SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Wednesday 26 August 2015

குடல் புண் - தடுக்கும் வழிமுறைகள்

இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தின் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு
உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.
புண் எதனால் ஏற்படுகிறது:
குடல் புண் தோன்றுவதற்குரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை. இருப்பினும் புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.
சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.
குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண்.
2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.
குடல்புண் இருப்பதை அறிவது எப்படி:
காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம். இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன.
இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.
நெஞ்சு எரிச்சல்: சிலநேரங்களில் அமில நீரானது, வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம். வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.
இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு.
பிறகு இவ்வலி மறைந்து சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்.
இரைப்பை பாதிக்கும்:
சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின் அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.
மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாக அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ் சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார்.
வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.
இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால் இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து கடுமையாக பாதிக்கப்படும். ஆகவே வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது.
அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது. ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.
கவலையாலும் வரும்:
சாப்பிட வேண்டிய உணவுகளை தவிர்க்க கூடாது. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ வளைவதோ கூடாது. அப்படி செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ் செரிச்சல் ஏற்படும். இரவில் அதிக நேரம் விழித்திருக்க கூடாது. மனநிலையை தடுமாற விடக்கூடாது. அவசரப்படக் கூடாது. கவலைப்படக் கூடாது. கவலையும் அல்சரை கொண்டு வரும். மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்த கூடாது.
செய்ய வேண்டியவை:
குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும், தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும், அதிக வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.
மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும். இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது.
மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப்பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும். எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.
புகை வேண்டாம்:
அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும்.
குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்ன: 
பொரித்த அல்லது தாளித்து செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பன்டைஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயை சாப்பிடக் கூடாது, தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

Sunday 23 August 2015

Simple Search: அர்த்த‍முள்ள‍ இந்துமதம் – கவியரசு கண்ணதாசனின் அற்ப...

Simple Search: அர்த்த‍முள்ள‍ இந்துமதம் – கவியரசு கண்ணதாசனின் அற்ப...: கவியரசு கண்ண‍தாசன் எழுதி, மிகவும் புகழ் பெற்ற‍, அர்த்த‍முள்ள‍ இந்துமதம் வாழ்விலக்கணத்திற்கு இதை விட சிறந்த எடுத்துக்காட்...

லட்சுமி கடாட்சம் பெருக...



*வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது.

* வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.

*வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.

*வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம் அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம்.

*குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வீட்டில் வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் அமர்ந்து செவ்வாய், புதன், கிழக்கே பார்த்து அமர்ந்தும் மற்ற நாட்களில் வடக்கே பார்த்து அமர்ந்தும் படித்தால் படித்தவுடன் மனதில் பதியும் வாய்ப்பு மிக அதிகம்.

*அதேபோல் 15 வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
குறையும் சர்க்கரை உறுதியாய்!!





// ஒரு வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தலையையும், நுனியையும் வெட்டி எறிந்துவிடுங்கள். மீதியுள்ள காயை இரண்டு அல்லது மூன்று துண்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். இரவு படுக்கப் போகும் முன் அரை டம்ளர் தண்ணீரில் அதை ஊறப்போடுங்கள் .காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக வெண்டைக்காய் துண்டங்களை வெளியே எடுத்துப் போட்டுவிட்டு அந்த தண்ணீரைக் குடியுங்கள். (குறைந்தது ஒரு மணி நேரம் காபி, டீ வேறு எதுவும் அருந்த வேண்டாம்.)

Monday 17 August 2015

உடல் துர்நாற்றத்தினை போக்குவது எப்படி??

Sweating
வியர்வை என்பது அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம் தான். நம் உடல் வெப்பநிலையை சீராக இருக்க வைப்பதற்காக வியர்வை சுரக்கிறது. இருந்தாலும், பல பேருக்கு அதிக அளவில் வியர்த்துக் கொட்டும். எவ்வளவு தான் குளிரடித்தாலும், அவர்களுக்கு வியர்வை வெளியேறிக் கொண்டே இருக்கும். சிலருக்கு ஹார்மோன் குறைபாடுகள், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், காரமான உணவுகள், உடற்பயிற்சிகள், மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் அதிக வியர்வை வரும்.
அளவுக்கு அதிகமாக வியர்க்கும் நிலைக்கு ஆங்கிலத்தில் ’ஹைப்பர்ஹிட்ரோசிஸ்’ என்று பெயர். அதிக வியர்வையால் உடம்பிலிருந்து மோசமான வாசனை வெளியேறத் தொடங்கும். சிலருக்கு பரம்பரை பரம்பரையாக இந்தப் பிரச்சனை தொடர்ந்து வரும்.
நமது இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் உடல் துர்நாற்றத்தை போக்குவதற்கான வழிமுறைகளைக் காணலாம்!!!
* வியர்வை துர்நாற்றத்தைப் போக்குவதற்கு சிறந்த வழியென்றால், தினமும் காலையிலும் மாலையிலும் குளிப்பது நல்லது. துர்நாற்றம் வரும் இடங்களை சோப்பு பயன்படுத்தி, நன்கு சுத்தம் செய்ய வேண்டும். இதனால் வியர்க்கும் போது வெளிவரும் நீர் பாக்டீரியாவுடன் சேர்ந்து ஏற்படுத்தும் நாற்றத்தைப் போக்கலாம். இதனால் உடம்பும் சுத்தமாகின்றது.
* குளித்து முடித்த பின், ஒரு டேபிள் ஸ்பூன் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து, இறுதியில் உடலில் ஊற்றிக் கொண்டால், உடல் துர்நாற்றத்தைத் தடுக்கலாம்.
* குளிக்கும் போது, வெள்ளை வினிகரை நீரில் கலந்து, அதனைக் கொண்டு அக்குளை கழுவினால், உடல் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
* குளிக்கும் நீரில், சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொண்டு குளித்தால், உடலில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
ஆப்பிள் சீடர் வினிகரை குளிக்கும் போது, இறுதியில் ஒரு கப் நீரில் கலந்து, அக்குளைக் கழுவினால், அவை சருமத்தில் உள்ள பாக்டீரியாவை அழிப்பதோடு, அதிகப்படியான வியர்வையையும் தடுக்கும்.
குளிக்கும் நீரில் சிறிது புதினா இலையை சேர்த்து ஊற வைத்து, குளித்து வந்தால், உடலில் உள்ள கிருமிகள் நீங்கி, உடல் புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் இருக்கும்.
* குளித்த பின், சிறிது பேக்கிங் சோடாவை அக்குளில் தெளித்துக் கொண்டால், வியர்வை நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.
* தக்காளி சாறும் உடல் துர்நாற்றத்தை தடுக்கும். அதற்கு ஒரு கப் தக்காளி சாற்றினை குளிக்கும் தொட்டியில் ஊற்றி, அதில் நீரை நிரப்பி, அதனுள் 15 நிமிடம் உட்கார்ந்தால், வியர்வை நாற்றமானது வெளிவராமல் இருக்கும்.
சுத்தமான பருத்தி உடைகளை அணிவதன் மூலமும் வியர்வை நாற்றத்தை விரட்டியடிக்கலாம். கசகசவென்று இருக்கும் மற்ற உடைகளைத் தவிர்த்தால், அதிக வியர்வையையும் தவிர்க்கலாம்.
எலுமிச்சையைப் பாதியாக வெட்டி, அதை அக்குள் பகுதிகளில் அரக்கித் தேய்த்து, அதன் பிறகு குளிக்க வேண்டும். இதனால் எரிச்சல் ஏதாவது ஏற்பட்டால், எலுமிச்சையைத் தவிர்த்து விடுங்கள்.
வியர்வையைத் தவிர்ப்பதற்கு வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தலாம். பலவிதமான பெர்ம்யூங்கள் மற்றும் டியோடரண்ட்டுகள் தற்போது கடைகளில் கிடைக்கின்றன. சிலருக்கு இவை அலர்ஜியை ஏற்படுத்தி விடலாம். அவர்கள் இவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது.
உடம்பில் எடை அதிகம் இருந்தாலே அளவுக்கு அதிகமான வியர்வை வெளிவரும். எனவே உடல் எடையைக் குறைத்தால் ஓரளவு பலன் கிடைக்கும். மேலும், காரமான உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வதும் அவசியம்.
தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றை பருகி வந்தால், அதில் உள்ள குளோரோஃபில் வியர்வை நாற்றத்தைப் போக்கிவிடும்.
8 டம்ளர் தண்ணீரில், ஒரு டீஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடைக் கலந்து, ஒரு நாளைக்கு பல முறை துர்நாற்றம் வரும் இடத்தில் ஊற்றிக் கழுவி வந்தால், வியர்வையானது கட்டுப்படுவதோடு, துர்நாற்றமும் நீங்கும்.

Thursday 13 August 2015

கல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்தாத மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக்! – அபாயத் தகவல்

கல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்தாத மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக்! – அபாயத் தகவல்

கல்விக்கட(ன்)ஐ திருப்பிச்செலுத்தாத மாணவர்களுக்கு வங்கிகள் வைக்கும் செக்! – அபாயத் தகவல்
பெற்ற‍வர்களால் தங்களது கல்விக்கு பணம் செலவழிக்க‍ முடியாத இக்கட்டான நேரத்தில்
மாணவர்கள்  தங்களது கல்விக்காக வங்கியில் “ கல்விக் கடன் கேட்டுப் பெறுகின்றனர், அப்ப‍டி கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் அதை திரும்பச் செலுத்தாமல் இருந் தால் அவர்களது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு கடன் கிடைக்காம ல் போய்விடும் அபாயம் உண்டு. ஆம் படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்த முதல் ஆறு மாதத்திலிருந்து கல்விக் கடனை திருப்பிச் செலுத்த ஆரம்பிக்க வேண்டும் என்ற அரசாணை இருக்கிறது.
வேலைக்கு சேர்ந்த அன்றிலிருந்து மூன்று மாதங்களுக் குள் கல்விக் கடனை திரும்ப செலுத்த‍ ஆரம்பிக்காவிட்டால், அது வாராக் கடன் பட்டி யலில் சேர்க்க‍ப்படும் இந்த கல்விக் கடன் வாராக் கடனாக மாறும்போது, கடன்பெற்ற மாணவர்கள் குறித்த விவரங்களை வங்கிகளானது சிபில் அமைப்புக் கு தந்துவிடும். ஒருவரின் பெயர் சிபிலில் பதிவாகிவிட்டால், பிறகு அவரால் எந்த வங்கியி லும் கடன் பெற முடியாத பரிதாப நிலைமைக்கு அவர் தள்ள‍ப்படுவார்,
மேலும் மாணவர்கள் வாங்கிய கடனை வட்டியுடன் முழுவதுமாக சம்பந் தப்பட்ட‍ வங்கியில் செலுத்தி கடன் கணக்கை முடித்தால்தான் சிபிலில் இருந்து வெளியேவர முடியும். இந்த உண்மை தெரி யாமலே சிலமாணவர்கள் தாங்கள் வாங்கிய கல்வி க்கடனை திருப்பிச் செலுத்தா மல் மிகுந்த அலட்சிய மனப்பான்மையுடன்இருக்கின்றார்கள். இதுதவறான செயல். மாணவர்கள் தாங்கள் வாங்கிய கல்விக் கடனை உரிய நேரத்தில் வங்கிக்கு திருப்பிச் செலுத்தி கணக்கை முடித்தால், எதிர்காலத் தில் ஏதேனும் தொழில் தொடங்க கடன் கேட்டோ அல்ல‍து வேறு மாதிரியான கடன் கேட்டோ வங்கியை அணுகும் போது, அந்த வங்கிகள் உங்களுக்கு முன்னு ரிமை அளித்து, கடன் விரைந்து கிடைக்க‍ வழி வகை செய்யும் என்பது உண்மை.

இது பவியின் தளம் .............துளிகள்.: நீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா ? வாங்க பழகுவோம்

நீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா ? வாங்க பழகுவோம்: எல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...


ஆங்கில பாடப் பயிற்சி - 1 (Grammar Patterns 1)

முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடப் பயிற்சி.
இது பாடசாலை பாடத்திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி (Spoken English) போன்றோ அல்லாமல், முழுமையான தமிழ் விளக்கத்துடன்  ஆங்கில இலக்கண பாடத் திட்டத்தைக்கொண்டது. இதில் சகல "Grammar Patterns" களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.

தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றிய விளக்கம்

உதாரணமாக "I do a job" எனும் வாக்கியத்தை தமிழில் மொழி பெயர்ப்போமானால், "நான் ஒரு வேலை செய்கின்றேன்." என்று தான் கூறுவோம். ஆனால் நாம் இந்த ஆங்கில பாடப் பயிற்சியில் "நான் செய்கின்றேன் ஒரு வேலை." என்றே தமிழாக்கம் செய்துள்ளோம். இதற்கான காரணம் இவ்வாறுதான் ஆங்கிலத்தை தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. ஆனால் முடிந்தவரையில் ஆங்கில நடைக்கு ஏற்றாற் போல் தமிழ் விளக்கம் கொடுத்து பயிற்சி செய்தால்; ஆங்கில வார்த்தைகளுக்கு மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆங்கில சொற்களுக்குமான தமிழ் அர்த்தத்தையும் விளங்கிக் கற்க இலகுவாய் இருக்கும் என்பது எமது கருத்தாகும்.

சரி பாடத்திற்குச் செல்வோம்.

இங்கே "do a job" எனும் ஒரு வார்த்தையை இன்றையப் பாடமாக எடுத்துக்கொள்வோம். இவ்வார்த்தையின் தமிழ் அர்த்தம் "செய் ஒரு வேலை" என்பதாகும். இதை "நான் செய்கின்றேன் ஒரு வேலை, நான் செய்தேன் ஒரு வேலை, நான் செய்வேன் ஒரு வேலை" என ஒரே வார்த்தையை 73 விதமாக மாற்றி பயிற்சி செய்வதே இப்பாடத்திட்டத்தின் நோக்கமாகும். இது மிகவும் இலகுவாகவும் அதிவிரைவாகவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளக் கூடிய ஓர் பயிற்சி முறையாகும்.

do a job

1. do a Job.
நான் செய்கின்றேன் ஒரு வேலை.

2. I am doing a job.
நான் செய்துக்கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

3. did a job.
நான் செய்தேன் ஒரு வேலை.

4. I didn't do a job.
நான் செய்யவில்லை ஒரு வேலை.

5. I will do a job.
நான் செய்வேன் ஒரு வேலை.
நான் செய்கிறேன் (சற்றுப் பிறகு) ஒரு வேலை.

6. I won't do a job.
நான் செய்யமாட்டேன் ஒரு வேலை.

7. Usually I don't do a job.
சாதாரணமாக நான் செய்கிறேனில்லை ஒரு வேலை.

8. I am not doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கின்றேனில்லை ஒரு வேலை.

9. I was doing a job.
நான் செய்துக் கொண்டிருந்தேன் ஒரு வேலை.

10. I wasn't doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கவில்லை ஒரு வேலை.

11. I will be doing a job.
நான் செய்துக் கொண்டிருப்பேன் ஒரு வேலை.

12. I won't be doing a job.
நான் செய்துக் கொண்டிருக்கமாட்டேன் ஒரு வேலை.

13. I am going to do a job.
நான் செய்யப் போகின்றேன் ஒரு வேலை.

14. I was going to do a job.
நான் செய்யப் போனேன் ஒரு வேலை.

15. I can do a job.
16. I am able to do a job.
எனக்கு செய்ய முடியும் ஒரு வேலை

17. I can't do a job.
18. I am unable to do a job.
எனக்கு செய்ய முடியாது ஒரு வேலை.

19. I could do a job.
20. I was able to do a job.
எனக்கு செய் முடிந்தது ஒரு வேலை.

21. I couldn't do a job.
22. I was unable to do a job.
எனக்கு செய்ய முடியவில்லை ஒரு வேலை.

23. I will be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கும் ஒரு வேலை.

24. I will be unable to do a job.
எனக்கு செய்ய முடியாமலிருக்கும் ஒரு வேலை.

25. I may be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.

26. I should be able to do a job.
எனக்கு செய்ய முடியுமாகவே இருக்கும் ஒரு வேலை

27. I have been able to do a job. (Perfect Tense பார்க்கவும்)
சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து எனக்கு செய்யமுடியுமாக இருக்கின்றது ஒரு வேலை.

28. I had been able to do a job.
அக்காலத்திலிருந்து/அன்றிலிருந்து எனக்கு செய்யமுடியுமாக இருந்தது ஒரு வேலை.

29. I may do a job.
30. I might do a job.
31. I may be doing a job.
நான் செய்யலாம் ஒரு வேலை.

32. I must do a job.
நான் (கட்டாயம்) செய்ய வேண்டும் ஒரு வேலை.(அழுத்தம்)

33. I must not do a job.
நான் செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யக் கூடாது ஒரு வேலை.

34. I should do a job.
நான் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக அழுத்தம்)

35. I shouldn't do a job.
நான் செய்யவே வேண்டியதில்லை ஒரு வேலை.
நான் செய்யவே கூடாது ஒரு வேலை.

36. I ought to do a job.
நான் எப்படியும் செய்யவே வேண்டும் ஒரு வேலை. (மிக மிக அழுத்தம்)

37. I don't mind doing a job.
எனக்கு ஆட்சேபனையில்லை செய்ய ஒரு வேலை.

38. I have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டும் ஒரு வேலை.

39. I don't have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டியதில்லை ஒரு வேலை.

40. I had to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்பட்டது ஒரு வேலை.

41. I didn't have to do a job.
நான்/எனக்கு செய்ய வேண்டி ஏற்படவில்லை ஒரு வேலை.

42. I will have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படும் ஒரு வேலை.

43. I won't have to do a job.
எனக்கு செய்ய வேண்டி ஏற்படாது ஒரு வேலை.

44. I need to do a job.
எனக்கு அவசியம் செய்ய (வேண்டும்) ஒரு வேலை.

45. I needn't to do a job.
45. I don't need to do a job.
எனக்கு அவசியமில்லை செய்ய ஒரு வேலை.

46. He seems to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றது ஒரு வேலை.

47. He doesn't seem to be doing a job.
அவன் செய்கின்றான் போல் தெரிகின்றதில்லை ஒரு வேலை.

48. He seemed to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரிந்தது ஒரு வேலை.

49. He didn't seem to be doing a job.
அவன் செய்கிறான் போல் தெரியவில்லை ஒரு வேலை

50. Doing a job is useful.
செய்வது(தல்) ஒரு வேலை பிரயோசனமானது.

51.
 Useless doing a job.
பிரயோசனமில்லை செய்வது ஒரு வேலை.

52.
 It is better to do a job.
மிக நல்லது செய்வது ஒரு வேலை.

53.
 I had better do a job.
எனக்கு மிக நல்லது செய்வது ஒரு வேலை.

54.
 I made him do a job.
நான் அவனை வைத்து செய்வித்தேன் ஒரு வேலை.

55.
 I didn't make him do a job.
நான் அவனை வைத்து செய்விக்கவில்லை ஒரு வேலை

56.
 To do a job I am going to America.
செய்வதற்கு ஒரு வேலை நான் போகின்றேன் அமெரிக்காவுக்கு


57. I used to do a job.
நான் பழக்கப்பட்டிருந்தேன் செய்ய ஒரு வேலை.

58.
 Shall I do a Job?
நான் செய்யவா ஒரு வேலை?

59.
 Let’s do a job.
செய்வோம் ஒரு வேலை.

60.
 I feel like doing a job.
எனக்கு நினைக்கின்றது செய்ய ஒரு வேலை.

61.
 I don't feel like doing a job.
எனக்கு நினைக்கின்றதில்லை செய்ய ஒரு வேலை.

62.
 I felt like doing a job.
எனக்கு நினைத்தது செய்ய ஒரு வேலை.

63.
 I didn't feel like doing a job.
எனக்கு நினைக்கவில்லை செய்ய ஒரு வேலை.

64.
 I have been doing a job.
நான் கிட்டடியிலிருந்து/சிலகாலமாக செய்துக் கொண்டிருக்கின்றேன் ஒரு வேலை.

65.
 I had been doing a job.
நான் அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து செய்துக்கொண்டிருந்தேன் ஒரு வேலை.

66.
 I see him doing a job.
எனக்கு தெரிகின்றது அவன் செய்கின்றான் ஒரு வேலை.

67.
 I don't see him doing a job.
எனக்கு தெரிகின்றதில்லை அவன் செய்கின்றான் ஒரு வேலை.

68.
 I saw him doing a job.
எனக்கு தெரிந்தது அவன் செய்கிறான் ஒரு வேலை.

69.
 I didn't see him doing a job.
எனக்கு தெரியவில்லை அவன் செய்கிறான் ஒரு வேலை.

70.
 If I do a job, I will get experience.
நான் செய்தால் ஒரு வேலை எனக்கு கிடைக்கும் அனுபவம்.

71.
 If I don't do a job, I won't get experience.
நான் செய்யாவிட்டால் ஒரு வேலை எனக்கு கிடைக்காது அனுபவம்.

72.
 If I had done a job, I would have got experience.
என்னால் செய்யப்பட்டிருந்தால் ஒரு வேலை எனக்கு கிடைத்திருக்கும் அனுபவம்.(செய்யவும் இல்லை கிடைக்கவும் இல்லை)

73.
 It is time I did a job.
இது தான் நேரம் நான் செய்வதற்கு ஒரு வேலை.

கவனத்திற்கு:

உதாரணமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள பாடத்தில் "do a job" எனும் வார்த்தை சில இலக்கங்களின் போது "doing a job" என வந்துள்ளதை அவதானித்திருப்பீர்கள். அதாவது பிரதான வினைச்சொல்லுடன் 'ing' யும் இணைத்து பயன்பட்டுள்ளது. அவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டிய இலக்கங்களை கீழே கொடுத்துள்ளோம். அவ்விலக்கங்களின் போது எப்போதும் பிரதான வினைச் சொல்லுடன் "ing" யையும் இணைத்தே பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

Verb with + ing: 2, 8, 9, 10, 11, 12, 31, 37, 46, 47, 48, 49, 50, 51, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69.

உதாரணம்:

speak in English
speaking in English. என்று வந்துள்ளதை அவதானிக்கவும்.

Homework:

கீழே 10 வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேலே நாம் கற்றதைப் போன்று ஒவ்வொரு வாக்கியங்களையும் 73 விதமாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். எழுதும் பொழுது சத்தமாக வாசித்து வாசித்து எழுதிப் பயிற்சி செய்யுங்கள். அதுவே எளிதாக உங்கள் மனதில் பதியக் கூடியதாக இருக்கும்.

1. I speak in English.
நான் பேசுகின்றேன் ஆங்கிலத்தில்.
2. I write a letter.
நான் எழுதுகின்றேன் ஒரு கடிதம்.
3. I play cricket.
நான் விளையாடுகின்றேன் கிரிக்கெட்.
4. I fill up the form.
நான் நிரப்புகின்றேன் விண்ணப்பம்.
5. I go to school.
நான் போகின்றேன் பாடசாலைக்கு.
6. I do my homework.
நான் செய்கின்றேன் வீட்டுப்பாடம்.
7. I read a book.
நான் வாசிக்கின்றேன் ஒரு பொத்தகம்.
8. I travel by bus.
நான் பிரயாணம் செய்கின்றேன் பேரூந்தில்.
9. I look for a job.
நான் தேடுகின்றேன் ஒரு வேலை.
10. I ride a bike.
நான் ஓட்டுகின்றேன் உந்துருளி.

கவனிக்கவும்

உதாரணமாக "speak in English" எனும் ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டோமானால் அதை:

I speak in English.
நான் பேசுகின்றேன் ஆங்கிலத்தில்.

I am speaking in English.
நான் பேசிக்கொண்டிருக்கின்றேன் ஆங்கிலத்தில்.

I spoke in English.
நான் பேசினேன் ஆங்கிலத்தில்.

I didn't speak in English.
நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.

I will speak in English.
நான் பேசுவேன் ஆங்கிலத்தில்.

என (மேலே எடுத்துக்காட்டியுள்ளதைப் போன்று) அதே இலக்க வரிசைக் கிரமத்தில் 73 வாக்கியங்களாக மாற்றி எழுதி பயிற்சி செய்யவும். இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறையாகும்.

Long Forms = Sort Forms

Do + not = Don’t
Does + not = Doesn’t
Did + not = Didn’t
Will + not = Won’t
Was + not = Wasn’t
Were + not = Weren’t
Can + not = Can’t
Could + not = Couldn’t
Have + not = Haven’t
Has + not = Hasn’t
Had + not = Hadn’t
Need + not = Needn’t
Must + not = Mustn’t
Should + not = Shouldn’t
Would + not Wouldn't

இப்பாடத்துடன் தொடர்புடை இரண்டு கிரமர் பெட்டன்களின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றையும் பயிற்சி செய்துக்கொள்ளுங்கள்.


மற்றும் இன்றையப் பாடத்தில் நாம் கற்ற 73 வாக்கியங்களும் (அதே இலக்க வரிசைக் கிரமத்தில்) ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும். அப்பொழுது அதனதன் பயன்பாடுப் பற்றியும், இலக்கண விதிமுறைகள் பற்றியும் விரிவாக கற்கலாம். விரிவாக எழுதப்பட்ட பாடங்களுக்கு குறிப்பிட்ட வாக்கியத்துடன் இணைப்பு வழங்கப்படும். அவ்விணைப்பை சொடுக்கி குறிப்பிட்டப் பாடத்திற்கு சென்று அதன் முழுமையான பயன்பாட்டை கற்றுக்கொள்ளலாம். பிழையற்ற உச்சரிப்பு பயிற்சிக்கு பாடங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒலிதக்கோப்புகளை சொடுக்கி பயிற்சி பெறுங்கள்.

இந்த கிரமர் பெட்டன்களைத் தவிர மேலும் பல கிரமர் பெட்டன்கள் உள்ளன. அவை உரிய பாடங்களின் போது வழங்கப்படும்.


போன்றவற்றையும் பார்க்கலாம்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

"பேசும் மொழியைத்தான் இலக்கண விதிகளாக வகுக்கப்பட்டுள்ளதே தவிர, உலகில் எந்த ஓர் மொழியும் இலக்கணக் கூறுகளை வகுத்துவிட்டு மக்களின் பேச்சுப் புழக்கத்திற்கு வரவில்லை."

இக்கூற்று உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். எனவே "ஆங்கில இலக்கணம்" என்றவுடன் அதனை கடினமானதாக கருதாமல், மேலே கூறப்பட்டுள்ள விதிமுறைகளின் படி தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். அவை உங்கள் மனதில் பதியும் வண்ணம் தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். ஆங்கிலத்தில் "Well Begun is Half Done " என்பர், அதன் பொருள் "எதனையும் முறையாக ஆரம்பித்து விட்டீர்கள் என்றாலே பாதி வெற்றி" என்பதுதான். எனவே இந்த முதல் பாடமே உங்களுக்கான சிறந்த ஆரம்பமாக இருக்கட்டும்! தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். முடிந்தவரை அச்சமின்றி சத்தமாகப் பேசி பயிற்சி செய்யுங்கள். அதுவே கூடிய விரைவில் இயல்பாக ஆங்கிலம் பேசும் ஆற்றலை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்.

மீண்டும் கூறிக்கொள்கின்றோம். இது மிகவும் எளிதாக ஆங்கிலம் கற்பதற்கான ஓர் பயிற்சி முறையாகும்.

சரி பயிற்சிகளைத் தொடருங்கள்!

மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்!

எமது இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி!

அன்புடன்
அருண் HK Arun

Find us on FacebookTwitterPinterest and Google Plus

Download As PDF

மரக்கறிகள் (List of Vegetables)

உலகில் விளையும் மரக்கறி வகைகளின் பட்டியல் இங்கே இடப்பட்டுள்ளது. இவற்றில் சகல மரக்கறிகளுக்கான தமிழ் பெயர்கள் இல்லை என்றே நினைக்கின்றேன்.

இருப்பினும் இங்கே இடப்பட்டிருக்கும் மரக்கறிகளின் ஆங்கிலப் பெயர்களை சொடுக்கி அப்பெயருக்குறிய மரக்கறிகளின் நிழல் படங்களைப் பார்த்து அறிந்துக்கொள்ளலாம்.


இலஆங்கிலம்தமிழ்
1Alfalfa Sproutsஅல்பல்பா முளைக்கீரை
2Artichokeஆர்றிச்சோக்
3Arugulaஅருகுலாக் கீரை
4Asparagusதண்ணீர்விட்டான் கிழங்கு
5Aubergines/Eggplantகத்தரிக்காய்
6avocadoயாணைக்கொய்யா
7Bamboo Shootsமூங்கில் குருத்து
8Bean Sproutsஅவரை முளை
9Beet Greensஅக்காரக்கீரை
10Beetrootஅக்காரக்கிழங்கு/ சர்க்கரைக் கிழங்கு
11Bell Peppers/ Capsicumகுடைமிளகாய்
12Bitter Gourdபாகற்காய்/ பாவக்காய்
13Bitter Cucumberபாகற்காய் பெரிது
14Bok Choi/ Chinese Cabbageபொக்ச்சோய்
15Borlotti Beansசிகப்பு அவரை
16Bottle Gourdசுரைக்காய்
17bread fruitகொட்டைப்பலா/ ஈரப்பலா
18Brinjalகத்தரிக்காய்/வழுதுணங்காய்
19Brocoli(பச்சை) பூக்கோசு
20Broccoli Rape/ Rapiniகோசுக்கீரை
21Brussels Sproutsகளைக்கோசு
22Butter Head Lettuceஒரு விதக் கோசுக்கீரை
23Cabbageமுட்டைக்கோசு
24Caiguaகைகுவா
25Carrotகுருக்கிழங்கு
26Cassava/ Tapiocaமரவள்ளிக் கிழங்கு
27Cauliflowerவெண்பூக்கோசு/ கவிப்பூ
28Celeryசீவரிக்கீரை
29Celtuceஒரு விதத் தண்டுக்கீரை
30Ceylon Spinachசாரணைக்கீரை
31Chayoteசவ்சவுக்காய்
32Cherry Tomatoesகுருந்தக்காளி
33Cilantro/ Corianderகொத்தமல்லி
34Cluster Beansகொத்தவரை
35Collardsசீமை பரட்டைக்கீரை
36Cressதளிர்பயறு
37Cucumberவெள்ளிரிக்காய்
38Daikon radishவெண் முள்ளங்கி
39Endiveஒரு வகை கோசு (சலாது)
40Fava bean/ Broad beanஅவரை (போஞ்சி)
41Fiddleheadமீனாக்கொழுந்து
42Florence Fennelஒரு வகைச் சீமைக்கீரை
43Flowering Cabbage(மலர்ப்போன்ற) கோசு
44French beanபிரஞ்சு அவரை (போஞ்சுக்காய்)
45Golden Nuggest Squashஒருவகை சிறியப் பூசணி
46Green Onions/ Spring Onoinsவெங்காயத்தாள்(பூ
47Humberg parsley(சிறியவகை) வெண்முள்ளங்கி
48Haricot Beansமெல்லிய அவரை
49Drum stickமுருக்கங்காய்/ முருங்கைக்காய்
50Ironbark Pumpkinகற்பூசணி
Kai-Lan
52Kaleபரட்டைக்கீரை
53Kohlrabiநோக்கோல்
54Kohlrabi Purpleநோக்கோல் (ஊதா)
55Kohilaகோகிலத்தண்டு
56Lady's Finger/ Okraவெண்டைக்காய்/ வெண்டிக்காய்
57Leeksலீக்ஸ்
58Lettuceஇலைக்கோசு
59Lettuce Redஇலைக்கோசு (சிகப்பு)
60Lotus rootதாமரைக்கிழங்கு
61Marrow(மிகப்பெரிய வகையான) பூசணி
62Minikin Pumpkinவட்டுப்பூசணி
63Mintபுதினா
64Mizunaமிதுனாக்கீரை
65Pak Choiபச்சோய்
66Parsleyவேர்க்கோசு
67Pasnipsஒரு வகை முள்ளங்கி
68Parwalஒரு வகை சிறியக்காய்
69Plantainகறி வாழை
70Potatoஉருளைக்கிழங்கு
71Pumpkinபூசணிக்காய்/ பறங்கிக்காய்/வட்டக்காய்
72Radicchio/ Red chicoryசெங்கோசு
73Red Carrotசெம்முள்ளங்கி
74Radishமுள்ளங்கி
75Rainbow Chardவானவில் கோசுக்கீரை
76Ridge Gourd/Luffaபிசுக்கங்காய்/ பீர்க்கங்காய்
77Ribbed Courdபிசுக்கங்காய்/ பீர்க்கங்காய்
78Rhubarbஒரு வகை பெரிய இலைக்கீரை
79Romanesco Broccoliகடற்சிப்பிக்கோசு
80Samphireஒருவகை தண்டுக்கீரை
81Savoy Cabbageசாவோய் பூக்கோசு
82Shallotசிறிய வெங்காயம்
83Snake bean/ Long beanபயத்தங்காய்
84Snake Gourdபுடலங்காய்
85Snow Peaஒரு வகை அவரை
86Solanum/ Tindaவட்டுக்காய்
87Solanum torvom/ Pea auberginesசுண்டைக்காய்
88Squashசுரைக்காய்
89Spaghetti Squash(இசுப்பெகடி) பூசணி
90Spinachகீரை
91Sweet Potatoவற்றாளை/ சர்க்கரை வள்ளி
92Banana Flowerவாழைப்பொத்தி/ வாழைப்பூ
93Tatsoiரற்சோய்
94Tomatoதக்காளி
95Tomato Cherryகுருந்தக்காளி
96Tomato Hybridசீமைத்தக்காளி
97Turnipஒரு வகை முள்ளங்கி
98Water Chestnutஒருவகைக் காய்
99Water Spinach/ Kang Kungகங்குங் கீரை
100Wax beanமஞ்சல் அவரை/ மஞ்சல் போஞ்சி)
101West Indian Gherkinஒரு வகை மேற்கிந்தியக் காய்
102White Bitter gourdவெள்ளைப் பாகற்காய்
103White Eggplantவெள்ளைக் கத்தரி
104White globe radishவெண்ணுருண்டை முள்ளங்கி
105Zucchiniசீமைக்கூடாரக்காய்

கவனிக்கவும்

இங்கே இடப்பட்டிருக்கும் மரக்கறிகள் அனைத்திற்கும் இணையானத் தமிழ் பெயர்கள் இல்லை அல்லது எமக்கு தெரியாது என்பதை அறியத் தருகின்றோம். அதேவேளை அனைத்து மரக்கறிகளுக்குமான தமிழ் பெயர்கள் இருக்கிறதா என்றால் நிச்சயம் இருக்காது என்றே கூறவேண்டும். காரணம் வெவ்வேறு நாடுகளில் விளையும் காய்கறிகளூக்கெல்லாம் தமிழில் பெயரிடப்பட்டிருக்காது எனும் நம்பிக்கைத்தான்.

ஆனால் அன்றாடம் தமிழர் உணவில் பயன்படும் மரக்கறி வகைகளின் பெயர்கள், தமிழில் சூட்டப்பட்டப் பெயர்கள், தமிழரான எமக்கே தெரியவிட்டால் வெட்கப்படவேண்டியவர்களில் நானும் ஒருவன் தான்.

இதுப்போன்ற சமயங்களில் தான் இராம்கி ஐயா போன்றோரின் தமிழ் பணியின் அவசியம் புரிகின்றது. இங்கே இந்த மரக்கறிகள் பட்டியலில் இடப்பட்டிருக்கும் அக்காரக்கிழங்கு, குருக்கிழங்கு போன்ற பெயர்சொற்கள் அவரின் பதிவூடாக அறிந்துக்கொண்டது தான்.

இவற்றையும் பார்க்கலாம்.

பழங்கள்

மரக்கறிகள்

தாணியங்கள்

கிழங்கு வகைகள்

நன்றி. காய்கறி வகைகள், காய்கறிகள்அன்புடன் அருண் Tamil Vegetables, Glossary of Vegetables in Tamil Download As PDF

13 comments:

Anonymous said...
Respected sir, am Sriram.C,TamilNadu. i dont know very well in english to day i see our "aangilam" blogspot by God's gift, it is excellent to learn an english what i tell i dont know words, Hats of U sir , Take Care, With best Regards - Sriram.C(sriram3112@yahoo.co.in)
HK Arun said...
- Sriram.C

வாழ்த்துக்களுக்கு நன்றி.
jeyapratha said...
Really very useful its. well done Arun.

Jeyapratha
sivakumar said...
This is very useful for me...thanks. One suggestion,please change text color from sky blue to same dark color. Because it seem to be hard to read...
HK Arun said...
- Jeyapratha.

உங்கள் கருத்துக்கு நன்றி
HK Arun said...
- Sivakumar

இளநீல எழுத்துக்கள் வாசிப்பது கடினம் என்று எழுதியிருந்தீர்கள். மாற்ற முயற்சிக்கின்றேன்.

நன்றி சிவகுமார்
kalis said...
this is very useful to me, because i learned english grammar easily.
HK Arun said...
- kalis

//this is very useful to me, because i learned english grammar easily.//

நன்றி நண்பரே
Anonymous said...
thank u sir..........
Gnanaraja Alankara Sahaya Benedict said...
Dearest Arun
As your NAME represents the LIGHT PROVIDER {SUN} YOU too throw LIGHT to people who are in DARK.
Bow my head & salute
GOD BLESS YOU & YOUR PEOPLE WITH THE VERY BEST OF EVERYTHING IN THIS ALREADY BLESSED LIFE

ALANKARA YES BENEDICT
guhan said...
thanks a lot for sharing this tutorial with us
Karthick Raja said...
What is the botanical name of sukuti keerai? Anyone knows?
Karthick Raja said...
What is the botanical name of sukuti keerai. Anyone who knows please post.....

Post a Comment



உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்து பாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.

Enter your email address:

Delivered by FeedBurner