SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Thursday 25 February 2016

கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய்

பலருக்கு தெரிந்தது தான் , தெரியாத சிலருக்காக பகிரவும் (மனமிருந்தால்)

உங்களது உறவினர், நண்பர் யாரேனும்
கிட்னி ஃபெயிலியர், புற்றுநோய் உள்ளிட்ட எந்தவொரு கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தாலும்
அவர்களை கீழ்கண்ட முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள்.
இங்கு நூறு ரூபாய் மட்டுமே வசூலிப்பார்கள்.
எந்த நிலையில் இருந்தாலும் 100% குணப்படுத்தி விடுகின்றனர்.
முகவரி :- N.S.நாராயணமூர்த்தி,
நரசிபுரா, அனந்தபுரா,
சகாரா வழி, சிமோகா,
கர்நாடகா .
போன் -08183258033
முடிந்த வரை இதை பகிர்ந்து பலரது உயிர்காக்க உதவுங்கள்.
மேலும் இது சம்மந்தமான வீடியோ பதிவைப் பார்க்க கூகுளில் Shimoga cancer cure என்று டைப் செய்தால், முழு விபரமும் கிடைக்கப்பெறுவீர்கள்.
Youtubeல் http:// http://www.youtube.com watch?v=76819p5O IJY


புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க


வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?

நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார்!

Monday 22 February 2016

செட்டில்மெண்ட் வாங்கும் போது அதில் என்ன எழுதியிருக்கிறது என்று படியுங்கள். Full and Final Settlement of all dues outstanding என்கிற வாசகமும் all legal cases & other actions taken by the bank will be withdrawn என்கிற வாசககும் கட்டாயம் இருக்கவேண்டும். அது இல்லாமல் பேப்பரை வாங்காதீர்கள். செட்டில்மெண்ட் தாளிலேயே, நீங்கள் ஒப்புக் கொண்ட பணமும், அதன் தவணைகளும் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கவேண்டும். அசல் உங்களுக்கும், நகல் வங்கிக்குமாக இரண்டு பிரதிகளில் உங்கள் கையெழுத்தும், வங்கி அதிகாரியின் கையெழுத்தும் இருக்க வேண்டும்.

இதிலிருந்தெல்லாம் தப்பிக்க ஒரு வழி இருக்கிறது. ரூ. 1.75 தட்சணையும், யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று உறுதிப்பிரமாணமும் எடுத்தால் தனியாகச் சொல்லிக் கொடுக்கிறேன் ;) மெக்சிகோ சலவைக்காரி ஜோக் போல இதைப் பொதுவில் சொல்ல முடியாது.

இதுநாள் வரை, பணம் பற்றியும், நுட்பம் பற்றியும் கிட்டத்திட்ட 6 மாதங்களாக எழுதியவை அனைத்தும் என்னுடைய சொந்த அனுபவம். நேரடியாக அனுபவித்தது, நண்பர்களின் வாழ்வில் பார்த்தது, பாதித்தது, படித்தது, உணர்ந்தவைதான்.

பைனல் செட்டில்மெண்ட் என்பது இந்தக் கட்டுரைக்கான தலைப்பு மட்டுமல்ல, இப்போதைக்கு இந்தப் பகுதிக்கும்கூட. இப்போது விடைபெறுகிறேன். மீண்டும் வேறு உரையாடலை ஆரம்பிப்போம். நன்றி. வணக்கம்.
  1. கழிச்சல்

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

    'அமீபியாஸிஸ் என்டமீபா ஹிஸ்டலிட்டிகா’ என்ற குடல்வாழ் தொற்றுக் கிருமியால், வயிற்றுப்போக்குடன் ரத்தம் கலந்து வெளியேறுவதை, 'கழிச்சல்’ அல்லது 'ரத்த சீதபேதி’ என்கிறோம்.
    காரணங்கள்:
    சுகாதாரமற்ற சூழலில் வசித்தல், மனிதக் கழிவுகள் உணவுப் பொருட்களில் கலத்தல், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய கிருமித் தொற்றுள்ள பொருட்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றால், கழிச்சல் ஏற்படுகிறது.
    அறிகுறிகள்:
    வயிற்று வலியுடன் மலம் கழித்தல், நாளன்றுக்கு 3 முதல் 8 முறை மலம் கழித்தல், மலத்துடன் சளி மற்றும் ரத்தம் கலந்து வெளிப்படுதல், சோர்வு, ஆசன வாய்ப் பகுதியில் வலி ஏற்படும். நோய் தீவிரமான நிலையில் ரத்தத்துடன் நீர் நீராக 10 முதல் 20 முறை கழிதல், காய்ச்சல், வாந்தி போன்றவையும் ஏற்படும்.
    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
     அவரை இலைச் சாற்றுடன் கற்கண்டு சேர்த்துக் கிளறி கொட்டைப்பாக்கு அளவு உண்ணலாம்.
     லவங்கைப் பட்டை, சுக்கு, ஏலரிசி சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
     கீழாநெல்லியின் இலைக் கொழுந்தை அரைத்து கொட்டைப் பாக்களவு மோரில் கலந்து உண்ணலாம்.
     கால் டம்ளர் கொள்ளு இலைச்சாறுடன், காசுக் கட்டி இரண்டு கிராம் சேர்த்து அருந்தலாம்.
    கோரைக் கிழங்கையும், இஞ்சியையும் தேன்விட்டு அரைத்து, சுண்டைக்காய் அளவு சாப்பிடலாம்.
     அசோகப்பூவின் பொடி கால் ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
     அத்திப் பிஞ்சு, வேலம் பிஞ்சு, மாம்பட்டை கைப்பிடி அளவு எடுத்து, வாழைப்பூச் சாறு இரண்டு டம்ளர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்
     காட்டத்திப்பூ, வில்வ வேர், யானைத் திப்பிலி, இவற்றைப் பொடித்து, கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.
     அதிவியம், கடுக்காய்ப்பூ, சிறுநாகப்பூ, போஸ்தக்காய் - இவற்றை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி அரை டம்ளராக வற்ற வைத்து அருந்தலாம்.
     இலந்தை இலையை அரைத்து, சர்க்கரை கலந்து சுண்டைக்காய் அளவு உண்ணலாம்.
     விளாம் பிசினைப் பொடித்து, அதில் கால்ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.
     வில்வப் பிஞ்சை அரைத்து, கால் ஸ்பூன் எடுத்துத் தயிரில் கலந்து உண்ணலாம்.
     மாம்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து மோரில் உண்ணலாம்.
     மாதுளம் பிஞ்சு, ஏலக்காய், கசகசா, குங்கிலியத்தூள் சம அளவு எடுத்து பொடித்து கால் ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.
     புளியம்பட்டைத் தூள் ஒரு பங்கு சீரகம், 3 பங்கு சேர்த்து சம அளவு பனங் கற்கண்டு சேர்த்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
     வெண்டைக் காய்ப் பிஞ்சு 100 கிராம் எடுத்து வெட்டி ஒரு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்ற வைத்து, சர்க்கரை கலந்து உண்ணலாம்.
     பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.
    உணவு சேர்க்க வேண்டியவை:
    அன்னாசிப் பழம், பப்பாளி, பீட்ரூட். கேரட், பூண்டு, தர்பூசணி விதை, எலுமிச்சை, ஆரஞ்சு, மோர், தயிர்
    தவிர்க்க வேண்டியவை:
    காபி, மது பானங்கள், மாவுப் பொருட்கள், காரமான உணவுகள், சுகாதாரமற்ற அனைத்து உணவுகள்.

    43
  2. தலைவலி

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

    தலைவலி நோய்க்கான அறிகுறி, கம்ப்யூட்டரையே உற்றுப்பார்ப்பது, காற்றோட்டம் இல்லாத அறையில் இருப்பது, சில வாயுக்களை நுகர்வது போன்ற பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். வலியானது, தலையின் இரு பக்கங்களின் பின் பகுதியில் ஆரம்பித்து முன்பக்கம் பரவும். மந்தமாகவோ, தலையைச் சுற்றி இறுக்குவது போன்றோ காணப்படும்.
    சீஸ், சாக்லேட், எம்.எஸ்.ஜி (மோனோ சோடியம் குளுட்டோமைட்) சேர்க்கப்பட்ட உணவுகள் உண்ணுவதால் 'ஒற்றைத் தலைவலி’ (Migraine) ஏற்படுகிறது. முதலில் தலையின் ஒரு புறத்தில் 'தெறிப்பது’ போல ஏற்பட்டு, தலை முழுவதும் பரவும். தலைவலி வருவதற்கு முன்பே அறிகுறி (Aura) தோன்றும்.
    இதைத் தவிர சைனஸ் பிரச்னையாலும், மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பும், காய்ச்சலினாலும் தலைவலி வரலாம். மூளைக் கட்டி, மூளை நோய்கள், பக்கவாதம், மூளை ரத்தக் குழாய்களின்அமைப்பில் குறைபாடுகள், உயர் ரத்த அழுத்தம் போன்ற முக்கியமான நோய்களின் வெளிப்பாடாகவும் தலைவலி காணப்படுகின்றது.
    தலைவலிக்கு அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சரி செய்வதாலும், சரியான நேரத்தில் உணவு உண்ணுதல், சரியான நேரத்தில் தூங்குதல், மதுபானம், புகைபிடிப்பதைத் தவிர்த்தல், மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துகொள்ளுதல் போன்றவை தலைவலிக்கான சாத்தியங்களைக் குறைக்கும்.
    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
     சித்தரத்தை, கசகசா சம அளவு எடுத்துக் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலந்து உண்ணலாம்.
    1 கிராம் வெள்ளை சங்குபுஷ்பத்தின் வேர்ப்பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.
     புதினா இலைப்பொடி, ஓமம் சம அளவு கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.
     அவரை இலைச் சாற்றுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறி அதில் கொட்டைப்பாக்களவு உண்ணலாம்.
    நன்னாரி வேர், வெட்டிவேர் இவற்றை சம அளவு சேர்த்து பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்துக் கற்கண்டு சேர்த்து உண்ணலாம்.
     கொத்தமல்லி விதை, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து, நீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம்.
     சீரகம், சுக்கு, ஏலம், நெல்லி வற்றல் சம அளவு எடுத்துப் பொடித்து, சர்க்கரை சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
     கருஞ்சீரகப் பொடியுடன் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு உண்ணலாம்.
     அமுக்கரா, வால்மிளகு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் பாலில் கலந்து பருகலாம்.
     கழற்சிப் பருப்பு, சுக்கு சம அளவு பொடித்து அதில் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்ந்து உண்ணலாம்.
     ஒரு டம்ளர் மாதுளம் பழச்சாறுடன், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து பருகலாம்.
    வாய்விடங்கம், தும்பை இலை சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்துக் கற்கண்டு சேர்த்து உண்ணலாம்.
    வெளிப் பிரயோகம்:
     கொத்துமல்லி விதையை சந்தனத்துடன் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
     சுக்கை, தாய்ப்பால் விட்டு அரைத்துப் நெற்றியில் பூசலாம்.
     நந்தியாவட்டைப் பூவை நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம்.
    குங்குமப்பூவை தாய்ப்பாலில் அரைத்து நெற்றியில் பூசலாம்.
    கிராம்பை நீர்விட்டு மையாக அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டிலும் பூசலாம்.
     சாம்பிராணி தைலத்தைப் பூசலாம்.
     சித்திர மூல வேரைப் பஞ்சு போல இடித்து நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சித் தலைக்கு தடவலாம்.
     செம்பைப் பூவை நல்லெண்ணயில் விட்டுக் காய்ச்சித் தலைக்குத் தேய்க்கலாம்.
    வால் மிளகைப் பன்னீரில் அரைத்து நெற்றியில் பூசலாம்.
    சேர்க்கவேண்டியவை:
    பிளம்ஸ், மாதுளை, அன்னாசி, கீரைகள், முளைவிட்ட தானியங்கள்.
    தவிர்க்கவேண்டியவை:
    துரித வகை உணவுகள், தயிர், எண்ணெய், பலாப்பழம், கொய்யா, சீதாப்பழம்.

    Reply With Quote
  3. சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

    ஒருவகை ஒட்டுண்ணியால் ஏற்படுகிற, எளிதில் பரவக்கூடிய தோல் தொற்றுநோய் 'சிரங்கு’ (Scabies)பாதிக்கப்பட்டவரின் உடைகள், துண்டு, படுக்கை, இருக்கைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எளிதில் இது பரவக்கூடியது. இருப்பினும் தோலுடன், தோல் தொடுவதாலேயே இது அதிகமாகப் பரவுகிறது.
    அறிகுறிகள்: 
    தோலின் மேற்பகுதியில் சிவந்த நிற சின்னஞ்சிறு பள்ளம் போல் காணப்படும். முக்கியமாக கை, கால், விரல் இடுக்கு, பிறப்புறுப்பு, மார்பின் கீழ்ப்பகுதியிலும் காணப்படும். பச்சிளம் குழந்தைகளின் உள்ளங்கை மற்றும் பாதங்களில், சீழ் கோர்த்த சிறு கொப்புளங்கள் காணப்படும். இரவு நேரங்களில் அரிப்பு அதிகமாக இருக்கும்.
    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
     கால் டீஸ்பூன் பறங்கிப்பட்டைப் பொடியைப் பாலில் கலந்து உண்ணலாம்.
     தழுதாழை இலைப்பொடி, மிளகுத்தூள் சம அளவு கலந்து அதில் கால் ஸ்பூன் எடுத்து தேன் கலந்து உண்ணலாம்.
     8 கிராம் காஞ்சொறி வேர்ப்பொடியில், இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
     கிலுகிலுப்பை இலை, துளசியிலை சம அளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து உண்ணலாம்.
     இசங்கு இலை, வேர் இவற்றை சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் தேனில் கலந்து பருகலாம்.
     கொட்டைக்கரந்தையை அரைத்து கால் ஸ்பூன் எடுத்து, மோரில் கலந்து உண்ணலாம்.
     சிவனார்வேம்பு வேர்ப்பொடி, சீந்தில் சர்க்கரை இவற்றை சம அளவு எடுத்து, அதில் அரை ஸ்பூன் கலந்து உண்ணலாம்.
     அருகம்புல், வெள்ளருகு சம அளவு எடுத்து அரைத்து, கொட்டைப் பாக்களவு வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
     அரை டீஸ்பூன் முடக்கத்தான் இலைப்பொடியை, மோரில் கலந்து உண்ணலாம்.
     சத்திசாரணை வேர்ப்பொடி, மிளகுத்தூள் சம அளவு எடுத்து, அதில் கால் ஸ்பூன் உண்ணலாம்.
     சம அளவு வெப்பாலை பட்டைப் பொடி, கடுக்காய்ப் பொடி எடுத்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ணலாம்.
    வெளிப் பிரயோகம்: 
     குப்பைமேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்துப் பூசலாம்
     பாகல்கொடி, கருவாப்பட்டை, திப்பிலியை நீரடிமுத்தெண்ணெயில் அரைத்து, சிரங்கு மீது பூசலாம்.
     பறங்கிச் சாம்பிராணி, நல்லெண்ணெய், வெள்ளை மெழுகு இவற்றை சமஅளவு எடுத்துக் காய்ச்சிப் பூசலாம்.
     பவளமல்லி விதையை தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சிப் பூசலாம்.
     ஊசித்தகரை இலையை எலுமிச்சைப் பழச்சாறு விட்டு அரைத்துப் பூசலாம்.
     புன்னைப்பூவை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம்
     தேங்காய் எண்ணெயில் மரிக்கொழுந்தை சேர்த்து, வெயிலில் காயவைத்துப் பின் பூசலாம்.
     கீழாநெல்லியை உப்பு சேர்த்து அரைத்துப் பூசலாம்.
     மூங்கில் வேர், சந்தனம் இரண்டையும் சமஅளவு எடுத்து எலுமிச்சைப் பழச்சாறு விட்டு அரைத்துப் பூசலாம்.
     உசிலம்பூ, வேப்பிலை, மஞ்சள் சமஅளவு எடுத்து அரைத்துப் பூசலாம்.
     கொள்ளுக்காய் விதையை அரைத்துப் பூசலாம்.
    படம்: புகழ்.திலீபன்
    உணவு: சேர்க்க வேண்டியவை:
    வால்நட்,
    பூண்டு,
    மிளகு,
    வெங்காயம்,
    கீரைகள்,
    பழ வகைகள்


    தவிர்க்க வேண்டியவை:
    கத்திரிகாய்,
    சோளம்,
    வரகு,
    கம்பு,
    கருவாடு,
    மீன்

    Reply With Quote3
  4. சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

    நம் உடலில் தேவைக்கு அதிகமாக சேரும் நீர், உப்புகள், நஞ்சை வடிகட்டி, வெளியேற்றும் பணியைச் சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரில் இருக்கும் தாதுக்கள் மற்றும் அமில உப்புகள் படிவதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. இந்தக் கற்கள்தான் சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் குழாயில் தோன்றுகின்றன.

    குறைந்த அளவு நீர் அருந்துதல், அதிக அளவு மாமிச உணவு உண்ணுதல், குளிர்பானங்கள் அருந்துதல், வைட்டமின் 'ஏ’ குறைபாடு மற்றும் வெயில் காலத்தில் உடம்பிலுள்ள நீர் அதிகமாக வெளியேறுதல், சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள், சிறுநீரை அதிக நேரம் அடக்கிவைத்திருத்தல் போன்ற காரணங்களால் கற்கள் தோன்றலாம்.
    அறிகுறிகள்:
    இடுப்பில் தொடங்கி அடிவயிறு, தொடை இடுக்கு வரை கடுமையான வலி எடுக்கும். குமட்டல், வாந்தி, காய்ச்சல் இருக்கும். வலியுடன் சிறுநீர் வெளியேறும். எரிச்சல், நீர்க்கடுப்பு மற்றும் அதிகப்படியான வியர்வை, சிறுநீரில் ரத்தம் (அ) சீழ் கலந்து வெளியேறும்.
    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
    சிறுபீளை இலைச்சாற்றை 30 மி.லி. காலை, மாலை அருந்தலாம்.

    கைப்பிடி அளவு நெருஞ்சில் காய், ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதை இரண்டையும் இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

    அரை ஸ்பூன் சீரகப் பொடியை இளநீரில் கலந்து உண்ணலாம்.

    வெள்ளரி விதை, சோம்பு, இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அவற்றை அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.

    யானை நெருஞ்சில் இலைச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து, சர்க்கரை கலந்து உண்ணலாம்.

    அரைக் கைப்பிடி அளவு எலுமிச்சை, துளசியை எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
    ஒரு பங்கு கொள்ளுடன் 10 பங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி நீரை வடித்துக் குடிக்கலாம்.

    ஓமம், மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் சேர்த்துப் பிசைந்து கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.

    மாவிலங்கபட்டைப் பொடி அரை ஸ்பூன் எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

    அருகம்புல் கைப்பிடி அளவுடன், 10 மிளகு எடுத்து நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து அருந்தலாம்.

    கால் டம்ளர் முள்ளங்கிச் சாறில் அரை ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, நீரில் கலந்து பருகலாம்.

    ஒரு கிராம் முருங்கை வேர்ப்பட்டைப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.

    மாதுளம் விதைப்பொடி அரை ஸ்பூன் எடுத்து, தேனில் கலந்து உண்ணலாம்.

    ஒரு ஸ்பூன் துளசி இலைச் சாறில் தேன் கலந்து உண்ணலாம்.

    அரைக் கைப்பிடி நன்னாரி வேரில் நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து அதில் கால் ஸ்பூன் கடுக்காய்த் தூள் சேர்த்து உண்ணலாம்.

    கால் ஸ்பூன் வெந்தயப் பொடியில் பன்னீர் சேர்த்து அருந்தலாம்.

    சுரைக்கொடியை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

    ரோஜாப்பூ இதழ், நீர்முள்ளி அரைக்கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சி, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

    சேர்க்க வேண்டியவை:
    தர்ப்பூசணி, நாவல், வாழைப்பழம், அன்னாசி, எலுமிச்சை, பப்பாளி, கேரட், சுரைக்காய், பீர்க்கு, மஞ்சள்பூசணி, வெண்பூசணி, வெங்காயம், வெள்ளரி, இளநீர், நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர்.

    தவிர்க்க வேண்டியவை:
    ப்ளம்ஸ், தக்காளி, ஸ்ட்ராபெர்ரி, உருளை, பீன்ஸ், முட்டைக்கோஸ், முந்திரி, பால் பொருட்கள், இறைச்சி, மீன், முட்டை.
  1. சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

    உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.
    காரணங்கள்:
    சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் போன்றவற்றால் நீர்க்கடுப்பு ஏற்படலாம்.
    அறிகுறிகள்
     ஆண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, சிறுநீர் மற்றும் விந்துடன் ரத்தம் கலந்து வெளியேறும்.
     அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
     பெண்களுக்கு வயிற்றுவலி, சிறுநீர் கழிக்கும்போது கடுப்புடன் கூடிய வலி, குளிர் மற்றும் காய்ச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, பிறப்புறுப்புக் கசிவு போன்றவை காணப்படும்.
    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
     கைப்பிடி உளுந்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலை நீரை வடித்து, அந்த நீரை அரை டம்ளர் அருந்தலாம்.
     கற்பாசியை அரைத்து இடுப்புப் பகுதியிலும், அடிவயிற்றிலும் பூசலாம்.
     சிறு துண்டு கற்றாழையை நன்றாகக் கழுவி, வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து உண்ணலாம்.
     கால் டம்ளர் பருப்புக் கீரையின் சாற்றை இரண்டு வேளை அருந்தலாம்.
     அரை ஸ்பூன் முள்ளிக்கீரை வேர்ப்பொடியை நீர் கலந்து அருந்தலாம்.
     சரக்கொன்றை புளியுடன் கடுகுரோகிணி, சுக்கு, வாய்விடங்கம், பெருங்காயம், படிகாரம், பொட்டிலுப்பு கூகைநீறு ஆகியவற்றை சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப் போடலாம்.
     செண்பகப் பூவுடன் பத்து மடங்கு நீர் சேர்த்துக் காய்ச்சி, அதில் அரை டம்ளர் அருந்தலாம்.
     கைப்பிடியளவு சுரைக்கொடியை தண்ணீர் விட்டுக் காய்ச்சி, வடித்து வெண்ணெய் கலந்து அருந்தலாம்.
     சதாவேரிக் கிழங்கின் பொடி அரைஸ்பூன் வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
     துத்தி வேர்ப்பொடியை அரை ஸ்பூனை திராட்சைப் பழச்சாற்றில் கலந்து சாப்பிடலாம்.
     அரை ஸ்பூன் தேற்றான் விதைப்பொடி எடுத்து எலுமிச்சைச் சாறு, நீர் சேர்த்து உண்ணலாம்.
    சேர்க்கவேண்டியவை:
    திராட்சை, எலுமிச்சை, அன்னாசி, வெங்காயம், உருளைக்கிழங்கு முள்ளங்கி, பூசணி, வெள்ளரி.
    தவிர்க்க வேண்டியவை:
    துவர்ப்பு மற்றும் கார உணவுகள்.







    3
  2. வெண்புள்ளி

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

    நம் உடலைப் போர்த்தியிருக்கும் சருமத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பான நிறம் மாறி, வெள்ளை நிறம் தோன்றுவதை வெண்புள்ளி என்கிறோம். இது மெலனின் என்ற நிறமிக் குறைபாட்டால் ஏற்படுகிறது. வெவ்வேறு அளவுகள், வடிவங்களில் இருக்கும்.
    இந்தப் புள்ளிகள் முதலில் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவும். நிச்சயமாக, இது தொற்று நோய் அல்ல.
    காரணங்கள்:
     உணவில் புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு
     வயிற்றில் உள்ள கிருமிகள்
     நாட்பட்ட வயிற்றுக் கோளாறுகள்
     ஹார்மோன் பாதிப்பு
     மன அழுத்தம்
     நோய்வாய்ப்பட்ட நிலை
     அமீபியாசிஸ்
    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்
     கார்போக அரிசியைப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து உண்ணலாம்.
     காட்டுச் சீரகப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடலாம்.
     நுணா இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் சாப்பிடலாம்.
     அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம்.
     அதிமதுரப் பொடி, மிளகுப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
     வல்லாரை இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு காலையில் உண்ணலாம்.
     அரை ஸ்பூன் செங்கொன்றைப் பட்டைப் பொடியில் நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து, கால் டம்ளர் அருந்தலாம்.
     அரை ஸ்பூன் அருகம்புல் பொடியில் ஆலம் பால் ஐந்து சொட்டுகள் கலந்து தொடர்ந்து 40 நாட்கள் தினமும் காலையில் உண்ணலாம்.
     வேப்பிலை, ஒமம் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
     தராஇலை, ரோஜாப்பூ இதழ் இரண்டையும் சமஅளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
     கரிப்பான் இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அரை ஸ்பூன் உண்ணலாம்.
    வெளிப்பிரயோகம்:
     கற்கடாகசிங்கியைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
     கார்போக அரிசியையும், புளியங்கொட்டையையும் நீரில் ஊறவைத்து, அரைத்துப் பூசலாம்.
     கண்டங் கத்தரிப் பழத்தைக் குழைய வேகவைத்து வடித்து, அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம்.
     துளசி இலையை மிளகுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம்.
     முள்ளங்கி விதையைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம்.
     மருதோன்றி இலைச் சாற்றில் தாளகத்தை இழைத்துப் பூசலாம்.
     காட்டு மல்லிகை இலையை அரைத்துப் பூசலாம்.
     சிவப்புக் களிமண்ணை இஞ்சிச் சாற்றில் கலந்து பூசலாம்.
     மஞ்சளை நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து, அதில் கடுகெண்ணெய் சேர்த்து, நீர் வற்றும் வரை காய்ச்சிப் பின் பூசலாம்.
     செங்கொன்றைப் பட்டையை அரைத்துப் பூசலாம்.
     சேராங்கொட்டைத் தைலத்தைப் பூசலாம்.
    சேர்க்க வேண்டியவை:
    பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், சிவப்புக் கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கறிவேப்பிலை, இஞ்சி
    தவிர்க்க வேண்டியவை:
    காபி, தேநீர், சர்க்கரை, வெண்மையான மாவுப் பொருட்கள், தீட்டப்பட்ட தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, புளிப்புப் பொருட்கள் மற்றும் மீன்.







  3. 43

    மூட்டு வலி

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

    முதிர்ந்த வயதை நெருங்கும்போது, மூட்டு வலிதான் முதலில் எட்டிப்பார்க்கும்.
    மூட்டுகள் சிதைவதால் மூட்டு வலி உண்டாகிறது; மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். பெரும்பாலும் 55 வயதைத் தாண்டியப் பெண்களிடம் காணப்படும் இந்த வலிக்குக் காரணம், முதுமையை அடையும்போது, எலும்புகளின் முனைகளை மூடியுள்ள குருத்தெலும்புகள் தேய்ந்து முற்றிலும் அரிக்கப்படும். இந்த நிலையில் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்வதால் ஏற்படும் பிரச்னையே.
    முக்கிய காரணங்கள்: பரம்பரை, அதிக உடல் எடை, அதிக நேரம் சம்மணமிட்டு உட்கார்ந்து இருத்தல், சத்தான உணவுகளை உண்ணாமல் இருத்தல், எலும்பு முறிவு.
    அறிகுறிகள்: காலையில் எழுந்திருக்கும்போது வலி அதிகரித்தும், நேரம் செல்லச் செல்லக் குறைந்தும் காணப்படும். நடக்கும்போது அதிகரித்தும், ஓய்வின் போது வலி குறைவாகவும் இருக்கும். மூட்டுகளைஅசைக்கும்போது, ஒருவிதமான ஒலியை (Criptations)உணரலாம்; இணைப்புகளைச்(Joints)சுற்றியுள்ள தசைகளும் தசை நாண்களும் வலுவிழந்து விறைப்புடன் காணப்படும்; அதிகப்படியான எலும்பு வளர்ச்சிகளும், சிறு குருத்துகளும் (spur) வளரும். மூட்டுகள் வீங்கிக் கடினமாக இருக்கும்.

    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
     அமுக்கரா கிழங்குப் பொடி அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து உண்ணலாம்.
     சிற்றாமுட்டி சுக்கை கைப்பிடி அளவு எடுத்து, நான்கு டம்ளர் நீர் சேர்த்து ஒரு டம்ளராக வற்றவைத்து 30 மில்லி அருந்தலாம்.
     குங்கிலியத்தைப் பொடித்து ஒரு கிராம் பாலில் கலந்து பருகலாம்.
     தழுதாழை இலைப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.
     நிலாவாரைத் தூள் ஒரு ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து உண்ணலாம்.
     மருதம்பட்டை மற்றும் மாவிலங்குப் பட்டை சம அளவு பொடித்து, அதில் கால் ஸ்பூன் வெந்நீரில் கலந்து உண்ணலாம்.
     வாகைப் பூ, வேப்பம் பூ சம அளவு எடுத்து உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
     பிரண்டையின் வேர்ப் பொடி, முடக்கற்றான் இலைப் பொடி இவற்றை சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் பாலில் சேர்த்து உண்ணலாம்.
     சங்கன் இலை, வேர்ப் பொடி சம அளவு எடுத்து, அதில் கால் ஸ்பூன் பாலில் உண்ணலாம்.
     ஈயக்கொழுந்துப் கொடியை அரைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து, அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
    வெளிப்பிரயோகம்:
     சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கிக் கட்டலாம்.
     சுக்கை, எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
     குப்பைமேனி இலையுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
     புளி இலையை அரைத்து, நீர் சேர்த்துக் கொதிக்கவைத்துப் 'பத்து’ப் போடலாம்.
     சதகுப்பை விதையை அவித்து, பின் சதகுப்பை வேருடன் சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
     வசம்பை, காய்ச்சுக்கட்டி உடன் சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
     வெங்காயத்தை, கடுகு எண்ணெய் உடன் சேர்த்து அரைத்துப் 'பத்து’ப் போடலாம்.
     நொச்சி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
     நீர்ப்பிரம்பி இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டலாம்.
     கருஞ்சீரகத்தை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.
     ஊமத்தை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம்.
    சேர்க்க வேண்டியவை: கோதுமை, பச்சைப்பயறு, குதிரைவாலி, தினை, சிவப்புச் சம்பா, பார்லி, இஞ்சி, நாட்டு வாழைப்பழம், பால், கீரை.
    தவிர்க்க வேண்டியவை: கேழ்வரகு, கிழங்குவகை, காபி, டீ, எண்ணெய், வாழைக்காய், புளி.

சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

நாள்பட்ட தோல் நோய்களில் கரப்பானும்(Eczema) ஒன்று. கரப்பான் பாதிப்பு உள்ளவர்களுக்கு தோலானது சிவந்து வெடிப்புடன் உலர்ந்து காணப்படும். அட்டோபிக் எக்ஸிமா என்பது பொதுவாக காணப்படும் கரப்பானாகும். இது ஒவ்வாமையினால் ஏற்படுகிறது. இரண்டு முதல் ஆறு மாதப் பச்சிளம் குழந்தைகளுக்குத்தான் இந்தப் பிரச்னை அதிகம் ஏற்படுகிறது.
இது, பெரும்பாலான குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் வயதில் குணமாகிவிடுகிறது. சிலருக்கு, இளமைப் பருவத்திலும் முதிர் வயதிலும் இந்த நோய் தொடரும்.
அட்டோபிக் எக்ஸிமா வகை கரப்பான்... மகரந்தம், தூசு, செல்லப்பிராணிகளின் முடி, கம்பளி, அதிகக் குளிர், அதிக வெப்பம், போன்றவற்றால் ஏற்படும். இவைத் தவிர சோப்புகள், அழகு சாதனப் பொருட்கள், நகைகள், வேதிப் பொருட்கள், தட்பவெட்பநிலை மாறுபாடுகள், மன அழுத்தம் போன்றவை கரப்பான் உண்டாவதற்குக் காரணமாகின்றன.
அறிகுறிகள்:
உலர்ந்த சிவந்த நிறத் தோல், எரிச்சல், கொப்புளம், நீர் வடிதல்.சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
இசங்குச் சாறும், சிற்றாமணக்கு எண்ணெயும் சம அளவு எடுத்துக் காய்ச்சி, அதில் 10 மி.லி. அருந்தலாம்.
 எழுத்தாணிப் பூண்டு எட்டு கிராமுடன் நாலு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
 ஒரு கிராம் கொட்டைக்கரந்தைப் பொடியை பாலில் சேர்த்து அருந்தலாம்.
 சிவகரந்தையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.
 கருங்காலிப் பிசின் பொடி ஒரு கிராம் எடுத்து நீரில் கலந்து சாப்பிடலாம்.
 சிறுகாஞ்சொறி வேர்ப் பொடி அரை ஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து உண்ணலாம்.
 குருவிச்சிப் பூண்டு கைப்பிடி அளவு எடுத்து நான்கு பங்கு நீர் சேர்த்து, ஒருபங்காக வற்றவைத்து அருந்தலாம்.
 சத்திச்சாரணை, கடுக்காய், சுக்கு இவற்றை சம அளவு எடுத்து, உப்பு சேர்த்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
 அரை ஸ்பூன் நாவல் வேர்ப் பொடியை நீரில் கலந்து பருகலாம்.
 புங்கம்பூ, புளியம்பூ, வசம்பு, உள்ளி, சீரகம், வெப்பாலை விதை, நன்னாரி 35 கிராம் எடுத்து, பால் 700 மி.லி. நல்லெண்ணெய் 1400 மி.லி. கலந்துக் காய்ச்சி தினசரி ஒரு ஸ்பூன் வீதம் உண்ணலாம்.
 அரை ஸ்பூன் கருவேலின் வேர்ப் பொடி நீரில் கலந்து பருகலாம்.
வெளிப் பிரயோகம்:
 பப்பாளிப் பாலுடன் வெங்காயத்தைப் பொடித்துப் பூசலாம்.
 ஆகாயத் தாமரைச் செடியைச் சுட்டுச் சாம்பலாக்கிப் பூசலாம்.
 கருஞ்சீரகப் பொடியை நல்லெண்ணெயில் காய்ச்சிப் பூசலாம்.
 கருஞ்செம்பை இலையை அரைத்துப் பூசலாம்.
 தேள் கொடுக்கு இலையை அரைத்துப் பூசலாம்.
 மஞ்சணத்திப் பட்டையைப் பொடித்து, நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம்.
 புங்கம் விதையை நீர்விட்டு அரைத்துப் பூசலாம்.
 பூவரசம் காய், பூவை அரைத்துப் பூசலாம்.
 கற்பூரவள்ளி, சிறு செருப்படை, வெங்காயம் இவற்றை விளக்கெண்ணையில்போட்டு காய்ச்சிப் பூசலாம்.
சேர்க்க வேண்டியவை:
பச்சைப் பயறு, முள்ளங்கி, பண்ணைக் கீரை, பரட்டைக் கீரை, வெள்ளரிக்காய், மிளகு.
தவிர்க்க வேண்டியவை:
கத்தரி, கருணை, சோளம், வரகு, பாகல், மீன், நாவல் பழம், பனம் பழம், பலாப் பழம், கம்பு.
நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலைக்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தையும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கின்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையில் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்றறைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:
காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம், மூக்கில் நீர் வடிதல்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
15 மிலி. துளசி இலைச்சாறுடன் தேன் கலந்து உண்ணலாம்.

ஒரு கிராம் பேரரத்தைப் பொடியை, பாலில் கலந்து பருகலாம்.
ஆடாதொடை இலை, வேர் இரண்டையும் கைப் பிடியளவு எடுத்து நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்றவைத்து, தேன் கலந்து அருந்தலாம்.

கசகசாப் பொடியில் அரைஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம்.

கைப்பிடி அளவு கண்டங்கத்திரிச் செடியில் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பங்காக வற்ற வைத்து அருந்தலாம்.

பெருஞ்சீரகப் பொடி, மிளகுத் தூள், பனங்கற்கண்டு சம அளவு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு உண்ணலாம்.

தவசு முருங்கையிலைச் சாறு 15 மிலி அருந்தலாம்.

ஒரு ஸ்பூன் தும்பைப் பூச் சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

அரை ஸ்பூன் தூதுவளைப் பொடியில் தேன் கலந்து உண்ணலாம்.

சதகுப்பை இலைப் பொடியில் சம அளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.

15 மிலி. கற்பூர வள்ளிச் சாறைக் கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.

ஆதண்டைக் காயை வற்றலாகச் செய்து சாப்பிடலாம்.

ஊமத்தையும் சுக்கையும் சம அளவு எடுத்துப் பொடித்து, அதை அரை ஸ்பூன் தேனில் கலந்து உண்ணலாம்.

50 கிராம் மணத்தக்காளி வற்றலை, 200 மிலி வெந்நீரில் ஊறவைத்து வடித்து அருந்தலாம்.

திப்பிலிப் பொடியுடன் பனங்கற்கண்டு சம அளவு சேர்த்து, அரைஸ்பூன் பாலில் கலந்து உண்ணலாம்.

வெற்றிலைச் சாறு 15 மிலி எடுத்து மிளகுத் தூள் கால் ஸ்பூன் அளவு சேர்த்து உண்ணலாம்.

வெளிப் பிரயோகம்
:

சுக்கை களியாகச் செய்து நெற்றியில் பற்று போடலாம்.

லவங்கத்தை நீர்விட்டு மைபோல் அரைத்து நெற்றியிலும், மூக்கின் மேலும் பற்று இடலாம்.

செம்பைப் பூவை எண்ணெயில் இட்டுக் காய்ச்சித் தலையில் தேய்க்கலாம்.

அகிற்கட்டைத் தைலத்தைத் தலையில் தேய்க்கலாம்.

கண்டுபாரங்கியைக் கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய் சேர்த்து அரைத்துப் பற்று போடலாம்.

சுக்கைத் தாய்ப்பாலில் அரைத்து, நெற்றியில் பற்றிட்டு அனல் படும்படி லேசாகக் காட்டலாம்.

சேர்க்க வேண்டியவை:
தேன், மிளகு, பூண்டு, முட்டை, கோழி.

தவிர்க்க வேண்டியவை:
குளிர்ச்சியான உணவுகள், குளிரூட்டப்பட்ட அறை, வாழைப்பழம், திராட்சைப் பழம், தர்பூசணி, ஐஸ்கிரீ
சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
 கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
 அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.
 அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.
 கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
 சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.

 வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.
 வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
 நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.
 15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.
 ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.
 சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.
 செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.
 சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.
 மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.
 அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.
 நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருகலாம்.
 பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.
சேர்க்க வேண்டியவை:
சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.
தவிர்க்க வேண்டியவை:
அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்.
சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

இல்லற உறவில் ஈடுபாடு இருந்தும், பல ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக, மனைவிக்குப் பூரண மகிழ்ச்சி தர இயலாமல் போகும். இன்னும் சிலருக்கோ, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, உரிய எழுச்சி ஏற்படாமல் போதல், பாலுணர்வு வேட்கைக் குறைதல் போன்ற பல சிக்கல்களும் இருக்கக்கூடும். அவர்கள் எதற்கும் அஞ்சத் தேவை இல்லை. பாலியல் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
காரணங்கள்:
ஹார்மோன் மாறுபாடுகள், ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பாதிப்புகள், குரோமோசோம் மாறுபாடுகள், அம்மைக்கட்டு, காசநோய், பால்வினை நோய்கள், மனநிலை மாறுபாடுகள், புகைபிடித்தல், மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பாதிப்புகள், கதிரியக்கத்திற்கு உட்படுதல் மற்றும் இறுக்கமான உள்ளாடை அணிதல் போன்றவை.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
 நிலப்பனைக் கிழங்கைப் பொடித்து, ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து பால், சர்க்கரை கலந்து உண்டுவரலாம்.
 பூனைக்காலி விதை, நெல்லிவற்றல் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, ஒரு ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.
 அமுக்கரா கிழங்குப் பொடியுடன் சம அளவு கற்கண்டு சேர்த்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.
 நிலப்பூசணிக் கிழங்கின் சாறுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ணலாம்.
 ஓரிதழ் தாமரையை அரைத்துப் பாக்கு அளவு எடுத்துப் பாலில் கலந்து அருந்தலாம்.
 தாமரைப்பூவின் மகரந்தப் பொடியுடன் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடலாம்.
 சம அளவு நீர்முள்ளி விதை, மாதுளம் விதையைப் பொடித்து, ஒரு ஸ்பூன் வெண்ணெயுடன் கலந்து சாப்பிடலாம்.
 துவளைப்பூ, முருங்கைப்பூ இரண்டையும் கைப்பிடி எடுத்து நெய், வெங்காயம் சேர்த்து சமைத்து உண்ணலாம்.
 முள்முருங்கை இலையை நெய், அரிசி மாவு சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.
 வில்வப் பிசின், வாதுமைப் பிசின் சம அளவு எடுத்துப் பொடித்து அதில் கால் ஸ்பூன் எடுத்துப் பால் சேர்த்து குடிக்கலாம்.
 நாவல் வேர்ப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
சேர்க்க வேண்டியவை:
முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா, முருங்கைப் பிஞ்சு, மாதுளம்பழம், மாம்பழம், பலாப் பிஞ்சு, பலாக் காய், புடலங்காய், எலுமிச்சம்பழம், பசலை, அரைக்கீரை, கொத்துமல்லிக் கீரை, கோதுமை, ஜவ்வரிசி, உளுந்து, வெந்தயம், நிலக்கடலை.
தவிர்க்க வேண்டியவை:
அதிகக் காரம், துவர்ப்பு மற்றும் கசப்புள்ள உணவுகள், சிகரெட் மற்றும் போதைப் பொருட்கள்.


  1. சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! - 1

    சர்க்கரையை வெல்வோம் சமத்தாக!

    Thanks to Vikatan



    வரும்முன் காப்பதன் முக்கியத்துவம்பற்றி சொல்லாத மருத்துவ முறைகள் இல்லை. ஆனால், நோய்கள் நம்மை நெருங்கிவிடாதபடி வாழ்வது அவ்வளவு சுலபமானதா? ''சாத்தியம்தான்'' என்கிறார் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் உதவி விரிவுரையாளரும் சித்த மருத்துவருமான எஸ்.சுஜாதா ஜோசப். 

    'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

    உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ குறிப்பிட்ட நோய் ஏன் வருகிறது? அதை எப்படித் தடுப்பது என்பதை அறிந்தால் திருமூலரின் உபாயம் நமக்கும் தெரியவரும். உணவே மருந்து என்ற அடிப்படையில் நல்ல பல சிகிச்சை முறைகளையும் தீர்வுகளையும் இந்தத் தொடர் உங்களுக்கு அளிக்க இருக்கிறது.

    சர்க்கரையை வெல்வோம் சமத்தாக!


    உலக அளவில் சர்க்கரை நோயில் சீனாவுக்கு அடுத்தபடியாக நமது இந்தியாவுக்குத்தான் இரண்டாம் இடம்.

    எப்படி ஏற்படுகிறது சர்க்கரை பாதிப்பு? நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட், உடலில் நடக்கும் ரசாயன மாறுதல்களால் குளுகோஸாக மாறுகிறது. குளுகோஸ் ரத்தத்தின் வழியாகச் செல்களை அடைந்து உடலை வளர்க்கவும் பாதுகாக்கவும் செய்கிறது.

    குளுகோஸை நமது செல்கள் உபயோகிப்பதற்கு உதவியாக இருப்பது கணையத்தில் சுரக்கும் இன்சுலின். மேலும் உபரியாக உள்ள குளுகோஸை, கிளைகோஜனாக மாற்றி உடலில் சேமித்துவைப்பதும் இந்த இன்சுலின்தான். இன்சுலின் சரியாகச் சுரக்காதபோது குளுக்கோஸ் ரத்தத்தில் அதிகரித்து சிறுநீர் மூலம் வெளிப்படுகிறது. இதுதான் சர்க்கரை நோய்.



    சர்க்கரை நோயில் இரண்டு வகை உண்டு. முதல் வகையில் இன்சுலின் குறைவாக சுரக்கும் அல்லது முற்றிலுமே சுரப்பது இல்லை.

    இரண்டாம் வகையிலும் மற்றும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயின்போதும் உற்பத்தியாகும் இன்சுலினை உடலின் செல்கள் ஏற்றுக்கொள்வது இல்லை.

    மரபுரீதியிலான காரணங்கள், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாதது, உடற்பயிற்சியின்மை முதலியவை சர்க்கரை நோய்க்கு முக்கியமான காரணங்கள்.

    ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது நமது ரத்தக் குழாய்கள் இதயம், சிறுநீரகம், கண்விழித்திரை உட்பட உடலின் பல பகுதிகளையும் பாதிக்கிறது. அதிகரித்த சர்க்கரையினால் கிருமிகளும் உற்சாகமாக உடலைத் தாக்குகின்றன. எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக அவசியம்.

    சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் கூறும் எளிய மருத்துவ முறைகள்:

     ''ஆவாரை, கொன்றை, நாவல், கடலழிஞ்சில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், மருதம்பட்டை இவற்றை ஒரே அளவில் சேர்த்து அத்துடன் எட்டுப் பங்கு நீரையும் சேர்த்து, எட்டில் ஒரு பங்கு ஆகும்படி காய்ச்சி அருந்த சர்க்கரை நோய் நீங்கும்; ரத்தத்தில் உள்ள உப்பும் குறையும் என்பது சித்தர்கள் வாக்கு.

    ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர், பிசின் முதலியவற்றில் ஆன்தோசயனின், டானின், ஃபீனால்கள் உள்ளதால் இவை சர்க்கரை நோயைப் போக்குவதில் சிறப்பாகச் செயல்படுகின்றன.

     தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஐந்து நாவல் பழங்களைச் சாப்பிட வேண்டும். நாவல் பழத்தில் உள்ள ஆன்தோசயனின் மிகச் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயினால் ரத்தக் குழாய்கள், கண்களின் விழித்திரை மற்றும் உடலின் அடிப்படைச் சவ்வுகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும்.

    நாவல் கொட்டைப் பொடியை 200 மி.கி. அளவு இரு வேளைகளும் உண்ண வேண்டும். இதில் உள்ள கிளைகோஸைடு ஜம்போலின் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

     பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு தாவர இன்சுலினாகச் செயல்படுகிறது. பாகற்காயில் உள்ள சாரன்டின், குளுகோஸை செல்கள் உபயோகிப்பதை ஊக்குவிக்கிறது.

     வெந்தயம் ஒரு டீஸ்பூன் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். இதில் உள்ள ஹைட்ராக்ஸிலூஸின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.

    ஆலமரத்தின் அனைத்துப் பாகங்களும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். ஆலம்பட்டையை இடித்து 10 மடங்கு நீரில் ஊறவைத்து, வடித்து, அருந்த சர்க்கரைநோய் கட்டுப்படும்.

     கருங்காலி மரப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து நீர் சேர்த்து எட்டில் ஒரு பங்காக ஆகும் வரை காய்ச்சி அருந்தலாம்.

     சிறுகுறிஞ்சான் இலைப் பொடியை 500 மி.கி. இரு வேளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள ஜிம்னெமிக் அமிலம் சிறுகுடலில் உறிஞ்சப்படும் குளுகோஸின் அளவைக் குறைப்பது மட்டும் அல்லாமல் இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்கும்.


    என்ன சாப்பிடலாம்?

     இஞ்சி, வெங்காயம், பூண்டு, அவரைப் பிஞ்சு, பீன்ஸ், சோயாபீன்ஸ், சிவப்பு பீன்ஸ், வாழைத் தண்டு, வாழைப் பிஞ்சு, முழுத் தானியங்கள், ஓட்ஸ், சிகப்பரிசி, பச்சைக் காய்கறிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஆரஞ்சு, கொய்யா, பசலைக் கீரை, பாதாம், பூசணி விதை இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


    என்ன தவிர்க்கலாம்?

     வெள்ளை அரிசி, ரொட்டி, கிழங்கு வகைகள், வாழைப் பழம், அதிகக் கொழுப்பு உணவுகள் போன்றவற்றை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

    சிகரெட் மற்றும் மதுவை அறவே விட்டொழிக்க வேண்டும்

  2. உயர் ரத்த அழுத்தம் குறைய...

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! - 2

    உயர் ரத்த அழுத்தம் குறைய...


    Thanks to Vikatan


  3. #4
    43

    பயமுறுத்துகிறதா பருமன்?

    பயமுறுத்துகிறதா பருமன்?

    Thanks to Vikatan



  4. #5
    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு - மூலம்


    Thanks to Doctor Vikatan







    ஆசனவாய்ப் பகுதியில் உள்ள திசுக்களில் ரத்த நாளங்கள் அதிகம். அவை நீண்டு, விரிவடைந்து, பெரிதாவதால் மூலம் ஏற்படுகிறது.

    கழிவறைக்குச் சென்று சுத்தம் செய்யும்போது கைக்குச் சிறு கட்டி போலத் தென்படுவது, மலத்தில் ரத்தம் கலந்திருப்பது, மலம் கழித்த பின்னரும் அந்த உணர்வு தொடர்வது, ஆசனவாய்ப் பகுதியில் அரிப்பு ஏற்படுவது, சளி போன்ற பொருள் மலத்தில் கலந்து வெளியேறுவது, மலம் கழிக்கும்போது வலியை உணர்வது, ஆசனவாய் சிவந்தும் புண்ணாகியும் காணப்படுவது, மலம் கழிக்க அதிகம் முக்குவது போன்றவை மூல வியாதியின் அறிகுறிகள்.

    தொடர்ந்த மலச்சிக்கல், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, அதிகமான பளுவைத் தொடர்ந்து தூக்குவது, கூடுதல் உடல் பருமன், கருவுற்று இருப்பது, ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து பணிபுரிவது போன்ற பல காரணங்களால் மூல வியாதி ஏற்படலாம்.


    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

    உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் வெளிப்பூச்சு ஆகிய இரு விதங்களிலும் மிக எளிதாக மூலத்தையும் ரத்தமூலத்தையும் குணமாக்கலாம்.

    உட்கொள்ளும் மருந்துகள்;

     கடுக்காய்ப் பிஞ்சைப் பொன் வறுவலாக வறுத்து, சிற்றாமணக்கு மற்றும் நெய் விட்டு அரைத்து, தினசரி 30 மி.கி. அளவு உட்கொள்ளலாம்.

     பிரண்டையைக் கணு போக்கி, நெய்விட்டு, வறுத்து, அரைத்துப் கொட்டைப்பாக்கு அளவு காலை மாலை உண்ணலாம்.

     நாயுருவி விதையைப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்து, மோரில் கலந்து அருந்தலாம்.

     ரோஜாப் பூ ஒரு பங்கு, கற்கண்டு மூன்று பங்கு சேர்த்து அரைத்து ஒரு ஸ்பூன் காலை மாலை உட்கொள்ள லாம்.

     அத்திப் பழங்களை நீரில் ஊறவைத்து, காலை, மாலை மூன்று பழங்கள் சாப்பிடலாம்.

     மிளகு 50 கிராம், பெருஞ்சீரகம் 70 கிராம் எடுத்து நுணுக்கி, தேன் 340 கிராம் சேர்த்து லேகியமாக்கிக் காலை, மாலை நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொள்ளலாம்.

     எள்ளை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்து, வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

     ஓமம், சுக்கு, கடுக்காய், இலவங்கப்பட்டை சம அளவு எடுத்து, பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடிக்கலாம்.

     துத்தி இலை, வெங்காயம், பச்சைப் பயறு, தக்காளி இவற்றை நெய்யில் வதக்கி, துவையல் செய்து சாப்பிடலாம்.

     நெய்தல் கிழங்கைப் பொடித்து, பாலில் கலந்து பருகலாம்.

     சீரகம் 200 கிராம், உலர்ந்த கற்றாழை 120 கிராம், பனை வெல்லம் 120 கிராம் இவற்றுடன் தேவையான பால், நெய் சேர்த்து லேகியமாகச் செய்து காலை, மாலை நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம்.

     சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டைப் பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஒடு, வெந்தயம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, கால் ஸ்பூன் காலை, மாலை மோரில் கலந்து பருகலாம்.

     குப்பைமேனி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, துவையல் செய்து சாப்பிடலாம்.

     வெந்தயத்தை வேகவைத்து, கடைந்து, ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து சாப்பிடலாம்.

     சேம்பு இலையைப் புளிசேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.

     இலந்தை இலையைப் பச்சையாக அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து சாப்பிடலாம்.

     கருணைக்கிழங்கைப் பால், தேன், நெய் சேர்த்து லேகியமாகச் செய்து, காலை, மாலை நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொள்ளலாம்.

     மாதுளம் பூவை உலர்த்திப் பொடி செய்து, சம அளவு வேலம் பிசின் சேர்த்து, கால் ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

     வில்வக்காயுடன் இஞ்சி, சோம்பு சேர்த்து நான்கு பங்கு நீரும் கலந்து, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

     அதிவிடயப் பொடியை மூன்று கிராம் எடுத்து வெண்ணெயில் கலந்து தினமும் மூன்று வேளை உண்ணலாம்.

    வெளிப்பூச்சாகப் பயன்படும் மருந்துகள்:

     கண்டங்கத்திரிப் பூவை வாதுமை மற்றும் நெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம்.

     ஆகாயத்தாமரை இலையை அரைத்துக்கட்டலாம்.

     கற்கடகசிங்கியைப் பொடித்து, நெருப்பில் இட்டுப் புகைக் காட்டலாம்.

     கம்பைச் சமைத்துத் தயிர்விட்டுப் பிசைந்து, முளை மூலத்தில் வைத்துப் பற்றுப் போடலாம்.

     சித்திர மூல வேரை நல்லெண்ணெய் விட்டு அரைத்துக் கட்டலாம்.


    சேர்க்கவேண்டிய உணவுகள்:

    வாழைப்பழம், பால், மோர், கீரைகள், ரத்த மூலத்துக்கு வாழைப்பிஞ்சு, வாழைப்பூ.

    தினசரி இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.


    தவிர்க்க வேண்டியவை:

    காரம், பொரித்த உணவுகள், கோழி இறைச்சி, வாழைக்காய்.

  5. #6
    43

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! - ஆஸ்துī

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! - ஆஸ்துமா


    Thanks to Doctor Vikatan





    ஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்டுசெல்லும் மூச்சுப்பாதை (Airway)வீங்கி (Inflammation) குறுகுவதால் ஏற்படுகிறது.

    ஆஸ்துமாவை ஏற்படுத்தும் காரணிகள்:

    ஒவ்வாமையின் விளைவாகவே பெரும்பாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது. தூசு, குளிர்ந்த காற்று, புகை, மூச்சுப்பாதையில் ஏற்படும் தொற்றுகள், ரசாயனப் பொருட்கள், புகைபிடித்தல், மகரந்தங்கள், வளர்ப்புப் பிராணிகளின் முடிகள், வாசனைத் திரவியங்கள் போன்றவை ஏற்படுத்தும் ஒவ்வாமையின் விளைவுதான் ஆஸ்துமாவின் வெளிப்பாடு.

    அறிகுறிகள்:

    சளியுடனோ அல்லது சளி இல்லாமலோ இருமல் தொடர்ந்து இருக்கும். ஒரு சுவாசத்துக்கும் அடுத்த சுவாசத்துக்கும் இடைப்பட்ட நேரம் குறைந்து காணப்படும். இழுப்பானது அதிகாலை மற்றும் இரவில் அதிகமாக இருக்கும்.





    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

    • முசுமுசுக்கை இலைப்பொடி, மற்றும் தூதுவளை இலைப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் தேன் சேர்த்து உண்ணலாம்.
    • உத்தாமணி இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் சேர்த்து அருந்தலாம்.
    • முட்சங்கன் இலையை அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலில் கலந்து சாப்பிடலாம்.
    • நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து அதில் 500 மிகி அளவு மூன்று வேளைகள் தேனில் குழைத்து அருந்தலாம்.
    • திப்பிலிப் பொடியுடன் கம்மாறு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.
    •  செடி, திப்பிலி, நாயுருவி விதை, சீரகம், இந்துப்பு சமஅளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்.
    • கோரைக்கிழங்கு, சுக்கு, கடுக்காய்த்தோல் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் கலந்து இருவேளை உண்ணலாம்.
    • சீந்தில் கொடி, ஆடாதோடை, கண்டங்கத்திரி இவற்றைச் சம அளவு எடுத்து, அரைத்து, அதில் நெய் சேர்த்துக் காய்ச்சித் தினசரி இருவேளை ஒரு ஸ்பூன் அருந்தலாம்.
    • லவங்கம், சாதிக்காய், திப்பிலி வகைக்கு 1 பங்கு, மிளகு 2 பங்கு, தான்றிக்காய் 3 பங்கு, சுக்கு 4 பங்கு சேர்த்துத் தூள் செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து அரை ஸ்பூன் காலை மாலை உண்ணலாம்.
    • இஞ்சிச்சாறு, மாதுளம்பூச்சாறு, தேன் சம அளவு கலந்து 30 மிலி இருவேளை பருகலாம்.
    • இம்பூறல் இலைப் பொடியுடன் இரண்டு பங்கு அரிசி மாவு சேர்த்து அடையாகச் செய்து சிற்றுண்டி போலச் சாப்பிடலாம்.
    • ஆடாதோடை இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து அருந்தலாம்.
    • மூங்கிலுப்பை வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் கொடுக்கலாம்.
    • மூக்கிரட்டை வேரை அரைக் கைப்பிடி எடுத்து ஒன்றிரண்டாகச் சிதைத்து, 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து இருவேளை அருந்தலாம்.
    • மிளகரணை இலையை உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து உண்ணலாம்.
    • சிற்றரத்தை, ஒமம், அக்கரகாரம் சம அளவு எடுத்துப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து சாப்பிடலாம்.
    • துளசி, தும்பை இலை சம அளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.


    தவிர்க்க வேண்டியவை:

    கிரீம் பிஸ்கட், குளிர்பானங்கள், கலர் சேர்க்கப்பட்ட உணவுகள், எண்ணெய், கொழுப்பு, வாழைப்பழம், திராட்சை, எலுமிச்சை, வாசனைத் திரவிங்கள், ஜஸ்கிரீம், கத்திரிக்காய், அதிகக் குளிர், பனி, குளிரூட்டப்பட்ட அறை.

    #7
  6. 43

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! - படர்தĬ

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! -படர்தாமரை


    Thanks To Doctor Vikatan





    டீனியா (Tinea) என்ற பூஞ்சையினால் ஏற்படும் தோல் நோய்தான் படர்தாமரை. சிவந்த படைகள் உடலில் ஏற்படுவதுதான் இதன் அறிகுறி. படர்தாமரை உடலின் கதகதப்பான மற்றும் ஈரப்பதம் நிறைந்த இடங்களில் விரைவாகத் தாக்கும். தலை, அக்குள், தொடை இடுக்குகள் மற்றும் பாதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தலையில் படர்தாமரை தாக்கும்போது ஆங்காங்கே வழுக்கையான திட்டுகள் காணப்படும். படர்தாமரை நகங்களைப் பாதிக்கும்போது நகங்கள் நிறம் மாறி எளிதில் உடையும். அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்தும். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் தொற்று நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சீப்பு, முகச்சவர உபகரணங்கள், ஆடைகள் மூலமாகவும், கழிவறைகள், குளியலறைகள், நீச்சல்குளம் மூலமாகவும் பரவும். செல்லப் பிராணிகள் மூலமாகவும் பரவும்.

    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

    • சீமை அகத்தி இலையை அரைத்துத் தேங்காய் எண்ணெயில் கலந்து பூசலாம்.


    • கடுக்காய்த் தோல், இந்துப்பு, கிரந்திதகரம், அறுகம்புல், கஞ்சாங்கோரை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, மோர்விட்டு அரைத்துப் பூசலாம்.


    • புங்கம் விதையை அரைத்துப் பூசலாம்.


    • பூண்டை அரைத்து தேன் சேர்த்துப் பூசலாம்.


    • அருகம்புல்லுடன் மஞ்சளை அரைத்துப் பூசலாம்.




    • நிலாவாரை இலையைக் காடி விட்டு அரைத்துப் பூசலாம்.


    • ஜாதிக்காயைத் தேன் விட்டு அரைத்துப் பூச, படர்தாமரை குணமாகும்.


    • சரக்கொன்றைத் துளிர், புளியந்துளிர், மிளகு சம அளவு எடுத்து, அரைத்துப் பூசலாம்.
    • பப்பாளி விதையைக் காடிநீர் விட்டு அரைத்துப் பூசலாம்.


    • சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச் சாறுவிட்டு அரைத்துப் பூசலாம்.


    • ஆகாயத் தாமரை இலையைக் காடி விட்டு அரைத்துப் பூசலாம்.


    • குந்திரிக்கம் நல்லெண்ணெய் வெள்ளை மெழுகு வகைக்கு 32 கி எடுத்து சிறு தீயில் இட்டு, உருக்கி, வடிகட்டி, ஆறிய பின் படர்தாமரை மீது பூசக் குணமாகும்.


    • யூகலிப்டஸ் இலையில் உள்ள சினியோல், பிசைமின் ஆகிய வேதிப்பொருட்கள் படர்தாமரையை உருவாக்கும் பூஞ்சையை அழிக்கின்றன. யூகலிப்டஸ் தைலத்தைப் படர்தாமரை மீது பூசக் குணமாகும்.


    • துளசி இலையை உப்புடன் சேர்த்துப் பூசலாம்.


    • சிவனார் வேம்பு இலையையும் பூவையும் அரைக் கைப்பிடி அளவு எடுத்து, சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்த, படர்தாமரை குணமாகும்.


    • மாதுளம் பழத்தோல், வல்லாரை இலை சம அளவு எடுத்து காடிவிட்டு அரைத்துப் பூசலாம்.


    • கிராம்பை நீர்விட்டு அரைத்துப் பூச, படர் தாமரை குணமாகும்.



    • லவங்கப் பட்டையை நீர் விட்டு மையாக அரைத்துப் பூசலாம். பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு, படர்தாமரையை அழிக்கும்.


    கடைப்பிடிக்க வேண்டியவை:


    • படர்தாமரை வராமல் தடுக்க தோல், நகங்கள், தலைமுடி ஆகியனவற்றைச் சுத்தமாகவும் உலர்வாகவும் பராமரிக்க வேண்டும்.



    • உலர்வான, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.


    • பிறர் பயன்படுத்திய ஆடைகள், உபகரணங்கள் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்
  7. சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!



    பெண்களின் பிறப்புறுப்பின் வழியே 'சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும். 






    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

     கீழாநெல்லி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து 10 நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம்.

     அம்மான்பச்சரிசி இலையை அரைத்துச் சுண்டைக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து பருகலாம்.

     பொடுதலை இலையுடன், சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

     கைப்பிடி அளவு வெள்ளருகுடன் 5 மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தலாம்.

     இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.

     ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.


     பொரித்த படிகாரம், மாசிக்காய், வால்மிளகு சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் சீழ்வெள்ளை, ரத்த வெள்ளை குணமாகும்.

     இளநீரில் ஒரு ஸ்பூன் சந்தனத்தூளை ஊற வைத்து, அந்த நீரை வடித்துப் பருகி வரலாம். .

     திப்பிலி 5 பங்கு, தேற்றான் விதை 3 பங்கு கலந்து நன்றாய்ப் பொடித்து, அதில் 4 கிராம் எடுத்துக் கழுநீரில் 3 நாட்கள் சேர்த்து உண்ணலாம்.

     ஓரிதழ் தாமரை இலை, யானை நெருஞ்சில் இலை இவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து அருந்தலாம்.

     பரங்கிப்பட்டை, சுக்கு, மிளகு, நற்சீரகம் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம்.

     சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.


     ஒரு கைப்பிடி துத்தியிலையை இடித்து 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து அதில் பால், சர்க்கரை கலந்து பருகலாம்.

     சிறு துண்டு கற்றாழையைத் தோல் சீவி, கசப்பு நீங்கப் பத்து முறை நன்கு கழுவி சர்க்கரை சேர்த்து, தினமும் காலையில் சாப்பிட்டுவர வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.

     விஷ்ணு கிரந்திவேர், ஆவாரை வேர்ப்பட்டை சம அளவு எடுத்து அரைத்து அதில் நெல்லிக்காய் அளவு எடுத்துப் பாலில் உண்ணலாம்.

     தண்ணீர்விட்டான் இலையை அரைத்து 30 மி.லி. சாறு எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

     தென்னம்பூவை இடித்து, 30 மிலி சாறு எடுத்து, மோர் சேர்த்துப் பருகலாம்.


    உணவுகள்

    சேர்க்க வேண்டியவை: தர்பூசணி, வெண்பூசணி, வெள்ளரி, வெந்தயம், பசலைக்கீரை, தண்டுக்கீரை, பருப்புக்கீரை, இளநுங்கு, நாட்டு வாழைப்பழம், நல்லெண்ணய், பனங்கிழங்கு.


    தவிர்க்க வேண்டியவை:

    மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுகள். எண்ணெயில் பொரித்த உணவுகள், கோழி இறைச்சி.







  8. இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.

    இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது.

    புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

    காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.



    அறிகுறிகள்:

    குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.


    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

     அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

     ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

     சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

     கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

     வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

     பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

     கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

     மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

     பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

     சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.


    சேர்க்க வேண்டியவை:

    கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.
    தவிர்க்க வேண்டியவை:

    அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி
    .

    கடைப்பிடிக்க வேண்டியவை:

     காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

     உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.

     பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.

     தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

     சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.
  9. 43

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! - அதிஉதĬ


    பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந்தால் அதை அதிஉதிரப்போக்கு எனகிறோம்.

    காரணங்கள்:

    ரத்தம் உறைவதில் ஏற்படும் குறைஷ்பாடுகளினாலும், ரத்தசோகை, தைராய்டு நோய்கள், காசநோய், கருப்பைக் கட்டிகள், சினைப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொண்டதன் பின்விளைவுகள் போன்ற காரணங்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும்.




    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

     அத்திப் பட்டையை மோர் சேர்த்து இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.

     அத்திப் பால் ஐந்து சொட்டு எடுத்து வெண்ணெய் சேர்த்து உண்ணலாம்.

     குங்கிலியத்தை நெய்விட்டுப் பொரித்து நீர் சேர்த்துக் குழைத்து, கால்ஸ்பூன் உண்ணலாம்.

     இளம் வாழைப்பூவை அவித்து 30 மில்லி சாறெடுத்துத் தேன் கலந்து உண்ணலாம்.

     இத்தியின் பிஞ்சை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.

     தொட்டாற்சிணுங்கியின் இலைச் சாற்றை 15 மி.லி. அருந்தலாம்.



     நாவல் பட்டை, ஆவாரைப் பட்டை சம அளவு எடுத்து நான்கு பங்கு நீர் சேர்த்து, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

     கால்ஸ்பூன் லவங்கப் பட்டைப் பொடியை எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

     கவிழ்தும்பை இலையைக் கைப்பிடி அளவு எடுத்துத் தேன் சேர்த்து, வதக்கி நீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம்.

     அசோகப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.

     கட்டுக்கொடியின் இலைச்சாற்றை ஒரு டேபிள்ஸ்பூன் அருந்தலாம்.

     முள்இலவுப் பட்டை, தாமரைக் கிழங்கு, செம்பருத்தி வேர் இவற்றின் பொடியைக் கலந்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.

     மந்தாரைப் பூ மொக்கு ஐந்து எடுத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சிக் கால் டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

     அரசம்பட்டை, ஆலம்பட்டை சம அளவு எடுத்து சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

     மாங்கொட்டைப் பருப்பின் பொடியை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து உண்ணலாம்.

     நிலப் பூசணிக் கிழங்கின் பொடியுடன் சர்க்கரை, வெண்ணெய்ச் சேர்த்துக் கிண்டி நெல்லிக்காய் அளவு உண்ணலாம்.

     வாலுளுவைப் பொடியை இரண்டு கிராம் எடுத்துத் தேனில் கலந்து உண்ணலாம்.

     திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் மூன்று பங்கு சேர்த்து அரைத்து அதில் நான்கு கிராம் நீராகாரத்தில் கலந்து, காலையில் குடிக்கலாம்.

     மாம்பிசின், விளாம்பிசின் பொடி சமஅளவு எடுத்து, அதில் கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.

     கீழாநெல்லியின் வேர்ப்பொடியை அரை ஸ்பூன் எடுத்து நீராகாரத்துடன் கலந்து உண்ணலாம்.


    சேர்க்க வேண்டியவை:

    துவர்ப்புச் சுவை உள்ள உணவுகள், அத்திப் பழம், பேரீச்சை, பால், தயிர், காளான், சிகப்புத் தண்டுக்கீரை, ஈரல்.


    நீக்க வேண்டியவை:

    இஞ்சி, பூண்டு, காயம், அன்னாசி, எள், பப்பாளி, நல்லெண்ணெய்.