரசு ஏழு நாட்கள் கொண்ட ஒரு சிறப்பு போட்டியை நடத்தியது. அதில் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதில் மிகச் சிறந்த மூன்று ஓட்டுநர்களுக்கு, அவர்கள் தங்கக் கோப்பைகளை கொடுப்பதாக அறிவித்தனர். ஆனால், அவர்கள் ஏதென்ஸ் நகர் முழுவதிலும் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே காவல்துறையினர் மிகுந்த கவலை அடைந்தனர். அந்த ஏழு நாட்களும், கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டது. எனவே, கடைசி நாளில், எப்படியாவது மூன்று ஓட்டுநர்களை அவர்கள் முற்றிலும் பின்பற்றாவிட்டாலும் கூட அவர்களுக்கு அந்தப் பரிசை கொடுப்பதற்கு நினைத்தனர்.
.
ஒரு ஆள் மிகவும் சரியாக போக்குவரத்து விதிகளை பின்பற்றி ஓட்டினார். அவரைக் கண்டவுடன் காவல்துறையினர் சந்தோஷம் அடைந்தனர். அப்போது அவருக்கு அந்த கோப்பையைக் கொடுப்பதற்காக காவல்துறையினர் ஓடினார்கள். ஆனால் காவல்துறையினர் அவரை நோக்கி ஓடி வருவதைப் பார்த்த அந்த மனிதர் சிவப்பு விளக்கு எரிந்தாலும்கூட டாக்ஸியை ஓட்டிக் கொண்டு ஓடியே போய்விட்டார். யார்தான் தேவையில்லாமல் சங்கடத்தில் மாட்டிக் கொள்ள விரும்புவார்கள் காவல்துறையினர் பொறு பொறு என்று கத்தினார்கள். ஆனால் அவர் அதை கவனிக்கவில்லை. அவர் உடனடியாக சிவப்பு விளக்கிற்கு எதிராக ஓட்டிக் கொண்டு போய்விட்டார். மேலும், இரண்டு மனிதர்களிடமும் அந்த காவல்துறையினர் முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த காவல்துறையினரைப் பார்த்தவுடன் யாரும் நிறுத்தவில்லை. எனவே ஏழு நாட்கள் முயற்சிக்குப் பிறகு அந்த மூன்று பரிசுகளும் இன்னமும் காவல்துறையினரின் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. மேலும் ஏதென்ஸ் நகரமோ எப்போதும் போல மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கிறது……
.
உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் விழிப்புணர்வை பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறீர்கள். ஆனால் அதை வெளியில் உள்ள விஷயங்களில் மட்டுமே பயன்படுத்துகிறீர்கள்.
.
அதே விழிப்புணர்வைத்தான் நீங்கள் உங்களது மனதிற்குள் நடக்கின்ற போக்குவரத்து நெரிசலுக்கும் பயன்படுத்த வேண்டும். நீங்கள் கண்களை மூடியவுடன், அங்கே எண்ணங்கள், உணர்ச்சிகள், கனவுகள், கற்பனைகள் இப்படி ஏகப்பட்ட போக்குவரத்து உள்ளே நடக்கிறது. எல்லா வகையான விஷயங்களும் வெளிச்சம் போட ஆரம்பிக்கின்றன. நீங்கள் வெளி உலகில் உள்ள போக்குவரத்திற்கு என்ன செய்தீர்களோ அதே செயலை சரியாக உங்களது உள் உலகத்திலும் செய்யுங்கள். அப்போது நீங்கள் ஒரு சாட்சியாக மாறிவிடுவீர்கள். மேலும் இதை நீங்கள் ஒருமுறை ருசித்துவிட்டால் போதும், சாட்சியாக இருப்பதில் கிடைக்கின்ற இந்த மகிழ்ச்சி மிகவும் பெரியதாகவும், அடுத்த உலகத்தை சேர்ந்ததாகவும் இருப்பதால், நீங்கள் இன்னும் அதிகமான அளவு உள்ளே போவதற்கு விரும்புவீர்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் மேலும் மேலும் உங்களுக்குள் செல்ல விரும்புவீர்கள்.
.
இதற்கு எந்த ஆசனத்தில் உட்கார வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. எந்த கோவிலுக்குப் போக வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. அல்லது தேவாலயத்திற்கோ யூதமத கோவிலுக்கோ போக வேண்டியதில்லை. பொதுமக்கள் பயணம் செய்கின்ற ஒரு பஸ்ஸில் உட்கார்ந்திருக்கும்போதோ அல்லது ரயில் வண்டியில் பயணிக்கும்போதோ நீங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லாதபோது வெறுமனே உங்களது கண்களை மூடிக் கொள்ளுங்கள். அப்படி மூடிக் கொள்வதால் வெளியில் பார்த்துக் கொண்டே செல்வதன்மூலம் உங்களது கண்கள் களைப்படைவதில் இருந்து அது பாதுகாக்கும். மேலும் அது உங்களுக்குள் நீங்கள் கவனிப்பதற்கு போதுமான நேரத்தையும் கொடுக்கும். அத்தகைய தருணங்கள் மிகவும் அழகான அனுபவங்கள் ஏற்படுகின்ற தருணங்களாக ஆகிவிடும்.
.
மேலும், இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உங்களது விழிப்புணர்வு வளர்ச்சி அடையும்போது உங்களது தனிமனிதப் பண்பு மாற்றம் காண ஆரம்பிக்கும். விழிப்புணர்வு அற்ற நிலையில் இருந்து விழிப்புணர்வு உள்ள நிலைக்குச் செல்வதுதான் மிகப் பெரிய தாவுதல் ஆகும்.

Sunday 20 August 2017

How to String Rose Petals garland || Easy Method to make garland Rose Pe...

சரவண பவன் கேசரி|ஹோட்டல் கேசரி|கல்யாண கேசரி செய்வது எப்படி| வாங்க சமைக்கல...

Kozhukattai making guide | Sweet pooranam(2stuffing) modak|Different sha...

Aloe Vera இன் 4 எளிய அழகு குறிப்புகள்

1 வாரம் தடவினால் முடி பயங்கர நீளமாகி கட்டிங் பண்ண வேண்டியது இருக்கும் | ...

Nellikkai Juice / GooseBerry | Amla Juice in Tamil / நெல்லிக்காய் ஜூஸ்

26.12.2016 Chennai T.Nagar.Thiru Arutpa Music Concert. Thiru Malaiyur Sa...

உங்களது பிரச்னைகள் அணைத்து தீர -Siththarkal Manthiram- Sithar- sithargal...

மூளையை செயல்பட வைப்பது எப்படி?

மாந்திரீகம்: குரு வணக்கம்

மாந்திரீகம்: குரு வணக்கம்:                                     குரு வணக்கம் இயம்புவதும்   ஆதார   இறைவானீயே இதுவொன்றே   வழிகாட்டும் குருவும்நீயே நயம...

Vallalar Song - Enna Paavam Seitheno - Mazhaiyur Sadasivam

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்கள...

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்"!: அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்கள...: அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றி...

சூரிய கிரகண நேரத்தில் சொல்லவேண்டிய பண வசிய மந்திரம்

சூரிய கிரகண நேரத்தில் சொல்லவேண்டிய பண வசிய மந்திரம்

Sadhananda Swamigal: ஹோரைகள் தரும் பலன்கள்

Sadhananda Swamigal: ஹோரைகள் தரும் பலன்கள்: -------------------------- - சூரிய ஹோரை: ************** செய்யக்கூடியவை: -------------------------- இந்த ஹோரையில் நாம் அரசு தொடர்பான அத...

ஹோரை அட்டவணை

 

ஒரு நாளின் 24 மணியில் ஒவ்வொரு மணிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செலுத்தும். நவக்கிரகங்களில் ராகு, கேது என்ற சாய கிரகங்களுக்கு இதில் இடமில்லை. ஆக மீதமிருக்கும் சப்த (ஏழு) கிரகங்கள் மட்டுமே மாறி மாறி தொடர்ச்சியாக தமது ஆதிக்கத்தை செலுத்துகின்றன. 
1. சூரியன், 2. சந்திரன், 3. செவ்வாய், 4. புதன், 5. வியாழன், 6. வெள்ளி, 7. சனி ஆகிய ஏழு கிரகங்களும் தங்களுக்குள் முறையான ஒரு அலைவரிசையில் மாறிமாறி ஆதிக்கம் செலுத்துகின்றன. 
வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதி ஆகும். அவை, ஞாயிற்றுக்கிழமைக்கு சூரியன் அதிபதி, திங்கள்கிழமைக்கு சந்திரன் அதிபதி. செவ்வாய்க் கிழமைக்கு செவ்வாய் அதிபதி,
புதன் கிழமைக்கு அதிபதி புதன், வியாழக்கிழமைக்கு அதிபதி குரு, வெள்ளிக் கிழமைக்கு அதிபதி சுக்கிரன், சனிக்கிழமைக்கு அதிபதி சனி
கிரகம் ஆகும். 

ஒரு நாளின் அதிபதியாக வருகின்ற அந்த கிரகமே அந்த நாளின் முதல் ஹோரைக்கு அதிபதி. இது சூரிய உதயத்திலிருந்து முதல் ஒரு மணிநேரமே முதல் ஹோரை. அதிலிருந்து ஒவ்வொரு மணிநேரமும் ஒரு ஹோரையாகக்  கருதப்படும். உதாரணமாக, வியாழக்கிழமை அன்று முதல் ஹோரைக்கு அதிபதி குரு.
இரண்டாவது ஹோரையின் அதிபதியை கணக்கிட வியாழக்கிழமைக்கு முந்தைய நாளான புதன்கிழமையை விடுத்து, அதற்கும் முந்தைய நாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய் கிரகம்தான் வியாழக்கிழமையின் இரண்டாவது ஹோரைக்கு அதிபதி. 
அடுத்து செவ்வாய்க்கிழமைக்கு முந்தைய நாள் திங்கள்கிழமையை விடுத்து, அதற்கும் முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையின் அதிபதியான சூரியன்தான்  முன்றாவது. 
ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாள் சனிக்கிழமையை விடுத்து, அடுத்து வரும் வெள்ளிக்கிழமையின் அதிபதியான சுக்கிரன்தான் நான்காவது.


வெள்ளிக்கிழமைக்கு  முந்தைய நாளான வியாழக்கிழமையை விடுத்து, அடுத்து வரும் புதன்கிழமையின் அதிபதியான புதன்தான் ஐந்தாவது.  
புதன்கிழமைக்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமையை விடுத்து, அடுத்து வரும் திங்கள்கிழமையின் அதிபதியான சந்திரன்தான் ஆறாவது.  
திங்கள்கிழமைக்கு  முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையை விடுத்து, அடுத்து வரும்  சனிக்கிழமையின் அதிபதியான சனிதான் ஏழாவது ஹோரை.
அப்படிப் பார்க்கும்போது 1. குரு 2. செவ்வாய், 3. சூரியன், 4. சுக்கிரன், 5. புதன், 6. சந்திரன், 7. சனி ஹோரை என்று வரும்.
 8-வது மணி முதல் மீண்டும் குரு ஹோரை துவங்கும். இப்படி தொடர்ச்சியாக  வந்து மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் ஹோரையாக சுக்கிர ஹோரையே வரும்.
இப்படி வருவதில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய ஹோரைகள் சுப பலன்களைத் தரக்கூடியதாகும். சூரியன் மத்திம பலனை தரவல்லதாகவும் சனி, செவ்வாய்  தீங்கு விளைவிக்கக்கூடியதாகவும் அமையும்

Ammani kozhukattai ( Tamil ) | Mia's Kitchen

Ammani kozhukattai ( Tamil ) | Mia's Kitchen

Ammani kozhukattai ( Tamil ) | Mia's Kitchen

ஆவணி ஞாயிறு விரதத்தின் ரகசியம் என்ன.?

ஆஹா இது கிராமத்து சமையல் village cooking

Solar eclipse don't do these things | 21:08:2017 9 am - 2:15 pm சூரிய கி...

ஆவணி மாதம் ஐஸ்வர்ய மாதம்

எதிர்பாராத பண வரவு வர மந்திரம்

கடன் சுமையிலிருந்து வெளிவர மந்திரம்

சூரிய கிரகண நேரத்தில் சொல்லவேண்டிய பண வசிய மந்திரம்

Saturday 19 August 2017

மனத்தின் ஆற்றல்கள்(அற்புதமான மனம்)சொற்பொழிவு-SWAMI VIVEKANANDA

அருக்காணி கவுண்டச்சி: பேரழகி சித்தூர் ராணி பத்மினியின் தியாகம்!

அருக்காணி கவுண்டச்சி: பேரழகி சித்தூர் ராணி பத்மினியின் தியாகம்!: புறநானூற்றில் கணவன் சிதையில் தீக்குளித்த பூதப் பாண்டியன் தேவியைக் கண்டோம். சோழ மன்னன் கிள்ளிவளவன் மனைவியர் தீப்பாய்ந்து இறந்ததை...

Lucky Stone for Varmars

Lucky Stone for Varmars

மோடியை இந்தியில் கலாய்க்கும் லியோனி... Dindigul Leoni Ultimate Comedy Sp...

vasthu tips tamil/ஒரு மனையை தேர்வு செய்யும் முன் பார்க்க வேண்டிய வாஸ்து ...

ஒவ்வரு நாளும் சூப்பராக இருக்கணுமா ?

ஒவ்வரு நாளும் சூப்பராக இருக்கணுமா ?

சமையல் ரகசியங்கள் By Ramanathan C : பயனுள்ள 138 வீட்டு தகவல்கள்

சமையல் ரகசியங்கள் By Ramanathan C : பயனுள்ள 138 வீட்டு தகவல்கள்:  1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம். 2. வீட்டில் எறும்புப் புற்று இருந்...

தோசையை கல்லில் இருந்து ஒட்டாமல் எடுக்க...

தோசையை கல்லில் இருந்து ஒட்டாமல் எடுக்க...

சமையல் ரகசியங்கள் By Ramanathan C : சுண்டைக்காய்த் துவையல்

சமையல் ரகசியங்கள் By Ramanathan C : சுண்டைக்காய்த் துவையல்: sundaikai thuvayal சுண்டைக்காய்த் துவையல் சுண்டைக்காய், குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. வயிற்றில் புழு இருந்தால் ...

தோசை கல்லில் ஒட்டாமல் வர வேண்டுமா? இதோ சில டிப்ஸ்!!

Tamil Horoscope Matching | Nakshatra Match or Star Match | 10 Poruthams Online | Porutham for Marriage

Tamil Horoscope Matching | Nakshatra Match or Star Match | 10 Poruthams Online | Porutham for Marriage

Tamil Horoscope Matching | Nakshatra Match or Star Match | 10 Poruthams Online | Porutham for Marriage

Tamil Horoscope Matching | Nakshatra Match or Star Match | 10 Poruthams Online | Porutham for Marriage

Bal Ganesha - Ganesh The Elephant Headed God - Children Animated Movie

மூக்கில் இருக்கும் அசிங்கமான வெண்புள்ளிகளைப் போக்க வேண்டுமா? அப்ப இத செய...

Friday 18 August 2017

தமிழ் சித்த மருத்துவக் கட்டுரைகள், எளிய மருத்துவம், அருண் சின்னையா - Aadhavan Siddhashram (P) Ltd.,: பப்பாளி சாலட்

தமிழ் சித்த மருத்துவக் கட்டுரைகள், எளிய மருத்துவம், அருண் சின்னையா - Aadhavan Siddhashram (P) Ltd.,: பப்பாளி சாலட்: தேவையானவை: பப்பாளி – ஒன்று (செங்காய் பதத்தில் தேர்வு செய்யவும்) முளைகட்டிய பச்சைப் பயறு – 50 கிராம் எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்...

முருங்கைகீரை சூப் | Rusikkalam Vanga | 24/05/2017 | Puthuyugam TV

72 மணிநேரத்தில் கல்லீரலை சுத்தம் செய்து உடல் எடையைக் குறைக்க clean liver

Thursday 17 August 2017

பொன் மொழிகள்: உலகத் தலைவர்கள், அறிஞர்கள் பொன்மொழிகள்

பொன் மொழிகள்: உலகத் தலைவர்கள், அறிஞர்கள் பொன்மொழிகள்: தோல்வியின் அடையாளம் தயக்கம்! வெற்றியின் அடையாளம் துணிச்சல்! துணிந்தவர் தோற்றதில்லை!! தயங்கியவர் வென்றதில்லை!! எங்கே விழுந்தாயென பார்க்...
சாணக்கியன் தந்த தந்திரம்
சாணக்கியன் தந்த
மனிதனாக பிறந்து வளரும் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் எப்ப‍டி யாவது முன்னேறி வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ண‍ம், லட்சியம், நோக்க‍ம் இருந்துகொண்டே தான் இருக்கும். ஆனால் வாழ்க்கையில் அவன் சந்திக்கும் பிர ச்ச‍னைகளால் சோர்ந்து, துவண்டு, இறுதியில் அவனால் எதையுமே சாதிக்க‍ முடியாமல் இறந்தே விடுகிறான். அவர்களுக்காகவே அவர்களது முரண்பாடுள்ள‍ வாழ்க் கையில் அவர்கள் முந்திச்செல்ல முப்ப‍து த‌ந்திர குறிப்பு களை அர்த்த‍ சாத்திரம் என்ற நூலில் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளான். இதோ அந்த‌ அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள் பற்றிப் பார்ப்போம்.
1. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களு டன் வாழ்வது ஒருகொடிய விஷப்பாம்புடன் வாழ் வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.
2.ஒருவன் தன்னுடைய கஷ்டகாலத்திற்கு தேவையான பணத்தைமுன்பே காக்க வே ண்டும். வேலைக்காரனை வேலைசெய்யும் போதும் உறவினர்களை கஷ்டம் வரும்போ தும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், துரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
3.கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்க ளை ஒரு நாளும் நம்ப கூடாது .
4. ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். அறிவுள்ளவன் தன் குழந்தை களுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித்தருவான். ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல் லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடு படாமலும் செல்ல வேண்டாம்.
5. நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
6. உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தால் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள். கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால்சுரக்கும், அது தாயைபோன்றது எங்கு சென் றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.
7. கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதிஉள்ளவனுக்கு கொடுக்கும் பரிசுபயனற்ற து, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் 6 சுவை உணவு பயன ற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
8. காமத்தைவிட கொடியநோய் இல்லை. அறியாமை யைவிட கொடிய எதிரி இல்லை. கோபத்தைவிட கொடி ய நெருப்பு இல்லை, எவன் ஒருவனுக்கு செல் வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர் கள்உண்டு. பணம் இருப்பவனைத்தான் உலகம் மனித னாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி , பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
9. பிறவி குருடனுக்கு கண்தெரிவதில்லை, அதுபோல் காமம் உள்ளவனுக் கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி ( கெட்டவிசயம்) தெரியாது, பணம் சம்பாதிக்க வேண் டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியா து. பேராசைகொண்டவனை பரிசு கொடுத்தும், பிடி வாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
10. சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியி டம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
11.1 சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
12.2 கொக்கு… ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்துநிற்கும், அதுபோல் அறிவாளி ஒருகாரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான். களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுபட்டிருக்கும். ஆகிய மூன் றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷய ங்கள் ஆகும்.
13. விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதி த்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
14. இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவை யான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
15. கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாகஇருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர் த்தல் ஆகிய 6குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ளவேண்டும். ஒருவன் மேலே சொன்ன 20 விஷயங் களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
16.அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மனவிரக்தியையும், தன் மனைவியின் தீய நடத் தையும், பிறரால் ஏற்படும் கடும்சொற்களையும் வெளி யில் சொல்லமாட்டான். ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமானமுறையில் வரும் வருமா னம் ஆகியவற்றில் திருப்தி அடையவேண்டும். ஆனால் கற்கும் கல்வி, தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையா மல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
17. யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100அடி விலகி இருங் கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.
18. எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடி வாதமாக இருக்காதீர். வளைந்துநெளிந்து வாழ கற்றுக் கொ ள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
19. அன்னம்.. நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாதுபோனால் வேறு இடத்திருக்குசென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
20. சிங்கத்தின் குகைக்குள் சென்றால் உங்களுக்குமான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங் க வேண்டும். அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,
21. வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்க ளை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.
22.அழகு, ஒழுக்கம்இல்லாத செயல்களால் கெட்டுபோகும், நல்ல குலத்தி ல் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டுபோகும். முறையாக கற்காத கல்வி கெட்டுபோகும். சரியாக பய ன்படுத்தாத பணம் கெட்டு போகும். கல்வி கற்றவனை மக்கள் மரியா தை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கி ன்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.
23.எருக்கம்பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீனான மனிதன் ஆவான்.
24. மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவ ன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய 7 நபர்களும் அயர்ந் து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இரு ந்து உடனடியாக எழுந்து செயல்படவேண்டும். பாம்பு, அரசன், புலி, கொட்டும் தேனீ, சிறுகுழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .
25. பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என் றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவ னாகிறான். கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரிஆவா ன், தவறுசெய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆ வான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக் கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
26. கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாத வன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.
27. வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ் வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத் தடியில் வாழ்வது மிகவும் மேலானது. பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் கா லையில் ஒவ் வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலை ப்படாமல் வாழ வேண்டும்.
28. பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உரு வத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
29. வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வள ர்த்தாலும் அதன் கசப்பு தன்மைமாறாது. அதுபோல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தா லும் அறிவு வராது. சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அதுபோல் எத்த னைமுறை புனிதநதிகளில் குளித்தாலும் மனத்தூய் மை வராது.
30.கல்வி கற்கும் மாணவன் இந்த 8 விஷயங்களில் கட்டுப் பாடுடன் இருக்கவேண்டும். அவை காமம், கோபம், பேரா சை , இனிப்புஉணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை. உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்றுவரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்த னை பாராட்டு கிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளு ங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உண்பதில்லை, யாரோஒருவன் ஒருநாள் அவ ற்றை அழித்து தேனை தூக்கிச் செல்கிறான். அதுபோல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல் வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களையும் தர்மங்களையும் செய்யுங்கள்