SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Sunday 30 October 2016

sivamgi.blogspot.com: இஞ்சி டீயின் அற்புத பலன்கள்Share on facebookShare...

sivamgi.blogspot.com: இஞ்சி டீயின் அற்புத பலன்கள்
Share on facebookShare...
: இஞ்சி டீயின் அற்புத பலன்கள் Share on facebook Share on twitter Share on google_plusone_share Share on print More Sharing Service...

sivamgi.blogspot.com: இஞ்சி டீயின் அற்புத பலன்கள்Share on facebookShare...

sivamgi.blogspot.com: இஞ்சி டீயின் அற்புத பலன்கள்
Share on facebookShare...
: இஞ்சி டீயின் அற்புத பலன்கள் Share on facebook Share on twitter Share on google_plusone_share Share on print More Sharing Service...

sivamgi.blogspot.com: ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.மஞ்சள் காமாலை நோய்க்...

sivamgi.blogspot.com: ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.மஞ்சள் காமாலை நோய்க்...: ஆயுர்வேதம் & சித்த மருத்துவம். மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை! பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதா...

பாட்டி வைத்தியம்: மஞ்சள் காமாலை குணமடைய மருந்து - கீழாநெல்லி

பாட்டி வைத்தியம்: மஞ்சள் காமாலை குணமடைய மருந்து - கீழாநெல்லி: முற்றிய காமாலை நோய் உள்ளவர்களுக்கு கீழாநெல்லி வேரை பச்சையாக அரைத்து 17 கிராம் அளவில் பாலில் கலந்து கொடுத்தால் காமாலை போகும்.

sivamgi.blogspot.com: மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!...

sivamgi.blogspot.com: மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!!



...
: மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!! மஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு !!! பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானத...

மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் பூவரசு

உடலின் செயல்பாட்டிற்கு ஊக்க சக்தியை அளிப்பது கல்லீரல்தான். இந்த கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் பலவகையான இன்னல்களை சந்திக்க நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த வேண்டியது அவசியம்.
கல்லீரலின் பலவீனம்தான் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம். பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்புச் சத்து நிறைந்தது. பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.
பூவரசன் பழுத்த இலை – 2
பூவரசன் பழுத்த காய் – 4
சீரகம் – 2 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
பூவரசம் பட்டை – 1 துண்டு
கீழாநெல்லி – 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் – 4
சிறுநெருஞ்சில் – 5 கிராம்
இவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து, 3 கப் தண்­ணீரில் போட்டு கொதிக்க வைத்து 1/2 கப்பாக வந்தவுடன் அருந்தி வந்தால் கல்லீரல் பலப்படும். கை, கால் நடுக்கம் குறையும். மஞ்சள் காமாலை நோயை அறவே நெருங்க விடாமல் உடலை பாதுகாக்கும்.
.pasumaikudil.com


மஞ்சள் காமாலை 


மஞ்சள் காமாலை நோய் ஆங்கிலத்தில் ஹெப்பாடைட்டிஸ் Bஎன்பார்கள்.இந்த வைரஸ்சானது கல்லீரலை பாதிக்கச்செய்து உயிரை கொல்லும் சக்தி படைத்தது.இதற்கு ஆங்கில(அலோபதி)மருத்துவத்தில் உருப்படியான மருந்துகள் கிடையாது.ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் எவ்வளவு பாதிப்படைந்து இருந்தாலும் வெறும் ஐந்து நாட்களில் பூரண குணம் ஆகும் மருந்து உள்ளது.சுலபமாக விழுங்குவதற்கு அந்த மருந்து கம்பெனி இப்பொழுது மாத்திரை வடிவில் கொண்டு வந்துள்ளது.இதன் விலை ஒரு மாத்திரை ஒரு ரூபாய் மட்டுமே.ஒரு நூறு ரூபாய் செலவில் குணமாகக்கூடிய நோய்.
https://www.facebook.com/groups/siddhar.science
மருந்தின் பெயர் : Kynotomine
கம்பெனி பெயர் : J&J dechane.
சாப்பிடும் அளவு : பெரியவர்கள் காலை மாலை 2மாத்திரைகள் வீதமும், சிறியவர்கள் காலை மாலை 1மாத்திரை வீதமும் சாப்பிடவேண்டும்.
ஆங்கில வைத்தியர்களே உங்களுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன் தயவு செய்து இந்த மருந்தை பயன்படுத்தி மஞ்சள் காமாலை நோயை விரட்டி அடியுங்கள்.பணத்திற்காக உயிரோடு விளையாடாதீர்கள்.உயிர் விலைமதிப்பில்லாதது.எல்லா சித்த & ஆயுர்வேத மருந்துகடைகளிலும் கிடைக்கிறது.
எல்லோரும் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே
நா.முத்துக்குமார் அவர்களுக்கு இது சமர்ப்பணமாக இருக்கட்டுமே!!
அன்புடன், இரா.செந்தில்குமார்.
(சித்த மருத்துவர்).
https://www.facebook.com/groups/siddhar.science

தமிழ்த்துளி: மஞ்சள் காமாலை-A(HEPATITIS-A) அவசியம் அறிய வேண்டியவ...

தமிழ்த்துளி: மஞ்சள் காமாலை-A(HEPATITIS-A) அவசியம் அறிய வேண்டியவ...:   மஞ்சள்காமாலை என்பது பொதுவாக அனைவரும் கேள்விப்பட்ட வியாதிதான். ஆனால் அது ஏன் வருகிறது வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பவை பற்றித் தேவையான...

sivamgi.blogspot.com: Home  »  ஆரோக்கியம்   »   மஞ்சள் காமாலை நோயை குணப...

sivamgi.blogspot.com: Home  »  ஆரோக்கியம்   »   மஞ்சள் காமாலை நோயை குணப...: Home   »   ஆரோக்கியம்    »   மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் பூவரசு மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் பூவரசு   ஆரோக்கியம் உட...

sivamgi.blogspot.com: சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!பொதுவாக மஞ்சள் க...

sivamgi.blogspot.com: சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!
பொதுவாக மஞ்சள் க...
: சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத...

Tuesday 25 October 2016

blouse cutting and stitching in tamil by using old blouse | blouse cutti...

Chudidar Cutting in Tamil | Chudidar Cutting and stitching in tamil, சுட...

சித்தர் பிரபஞ்சம்: மஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித...

சித்தர் பிரபஞ்சம்: மஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித...: மஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம்  மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம்  ...

சித்தர் பிரபஞ்சம்: அதிசய மூலிகை வித்தைகள் பற்றி செயல் விளக்கம் - ராஜ்...

சித்தர் பிரபஞ்சம்: அதிசய மூலிகை வித்தைகள் பற்றி செயல் விளக்கம் - ராஜ்...: அதிசய மூலிகை வித்தைகள் பற்றி செயல் விளக்கம் - ராஜ் TV கோப்பியம் நிகழ்ச்சி -  Raj TV Koppiyam அதிசய மூலிகை வித்தை...

சித்தர் பிரபஞ்சம்: மஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித...

சித்தர் பிரபஞ்சம்: மஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித...: மஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம்  மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம்  ...

மணக்கால் அய்யம்பேட்டை : அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்...

மணக்கால் அய்யம்பேட்டை : அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பய‌னுள்...: 1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கு...

Monday 24 October 2016


பாபநாசம் மருத்தவமனை நோட்டீஸ்

நெடுஞ்சாலை: மஞ்சள் காமாலைநோய்க்கு மருந்து

நெடுஞ்சாலை: மஞ்சள் காமாலைநோய்க்கு மருந்து: மஞ்சள்காமாலை நோய்க்கு எந்த மருந்துவம் சிறந்தது  நாட்டு மருத்துவம் என சொல்லப்படும் பரம்பரை வைத்தியமே சிறந்தது          என் மகளுக்கு...

sivamgi.blogspot.com: Home  »  ஆரோக்கியம்   »   மஞ்சள் காமாலை நோயை குணப...

sivamgi.blogspot.com: Home  »  ஆரோக்கியம்   »   மஞ்சள் காமாலை நோயை குணப...: Home   »   ஆரோக்கியம்    »   மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் பூவரசு மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் பூவரசு   ஆரோக்கியம் உட...

sivamgi.blogspot.com: சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!பொதுவாக மஞ்சள் க...

sivamgi.blogspot.com: சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!
பொதுவாக மஞ்சள் க...
: சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத...

நெடுஞ்சாலை: மஞ்சள் காமாலைநோய்க்கு மருந்து

நெடுஞ்சாலை: மஞ்சள் காமாலைநோய்க்கு மருந்து: மஞ்சள்காமாலை நோய்க்கு எந்த மருந்துவம் சிறந்தது  நாட்டு மருத்துவம் என சொல்லப்படும் பரம்பரை வைத்தியமே சிறந்தது          என் மகளுக்கு...

Wednesday 19 October 2016

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): எந்த ஹோரையில் என்ன காரியம் செய்தால் வெற்றி அடையலாம...

AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): எந்த ஹோரையில் என்ன காரியம் செய்தால் வெற்றி அடையலாம...: பலரும் அன்றாட செயல்களைக்கூட பஞ்சாங்கம், ஜோதிடத்தை அனுசரித்து நடந்து கொண்டு நன்மைகளை அனுபவித்து வருகின்றர். அந்த வகையில் ஹோரை சாஸ்திரத்தை...

Sunday 16 October 2016


அசத்தும் அசைவ உணவுகள்
30 July
கொங்கு ஈரோடு குப்பண்ண மட்டன் பிரியாணி
மாஸ்டர் ரமேஷ் குமார் நாயுடு - 08008135156
தேவையான பொருட்கள்:
சீரக சம்பா அரிசி - 3 கப்
மட்டன் - அரை கிலோ
இஞ்சி - 50 கிராம்
பூண்டு - 25 பல்
பெரிய வெங்காயம் - 4
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 6
கிராம்பு - 4
பட்டை - 4 துண்டு
ஜாதிக்காய் - பாதி
ஏலக்காய் - 4
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
முந்திரி - 15
தயிர் - அரை கப்
எலுமிச்சம் பழம் - ஒரு மூடி
புதினா - ஒரு கட்டு
மல்லித் தழை - ஒரு கட்டு
நெய் - அரை கப்
உப்பில்லாத வெண்ணெய் -அரை கப்
எண்ணெய் - அரை கப்
உப்பு
தாளிக்க:
கிராம்பு - 3
பட்டை - 3 சிறிய துண்டு
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - ஒன்று
சோம்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
1.மட்டனில் கால் கப் தயிர், மஞ்சள் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
2.பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய சின்ன வெங்காயத்தை லேசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
3.பச்சை மிளகாயை கீறி வைக்கவும். பூண்டை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
4.பாத்திரத்தை அடுப்பில் வைத்து உப்பில்லாத வெண்ணெய்,நெய், எண்ணெய் மூன்றுடையும் சேர்த்து ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5.வெங்காயம் பொன்னிறமானதும் பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.
6.பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
7.வெங்காயக் கலவை 2 நிமிடங்கள் வதங்கியதும் வறுத்து பொடித்தவற்றை சேர்த்து மிளகாய் தூள் போட்டு வதக்கவும்.
8.5 நிமிடங்கள் வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.
9.தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர் சேர்க்கவும்.
10.தேங்காயுடன் இஞ்சி, முந்திரி சேர்த்து மிக்ஸியில் அரைத்து தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும்.
11.இந்த பிரியாணியின் விசேஷமே தேங்காயும், இஞ்சியும் , முந்திரியும் சேர்த்து அரைத்து பால் எடுப்பதுதான். இதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் முந்திரி சேர்ப்பது ரிச்னஸ்காகத்தான்.
12.தேங்காய் பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும். உப்பு, புதினா, மல்லித் தழை சேர்க்கவும்.
13.ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு வேகவிடவும். பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும். பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்.


சக்கரை நோய்க்கு மிக சிறந்த இயற்கை மருத்துவம் ;-
440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம்.
நண்பருக்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும். அதான். அந்த அளவை எப்படி சரி செய்வது. எவ்ளோ இன்சுலின் , எவ்ளோ மாத்திரைகள். எத்தினை ஆயிரங்கள், லக்ஷங்கள் மருந்திற்கு என்று செலவு செய்வது. சரி ஆகவே மாட்டேங்கர்தே. இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா. இருக்கிறது. நண்பருக்கு இருந்த சுகர் எவ்ளோ தெரியுமா. கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க. 440. ஒரே மாதத்தில் அது 240 ஆக ஆனது. எப்படி.
இயற்கை மருத்துவ ஆலோசனைப்படி நிலவேம்பு என்னும் மூலிகையை தினமும் சாப்பிட்டு வந்தாங்க.நண்பருக்கு மட்டும் அல்லாமல் பலருக்கும் நிலவேம்பு கஷாயம் குடித்ததன் பலனாக இன்று சக்கரை வியாதி பூர்ணமாக குணம் அடைந்து விட்டது.
நிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவிய சமயத்தில், அதற்க்கு நிலவேம்பு மிக சிறந்த மருந்து என்று தமிழக அரசாங்கமே அறிவிப்பு வெளியிட்டது உங்களில் சிலருக்கு நியாபகம் இருக்கலாம்.
இதை எவ்வாறு பயன் படுத்துவது- இவற்றோடு கொத்தமல்லி, கிச்சலி தோல் எல்லாம் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொல்வார்கள். அது தேவையில்லை. விருப்பபட்டால் சேர்க்கலாம். இரண்டு டம்ப்ளர் நீரில் அதிக பக்சம் 10, 15 கிராம் நிலவேம்பு போட வேண்டும். 15 கிராம்க்கு மேல் போட்டால் ஓவர் டோஸ். அவர், அவர் வயது, உடல் வாகிற்கு தகுந்தார் போல் டோஸேஜ் கொஞ்சும் கூடலாம், குறையலாம். ஆனால் டோஸேஜ் குறைந்தால் கூட பிரச்சனை இல்லை. அதிகரித்தால் ஆபத்து. பத்து கிராம் என்பது சிறுவர், பெரியவர் அனைவருக்கும் ஏற்று கொள்ளும் சரியான டோஸேஜ். வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்கள் சக்கரையின் அளவை சோதனை செய்யுங்கள். அதற்க்கு தகுந்தார் போல் நீங்கள் டோஸேஜ்ஜை அதிகரித்து கொள்ளலாம். ஆனால் அதிக பக்சம் 15 கிராம் தான்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிலவேம்பின் ஆரம்ப விலை எவ்ளவு தெரியுமா. வெறும் 55 ரூபாய். சில நாட்டு மருந்து கடைகளில் இதை விட விலை குறைவாகவும் கிடைக்கலாம், கூடவும் கிடைக்கலாம்.
பின் குறிப்பு- உடல் ஆரோக்கியத்திற்கு இனிப்பாக இருக்கும் பெரும்பாலானவை நாவிற்க்கு கசப்பாகவே இருக்கும். நிலவேம்பும் அதற்க்கு விதி விலக்கல்ல. நிலவேம்போடு தேனை சிறிது கலந்து குடித்தால் அது இனிப்பாகவும் இருக்கும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை சற்று கூட்டுவதாகவும் இருக்கும். தேனில் நிறைய ட்யூப்லிகேட் வருகிறது. காதியில் சுத்தமான மலை தேன் கிடைக்கும். சரி. சக்கரை வியாதி உள்ளவர்கள் நிலவேம்பில் தேன் கலந்து குடித்தால் சக்கரை வியாதி குணம் அடையுமா. என்னும் சந்தேகம் வரலாம். நிச்சயம் குணம் அடையும். நிலவேம்பின் மருத்துவ குணத்தை முறிக்கும் அளவு சக்தி தேனிர்க்கு இல்லை. என்ன ஒரு ரெண்டு, மூணு நாள் முன்ன, பின்ன ஆலாம். தினமும் இன்சுலின் போட்டு கொள்ளும் அவஸ்தைக்கு மூக்கை பிடித்தவாறே மடக்குனு ஒரு 30, 50 மில்லி நிலவேம்பு நீரை குடிப்பது கஷ்ட்டமாக இருக்காது. முதல் 30 நாள் கஷ்ட்டமாக இருக்கும். 31 ஆவது நாள். சக்கரை வியாதியே உங்களுக்கு இருக்காது.

Thursday 13 October 2016

Tomato briyani in tamil

தக்காளி சாதம் - தமிழ் / Tomato Rice - Tamil

தக்காளி ரசம் | Thakkali rasam | Easy Tomato Rasam in Tamil | Samayal kur...


இஞ்சி பூண்டு விழுது 1 டேக
உப்பு தேவையான அளவு
மிளகாய்தூள் 1 டீக)
தாளிக்க ;கடுகு சோம்பு கருவேப்பிலை நல்லெண்ணெய் மிளகாய் வத்தல், வெங்காயம்1,பூண்டு இஞ்சிசின்னதா அரிந்தது ,1 தக்காளி மிக்சியில் அரைத்துக் கொள்ளவும் .
செய் முறை#
காலிபிளவரை சின்னதாக கட் பண்ணி இஞ்சி பூண்டு விழுது மிளகாய்தூள் உப்பு போட்டு தடவி வைத்துக்கொள்ளவும்.இந்த கலவையை நான் மைக்கரோஅவனில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தேன் .அவன் இல்லையென்றால் தோசைக்கல்லில் மிதமான சூட்டில் வேக வைக்கவும்(சில்லி மாதிரி) பின் ஒரு வடச்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு கருவேப்பிலை, வெங்காயம்,இஞ்சி பூண்டு , அரைத்த தக்காளி ,வெந்த காலிபிளவர்,பேலியோ மசாலா 1 டேக,உப்பு போட்டு வதக்கவும்.தோசைக்கல்லில் சிறிது வெண்ணெய் விட்டு பன்னீரை உப்பு,கரம் மசாலா போட்டு ஒரு பிரட்டு பிரட்டிக்கொள்ளவும்.இறக்கும் முன்னாடி பனீரை போட்டு ஒரு கிண்டு கிண்டி இறக்கவும்.சுவையான காலிபிளவர் பனீர் கறி ரெடி.கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

Sunday 2 October 2016

வாஸ்து சாஸ்திரம் VASTHU SASTHRAM VASTU SHASTRA BY KALAIARASAN KALIYAPERUMAL FROM KATTUMANNARKOIL: Vasthu for door : மனையடி சாஸ்திரம் : வாஸ்து சாஸ்தி...

வாஸ்து சாஸ்திரம் VASTHU SASTHRAM VASTU SHASTRA BY KALAIARASAN KALIYAPERUMAL FROM KATTUMANNARKOIL: Vasthu for door : மனையடி சாஸ்திரம் : வாஸ்து சாஸ்தி...: internet advertising உங்கள் வீடு கிழக்கு பார்த்து இருந்தால் நீங்கள் வடகிழக்கில் வடக்கு பக்கம் ஒட்டி வாசல் கதவு வைக்க வேண்டும்.  ...

Neerkondar Entammal Venkudusamy Naidu: செவ்வாய் தோஷம் என்பது என்னவென்று தெரியுமா!

Neerkondar Entammal Venkudusamy Naidu: செவ்வாய் தோஷம் என்பது என்னவென்று தெரியுமா!: செவ்வாய் தோஷம் என்றாலே அலறித்துடிப்பவர்கள்தான் அதிகம். ஏன் என்றால் கல்யாணம் என்பது பெரும் பாடாக அமைந்துவிடும் என்பதால். அனால் செவ்வாய் தோ...

Neerkondar Entammal Venkudusamy Naidu: ஒ‌ர் இடத்தின் பிரதானமாக கருதப்படும் வடகிழக்கு மூலை...

Neerkondar Entammal Venkudusamy Naidu: ஒ‌ர் இடத்தின் பிரதானமாக கருதப்படும் வடகிழக்கு மூலை...:   இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்களாக கருதப்படும் ஓரறிவு தாவரங்கள் முதல் பகுத்தறிவ...

ரூபாய் நோட்டுகளால் பரவும் நோய்கள்! எச்சரிக்கை - Be careful while Touchin...

Neerkondar Entammal Venkudusamy Naidu: யோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்...

Neerkondar Entammal Venkudusamy Naidu: யோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்...: யோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள். . வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையா...

Nraj Sri: புரட்டாசி சனிக்கிழமை விரதம் கடைபிடிக்கும் முறை

Nraj Sri: புரட்டாசி சனிக்கிழமை விரதம் கடைபிடிக்கும் முறை: புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வெங...

. : வாஸ்துவின் அடிப்படை விதிகள்!

. : வாஸ்துவின் அடிப்படை விதிகள்!: ஒரு வீடோ அல்லது தொழில் நிறுவனமோ அமைக்கப்படும்போது அதனை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி அமைப்பது சிறந்தது.  வாஸ்துவில் மிக முக்கியமாக கடை...

Nraj Sri: வீட்டில் செல்வம் செழித்து வளமாக வாழ

Nraj Sri: வீட்டில் செல்வம் செழித்து வளமாக வாழ: 1. ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.  2.படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து பட...

தினம் ஒரு கீரை! ஒரு கம்ப்ளீட் கைடு

உணவில் தினம் ஒரு கீரை சேர்ப்பது, உடலுக்கு ஆரோக்கியம். வைட்டமின்களும், தாது உப்புக்களும், கீரைகளில் அபரிமிதமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவில் தினம் ஒரு கீரை அவசியம். ரத்தசோகை பிரச்னைக்கும் சிறந்த தீர்வு இந்தக் கீரைதான்.
கீரைகளின் இயல்புத்தன்மை, அதில் அடங்கியுள்ள சத்துக்கள் என்னென்ன, யார் சாப்பிடலாம், யாரெல்லாம் தவிர்க்கலாம் என்பன உட்பட பல்வேறு பலன்களை விளக்குகின்றனர்      ஹெர்ப்ஸ் அலைவ் மையத்தின் ஆயுர்வேத மருத்துவர் சாந்தி விஜய்பால் மற்றும் நல்ல கீரை ஜெகன்னாதன்.
கீரை உணவு வகைகளை ரசனையோடு ருசியாக செய்துகாட்டி அசத்தியிருக்கிறார்கள் பாரம்பரிய சமையல்கலை நிபுணர் சுந்தரவல்லி திருநாராயணன் மற்றும் செஃப் ராஜா. தினம் நம் உணவில் கீரை இடம்பெற இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.
கீரைகளை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?
   கீரைகள் குறுகிய காலப் பயிர்வகைகள் என்பதால், ஆர்கானிக் முறையில் வளர்க்கப்படும் கீரைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
   கீரைகள் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும். வாடி வதங்கி இருக்கக் கூடாது.
   பூச்சிகள் அரித்த கீரையைத் தவிர்த்திடுங்கள்.
கீரை குறிப்புகள்..
  கீரைகளை 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்டு அலசினால், அதில் உள்ள மண் போகும், பூச்சிக்கொல்லியின் வீரியம் குறையும்.
   பூச்சிகள், கிருமிகள், பூச்சிக்கொல்லிகள், மாசு போன்றவற்றால் கீரைகள் பாதிக்கப்பட்டு வளர்வதால், கீரைகளை சமைப்பதற்கு முன், நீரில் நன்றாகக் கழுவுவது அவசியம்.
   கீரைகளைப் பொரிக்கவோ, நீண்ட நேரம் வேகவைக்கவோ கூடாது. அதே நேரம், போதுமான அளவு வெந்திருக்க வேண்டும்.
   கீரைகளை வேகவைக்க, சிறிது அளவு நீர் ஊற்றினாலே போதும்.
   மழை, வெயில் என அனைத்துக் காலங்களிலும் கீரைகளை சாப்பிடலாம். ஆனால், அதன் இயல்பைப் பொறுத்து கீரைகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
   இரவில் கீரை சாப்பிடவே கூடாது. கீரைகளில், நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருப்பதால், எளிதில் செரிமானம் ஆகாது.
   கீரையுடன் முட்டை, பால், தயிர், அசைவம் போன்றவற்றை சேர்த்து சமைக்கக்கூடாது. கீரை சாத்வீக உணவு என்பதால் இவை ஒன்றாக சேர்ந்தால் மலச்சிக்கலையும், வயிற்றுப் பிரச்னைகளையும் உருவாக்கும்.
   கீரையைவிட பருப்பின் அளவு குறைந்திருப்பதே நல்லது. சமமாகவோ, அதிகமாகவோ இருக்கக்கூடாது.
ரத்த சோகையை விரட்டும் முருங்கை
முருங்கை மரத்தில் கிடைக்கும் அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமே.  அதிகச் சத்துக்கள் நிறைந்தது முருங்கைக் கீரை. அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்தக் கீரை, மிகவும் குளிர்ச்சித்தன்மை கொண்டது.
சத்துக்கள்: கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் சி, இரும்புச் சத்துகள், நார்சத்துக்கள் உள்ளன. அதிக அளவில் இருப்பவை இரும்புச் சத்தும், வைட்டமின் சியும்தான்.
பலன்கள்: இரும்புச் சத்தும் வைட்டமின் சியும் சேர்ந்த கலவை, ரத்தத்தை உற்பத்தி செய்யும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். வாரம் இருமுறை சாப்பிட்டுவந்தால், முடி உதிர்தல் நிற்கும். இளநரையைப் போக்கும். கண் பார்வைத் திறன் அதிகரிக்கும். உடல்சூடு தணியும். உடல்நலத்தை அதிகரிக்கும்.
டிப்ஸ்: ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் வாரம் இருமுறை,  முருங்கைக் கீரை சூப் வைத்து, அதில் எலுமிச்சைச் சாறை சிறிதளவு சேர்த்து சாப்பிடலாம்.
கவனிக்க: கல்லீரலில் பிரச்னையிருப்பவர்களுக்கு செரிமானக் குறைபாடு இருக்கும். முருங்கையில் அதிகளவு நார்ச்்சத்துக்கள் இருப்பதால், அவர்களால் இந்த உணவை ஜீரணிக்க முடியாது. மற்ற அனைவரும் சாப்பிடலாம்.
ஊட்டமளிக்கும் முளைக்கீரை
எளிதில் கிடைக்கக்கூடிய கீரை இது. பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கின்றன. இரண்டு வகைக் கீரைகளும் உடலுக்கு நல்லதுதான். இது குளிர்ச்சித்தன்மையுடையது. ஊட்டமளிக்கும் சத்துகள் இதில் மிகுதியாக உள்ளன.
சத்துக்கள்: கால்சியம், புரதம், வைட்டமின் ஏ, பி, மற்றும் இரும்பு, சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புக்கள், ஆக்சாலிக் அமிலம் இதில் நிறைவாக உள்ளன.
பலன்கள்: கண்களுக்கு குளிர்ச்சியூட்டி பார்வையைத் தெளிவாக்கும். மாலைக்கண் நோய்க்கு சிறந்த மருந்து. மூளை வளர்ச்சிக்கு உதவும். சருமத்துக்குக் கவசமாகும். பசியைத் தூண்டும். உடல் எடை அதிகரிக்கும். பலவீனமாக இருப்பவர்கள், அதிக உடல் சூடு கொண்டவர்கள் மற்றும் பித்த உடல் உள்ளவர்கள் இந்தக் கீரையை தாராளமாகச் சாப்பிடலாம்.
டிப்ஸ்: சிலர் வாய்ப்புண்ணால் அவதிப்படுவார்கள். முளைக்கீரையின் ஐந்து இலைகளை 100 மி.லி நீரில் கொதிக்கவைத்து,  நீர் பாதியாக சுண்டவிட வேண்டும். அந்த நீரில் வாய் கொப்பளித்தால், வாய்ப்புண் குணமாகிவிடும்.
கவனிக்க: இது குளிர்ச்சித்தன்மைகொண்டது என்பதால் ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள் தவிர்க்கவும்.
உடல் வலிமைக்கு அரைக்கீரை
மிகவும் குளிர்ச்சித்தன்மை வாய்ந்தது. எந்த வகை நோயாளிகளுக்கும் ஏற்றது. இலைகளுடன் தண்டுகளையும் சேர்த்து சாப்பிடலாம்.
சத்துக்கள்: புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் நிறைவாக உள்ளது.
பலன்கள்: உடல் வலுப்பெறும். ரத்தத்தை அதிகரிக்கும். பிரசவித்த பெண்களுக்கு உடனடி ஊட்டத்தை அளிக்கும். பால் அதிகம் சுரக்கச் செய்யும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். சோர்வு, உடல் வலியைப் போக்கி புத்துணர்வு தரும். ரத்த நாளங்கள் நன்கு செயல்படும். வாயுப்  பிரச்னையைப் போக்கும்.
  டிப்ஸ்: சின்ன வெங்காயம், தக்காளியை வதக்கி கீரை சேர்த்து வெந்ததும், உப்பு, புளி சேர்த்துக்கொள்ளவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, துவையலாக அரைத்தும் சாப்பிடலாம்.
கவனிக்க: குழந்தைகள், பெரியவர்கள், நோயாளிகள் என அனைவருமே  சாப்பிடலாம்.
கண்களுக்கு பொன்னாங்கண்ணி
அனைத்து சூழல்களிலும் வளரும் தன்மைகொண்டதால், எந்தக் காலத்திலும் மிக எளிதாகக் கிடைக்கும். இதில் நிறைய வகைகள் இருந்தாலும் நாட்டுப் பொன்னாங்கண்ணியே சமையலுக்குப் பயன்படுகிறது. இந்தக் கீரை குளிர்ச்சித்தன்மை கொண்டது.
சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, பீட்டாகரோட்டீன் உள்ளன. கால்சியம், இரும்புச்சத்து உள்ளிட்ட தாது உப்புக்கள் உள்ளன.
பலன்கள்: சிறு குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்னை இருந்தால், இதைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிடுவதுடன், கண்களுக்குப் பயிற்சியும் செய்துவந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும். கண்களில் நீர்வழிதல், கட்டி, தொற்று, மங்கலான பார்வை போன்ற கண் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் தீரும். மாலைக்கண் நோய்கூட குணமாகும். மூளை, நரம்புகள் சீராக இயங்கும். எலும்புகளும் வலிமை பெறும். சருமம் பொலிவுறும். கூந்தல் நன்றாக வளர உதவும்.
டிப்ஸ்: பொன்னாங்கண்ணி இலைகளின் சாறோடு, பசு வெண்ணெய் கலந்து, பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்தால், கண்கள் குளிர்ச்சி அடையும். 
கவனிக்க: பொன்னாங்கண்ணி யாருக்கும் எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது. அனைவரும் சாப்பிடலாம்.
மூலத்தை சரியாக்கும் பசலைக் கீரை
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது. நீர்ச்சத்து நிறைந்த கீரை. சிறுநீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும் வல்லமை பெற்றது.
சத்துக்கள்: வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளெக்ஸ், புரதம், இரும்பு, கால்சியம் போன்றவை உள்ளன.
பலன்கள்: பைல்ஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு பசலை மிகவும் நல்லது. ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்களை, எந்தவித சிகிச்சைகளும் இல்லாமல், இந்தக் கீரையின் மூலமே குணப்படுத்திவிட முடியும்.  நீர்க்கடுப்பு, நீரடைப்பு குணமாகும். சருமப் பிரச்னைகள் தீரும். நோய்த் தொற்றைப் போக்கும்.  வாய்ப்புண்களை ஆற்றும்.
டிப்ஸ்: கருணைக் கிழங்கு, வெங்காயம் மற்றும் பசலை சேர்த்து சமைத்து, சாப்பிட்டுவர ஆரம்பக்கட்ட மூல நோயைக் குணப்படுத்தும். 
கவனிக்க:சைனஸ், வீசிங் பிரச்னை இருப்பவர்கள் மழைக்காலத்தில் இந்தக் கீரையைத் தவிர்ப்பது நல்லது. 
குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் சிறு கீரை
பெயர்தான் சிறு கீரை. இதன் பலன்களோ ஏராளம். தண்டுகள் பெரிதாக இருக்கும். ஆனால் இலைகள் சிறியதாக இருக்கும். சிறு கீரை சூடு என்பதால், குளிர்ச்சித்தன்மை உள்ள காய்களுடன் சேர்க்கக் கூடாது. இது மலமிளக்கியாகவும் செயல்படும்.
சத்துக்கள்: கலோரி, புரதம், பாஸ்பரஸ், நார்ச்சத்து போன்றவை உள்ளன. இரும்பு, கால்சியம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் அதிக அளவில் உள்ளன.
பலன்கள்: குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தினமும் இந்தக் கீரையைக் கொடுத்துவரலாம். கூடவே ஸ்கிப்பிங் போன்ற உடற்பயிற்சியும் செய்துவந்தால் அவர்களின் உயரம் அதிகரிக்க உதவும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். மெனோபாஸ் நிலையை அடைய இருக்கும் பெண்களுக்கு, சிறுகீரை மிகவும் நல்லது. கல்லீரலுக்கு நன்மையை செய்யும்.
டிப்ஸ்: 4 இலையுடன் 4 மிளகைச் சேர்த்து சாப்பிட்டு வர, சரும அலர்ஜி குணமாகும்.
கவனிக்க: பித்த உடல்காரர்கள், அதிக உடல் வெப்பம் கொண்டவர்கள், இந்தக் கீரையை அதிகமாக சாப்பிட வேண்டாம்.
மூட்டுவலிக்கு முடக்கத்தான்
கை, கால்கள் முடங்கிப்போய்விடாமல் தடுக்கிறது என்பதால் இதற்கு முடக்கத்தான் என்று பெயர். மருத்துவ குணங்கள் நிறைந்தது. 
சத்துக்கள்: புரதம், மாவுச்சத்து, தாது உப்புக்கள் நிறைந்தது. மிகக் குறைந்த அளவில் கொழுப்புச் சத்தும் உள்ளது.
பலன்கள்: 40 வயதைக் கடந்தவர்களுக்கு எலும்புத் தேய்மானம் ஏற்படும். முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், எலும்புகளுக்கு உறுதியைத் தரும். வாதத்தைக் கட்டுப்படுத்தும். மூட்டு வலி உள்ளவர்கள் இவற்றை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர, வலி இடம் தெரியாமல் நீங்கும். மூட்டுகளில் வீக்கம் இருப்பவர்களும் சாப்பிடலாம். கருவுற்றிருக்கும் பெண்கள் சாப்பிட்டுவர, கால் மூட்டு வலி வராது.
டிப்ஸ்: இதை அப்படியே சாப்பிடாமல், நறுக்கி அல்லது அரைத்து, தோசை மாவுடன் கலந்து சாப்பிடலாம். ஆனால் மாவைப் புளிக்கவைக்கக் கூடாது.
கவனிக்க: அனைவரும் சாப்பிட ஏற்றது.
வயிற்றுப் பிரச்னைக்கு வெந்தயக்கீரை
குட்டிக் குட்டி இலைகளாக, சிறிய தண்டுகளுடன் இருக்கும் வெந்தயக்கீரை, லேசான கசப்புச் சுவை கொண்டது.
சத்துக்கள்: புரதம், கால்சியம், இரும்பு உள்ளிட்ட தாதுஉப்புக்கள், வைட்டமின் ஏ, சி, பி காம்ப்ளெக்ஸ் இதில் நிறைய உள்ளன.
பலன்கள்: உடலின் பலத்தை அதிகரிக்கும். நோய் எதிர்பாற்றலை உருவாக்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னையை குணமாக்கும். மாதவிடாய் கோளாறுகளை நீக்கும். வாயுப் பிரச்னை குணமாகும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி சீராகவைக்கும். வயிற்றுக் கோளாறுகளைப் போக்கும். உடல்சூடு தணியும். முகப்பரு தொல்லை, சருமப் பிரச்னைகள் குணமாகும். குடல்புண்களை ஆற்றும்.
டிப்ஸ்: வெந்தயக்கீரையை கோதுமை மாவில் சேர்த்து  சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். பாசிப்பருப்பு சேர்த்து செய்தால் இதன் கசப்புச் சுவை நீங்கும்.
கவனிக்க: சளி, இருமல் போன்ற பிரச்னை உள்ளவர்கள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
வாய்ப்புண் குணமாக்கும் மணத்தக்காளி கீரை
சுக்குட்டிக் கீரை என்றும் அழைக்கப்படும் இந்தக் கீரை, அதிக மருத்துவக்குணம் வாய்ந்தது. குரல் வளத்துக்கு ஏற்றது. அடிக்கடி தொண்டை கட்டிக்கொள்ளும் பிரச்னை இருப்பவர்கள் இதை அதிகமாகச் சாப்பிடலாம்.
சத்துக்கள்: வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், மாவுச்சத்து, புரதம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உள்ளன. கொழுப்புச் சத்து மிகுந்த அளவில் உள்ளது.
பலன்கள்: வாய்ப்புண், வயிற்றுப்புண்ணைக் குணமாக்கும். அல்சருக்கு அற்புத மருந்தாகச் செயல்படுகிறது. களைப்பு, சோர்வு நீங்கும். தூக்கம் இன்றி தவிப்பவர்களுக்கு அருமருந்து. கல்லீரலுக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல் நீங்கும். தொண்டைக் கரகரப்பு சரியாகும். உடல் வெப்பம் தணியும். இதில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகமாக உள்ளது. கருப்பை குறைபாட்டை நீக்கும்.
டிப்ஸ்: கீரைச் சாறுடன் 10 மி.லி முட்டைகோஸ் சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட வாய்ப்புண் இடம் தெரியாமல் மறையும். வாரம் ஒருமுறை மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்து சாப்பிடலாம். வயிற்றிலிருக்கும் பூச்சிகளை அகற்றும்.
கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.
புத்துணர்வு தரும் புளிச்ச கீரை
புளிப்புச் சுவை கொண்டுள்ள இந்தக் கீரையை அனைத்து வகையிலும் செய்து சாப்பிடலாம். ஆனால், புளியின் அளவைக் குறைப்பதே நல்லது. இரண்டு புளிப்பும் சேர்ந்து சுவையை மாற்றிவிடும். மேலும் இதனுடன் எள் சேர்த்தும் சாப்பிடலாம்.
சத்துக்கள்: வைட்டமின் பி, இ, சி, பொட்டாசியம் ஆகியவை உள்ளன.
பலன்கள்: சரும வறட்சியைப் போக்கும். சருமம் அழகு பெறும். பசியின்மையைப் போக்கும். மந்தத்தை நீக்கும். சருமத்தில் உருவாகும் சிறு ரத்தக் கட்டிகளைப் போக்கும். ரத்த நாளங்களை சீர்செய்யும்.
டிப்ஸ்: சிறிது எண்ணெயில் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, கீரையை சேர்த்து பிரட்டி, உப்பு சேர்த்து அரைத்து, துவையலாக செய்து சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.  வயிறு மந்தம் நீங்கும். புளிச்ச கீரையை நீரில் கொதிக்கவிட்டு அந்த நீரைக் குடித்துவந்தால், உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும்.
கவனிக்க: மூட்டுவலிப் பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்கலாம்.
நினைவாற்றலைப் பெருக்கும் வல்லாரை
சூடும் அல்லாத குளிர்ச்சியும் இல்லாத சமநிலை இயல்பு கொண்ட கீரை இது.
சத்துக்கள்: கால்சியம், வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, தாது உப்புக்கள் ஆகியவை உள்ளன.
பலன்கள்: நினைவுத்திறன் அதிகரிக்கும். இழந்த நினைவாற்றலைக்கூட திரும்பப் பெறலாம். ஆட்டிசம் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லது. அவர்களின் அதீத இயல்பு குணத்தைக் கட்டுப்படுத்தி, செய்யும் செயலில் நினைவாற்றலைப் பெருக்கச் செய்யும். கவனச் சிதறல்களைக் குறைக்கும். உடல்சோர்வு, நரம்புத் தளர்ச்சி, பார்வை மங்கல் குணமாகும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.
டிப்ஸ்: வல்லாரை சாறுடன் ஒரு ஸ்பூன் பசு நெய் கலந்து குடிக்க, பிஞிலி என்ற நல்ல கொழுப்பு அதிகமாகும். 
கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.
சளி தொல்லைக்கு தூதுவளை
தூதுவளை சூடு என்பதால், இதை மூலிகையாகவே பயன்படுத்துவர். இதைக் கஷாயமாக செய்து குடிக்கலாம். கசப்பான சுவையைத் தரும் கீரை என்பதால், மற்ற கீரைகளைப் போல சாப்பிட முடியாது.
சத்துக்கள்: வைட்டமின் சி, இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள் உள்ளன.
பலன்கள்: ஜலதோஷம் நீங்கும். நுரையீரலை சுத்தப்படுத்தும் தன்மை இந்தக் கீரைக்கு உண்டு. தொண்டையில் அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்று குணமாகும். நரம்புகளை வலுப்படுத்தும்.
டிப்ஸ்: தூதுவளைப் பொடியை 48 நாட்கள் தேன் கலந்து சாப்பிட்டுவர, தொண்டை வலி நீங்கும்.
கவனிக்க: பைல்ஸ் நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
பசியைத் தூண்டும் முள்ளங்கி கீரை
முள்ளங்கியைப் பயன்படுத்துவோர் அதன் இலைகளை தூக்கி எறிந்துவிடுகின்றனர். முள்ளங்கியைப் போல அதன் கீரையும் சத்துக்கள் மிகுந்தது.
சத்துக்கள்: வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் உள்ளன.
பலன்கள்: சிறுநீரைப் பெருக்கும். நீரடைப்பை நீக்கும். சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும். பசி எடுக்காமல் அவதிப்படுபவர்கள் இதை சாப்பிட, நன்றாகப் பசிக்கும். கண் பார்வை அதிகரிக்கும்.
டிப்ஸ்: முள்ளங்கி இலையை சாறாக்கி 5 மி.லி அளவு சாப்பிட்டுவர மலச்சிக்கல் நீங்கும்.
கவனிக்க: சளி, ஆஸ்துமா, சைனஸ் போன்ற நோய் உள்ளவர்கள் இந்தக் கீரை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். ஒவ்வாமை உள்ளவர்கள் சாப்பிட வேண்டாம்.
புற்றுநோயைத் தடுக்கும் பாலக்கீரை
குளிர்ச்சித்தன்மை கொண்டது. பெரிய பெரிய இலைகள் கொண்டதால், கழுவுவதற்கு மிகவும் சுலபம்.
சத்துக்கள்: வைட்டமின் கே, ஏ, பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், காப்பர், இரும்பு, அயோடின், ஃபோலிக் அமிலம், பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைவாகக் கொண்டது. 
பலன்கள்: உடல் சூட்டைத் தணிக்கும். மூளை வளர்ச்சிக்கு உதவும். சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். ரத்த உற்பத்திக்கு உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. ஃபோலிக் அமிலம் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு நல்லது.
டிப்ஸ்: பருப்புடன் சேர்க்காமல் தனியாக சமைத்துச் சாப்பிடுவது நல்லது. 10 கிராம் பாலக்கீரையுடன், அரை டீஸ்பூன் சீரகம், 2 பூண்டு பல் சேர்த்து தண்ணீர்விட்டு, கொதித்ததும் வடிகட்டிக் குடித்தால், வெள்ளைப்படுதல் குணமாகும்.
கவனிக்க: சைனஸ், ஆஸ்துமா நோயாளிகள் மழைக் காலங்களில் சாப்பிடக் கூடாது.

ரத்த அணுக்களை அதிகரிக்கும் கறிவேப்பிலை
தாளிக்கப் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலையின் சத்துகளை மனதில் பதித்துக்கொண்டால், ஓரத்தில் ஒதுக்க மனம் வராது. அனைத்து சமையலுக்கும் வாசனையைக் கூட்ட மட்டுமல்லாது, தனியாக சமைத்தும் சாப்பிடலாம்.
சத்துக்கள்: இரும்பு சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் ஆகியவை உள்ளன.
பலன்கள்: ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்கும். கண் பார்வையைத் தெளிவாக்கும். கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட, கை, கால் நடுக்கம் நிற்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும். நகங்கள் எளிதில் உடையாது, வலிமை பெறும். நினைவுத்திறன் அதிகரிக்கும். சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து. வீக்கம், கட்டிகள் இருந்தால் குறையும். உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை சமன் செய்யும். கூந்தல் கருப்பாகும். முடி உதிர்தலைத் தடுக்கும். உடல் சூடு தணியும். இளம் வயதில் நரை முடி வராமல் தடுக்கும்.
டிப்ஸ்: கறிவேப்பிலை, இஞ்சி, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், கொத்தமல்லி சேர்த்து வதக்கி அரைத்துத் துவையலாகவும் செய்யலாம்.  கறிவேப்பிலையை சிறிது எண்ணெயில் வதக்கி, மிளகு, உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடியாகவும் செய்துகொள்ளலாம். கூந்தல் செழிப்பாக வளரும்.
கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.
உடல் தூய்மைக்கு கொத்தமல்லி
உணவை அலங்கரிப்பதற்காக மட்டுமே கொத்தமல்லியைப் பயன்படுத்துகிறோம். ஏதோ கடைசியில் சேர்க்கும் வாசனைப் பொருள் என்ற எண்ணமும் பலருக்கு உண்டு. ஆனால் இதிலிருக்கும் சத்துக்கள் மிகுந்த நன்மை தரக்கூடியவை.
சத்துக்கள்: வைட்டமின் பி1, பி2, சி, புரதம், கால்சியம், நார்ச்சத்து, ஆக்சாலிக் அமிலம் இதில் உள்ளன.
பலன்கள்: அதிக மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு அதன் பக்கவிளைவைக் குறைத்து, மருந்துக் கழிவை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் வல்லமை பெற்றது. நம் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை (மெட்டல்ஸ்) வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக்கும். ரத்த சோகையைக் குணப்படுத்தும். ரத்தத்தை சுத்திகரிக்கும். பித்தத்தால் ஏற்படும் வாந்தியைப் போக்க, கொத்தமல்லித் துவையலை சாப்பிடலாம். சருமத்தை சீராக்கி பொலிவடையச் செய்யும்.
டிப்ஸ்: ஒரு டம்ளர் கொத்தமல்லி சாறை வாரம் ஒருமுறை குடித்துவர, நச்சுக்கள், உணவோடு சேர்ந்துள்ள பூச்சி மருந்துகள், ரசாயனங்களை வெளியேற்றும்.
கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.
மலச்சிக்கல் தீர்க்கும் அகத்திக் கீரை
அகத்தை சுத்தப்படுத்துவதால் அகத்திக் கீரை என பெயர் வந்தது.  சிறு கசப்புச் சுவை கொண்டது.
சத்துக்கள்: இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, சி, கால்சியம், தாது உப்புக்கள், தயாமின், ரிபோஃப்ளேவின், மாவுச்சத்து, புரதம் ஆகியவை இதில் உள்ளன.
பலன்கள்: பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். இதை சாப்பிடுவதால் உடல் சுத்தமாகும். டீவார்மிங்’ செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதில் உள்ள கசப்புச் சுவை குடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும். மலச்சிக்கலைப் போக்கவல்லது. குடல்புண், அரிப்பு, சொரி, சிறங்கு போன்ற சரும நோய்கள் விலகும். உடல் சூட்டைத் தணிக்கும்.
டிப்ஸ்:  இந்தக் கீரையை நன்றாக வேகவைக்க வேண்டும். பருப்பை வேகவைத்து, பருப்பு மற்றும் தேங்காய் சேர்த்து பொரியலாக செய்து சாப்பிடலாம்.
கவனிக்க: மருந்து சாப்பிடுபவர்கள் இந்தக் கீரையைத் தவிர்க்கலாம். அனைவருமே இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சாப்பிடலாம்.  தினமும் சாப்பிடக் கூடாது.
சோர்வைப் போக்கும் தவசி கீரை
இதை ஹார்லிக்ஸ் கீரை, மல்டி வைட்டமின் கீரை என்றும் சொல்வார்கள்.
சத்துக்கள்: இரும்புச் சத்து, மல்ட்டி வைட்டமின்கள் இதில் அதிக அளவு இருக்கிறது.
பலன்கள்: ரத்த சோகையைப் போக்கும். சோர்வாக இருக்கும் உடல், புத்துணர்வு பெறும். ஆண்மை குறைபாடு நீங்கும்.
டிப்ஸ்: சாம்பாரில் சேர்த்து இந்தக் கீரையை சாப்பிட்டால், சுவை அலாதியாக இருக்கும்.
கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.செரிமானத்துக்கு புதினாசட்னி, ஜூஸ் என எந்த வகையில் சமைத்தாலும் இதன் சத்துக்கள் நீங்காமல் அப்படியே இருப்பது இதன் சிறப்பு.
செரிமானத்துக்கு புதினா
சட்னி, ஜூஸ் என எந்த வகையில் சமைத்தாலும் இதன் சத்துக்கள் நீங்காமல் அப்படியே இருப்பது தான் சிறப்பு.
சத்துக்கள்: நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, தயாமின் உள்ளன.
பலன்கள்: உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். சரும வறட்சியைப் போக்கும். அசைவ உணவுடன் சேர்க்கும்போது செரிமானம் எளிதாகும். மாதவிலக்கு பிரச்னைகள்கூட விலகும். ரத்தத்தை சுத்திகரிக்கும் வல்லமை பெற்றது.  மழைக்காலத்தில் டீயில் போட்டு குடிக்கலாம்.
டிப்ஸ்: புதினா சாதம், புதினா துவையல், புலாவ் போன்றவை செய்து சாப்பிடலாம்.
கவனிக்க: அனைவரும் சாப்பிடலாம்.

புண்களை ஆற்றும் பருப்பு கீரை
இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில்கூட இந்தக் கீரை மிகவும் பிரபலம்.
சத்துக்கள்: இரும்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, தாது உப்புக்கள் உள்ளன
பலன்கள்: வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். இதன் சாறை புண்களின் மீது தடவினால், புண் குணமாகும். வியர்க்குரு, சருமப் பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு அருமருந்தாக இருக்கிறது. உடல் உஷ்ணம் குறையும். எரிச்சல், நீர்க்கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாகும்.
டிப்ஸ்: கீரையுடன், பாசிப்பருப்பை வேக வைத்து கடைந்து, தக்காளி, பூண்டு, வெங்காயம் சேர்த்து, கூட்டு போல செய்து சாப்பிடலாம்.
கவனிக்க: அனைவரும் சாப்பிட ஏற்றது.
கீரை ரெசிப்பிகள்
வல்லாரைகோதுமை தோசை
தேவையானவை: வல்லாரைக் கீரை, கோதுமை மாவு, பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு. 
செய்முறை: கீரையைப்  பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.   கோதுமை மாவை தோசை மாவுப்பதத்தில் கரைத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.  தோசைக் கல்லில் தோசையாகச் சுட்டு எடுக்கலாம்.
பலன்கள்: ஞாபகசக்தி அதிகரிக்கும்.  ஊட்டச்சத்து மிக்கது என்பதால், பெண்களுக்கும்  குழந்தைகளுக்கும் ஏற்றது.
வெந்தயக்கீரை  பருப்புக் குழம்பு
தேவையானவை: பாசிப்பருப்பு, வெந்தயக்கீரை  தலா 50 கிராம்,  சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கடுகு, எண்ணெய்  தேவையான அளவு.
செய்முறை: பருப்பையும் கீரையையும் வேகவைத்து, இரண்டையும் நன்றாகக் கடைய வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கி, கடைசலில் கொட்ட வேண்டும். இதைக் கொதிக்கவைத்து இறக்கினால், குழம்பு தயார். சாதத்துடன் சாப்பிட ஏற்றது.
பலன்கள்: வெந்தயக்கீரை புரதம், தாது நிறைந்தது. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
பசலைக்கீரைக் கடைசல்
தேவையானவை: பசலைக்கீரை, வெந்தயம், இஞ்சி, பூண்டு, உப்பு,  சின்ன வெங்காயம்  தேவையான அளவு.
செய்முறை: கீரையை நன்றாக வேகவைத்து கடைந்துகொள்ள வேண்டும். எண்ணெயில் இஞ்சித் துண்டு, உப்பு, சின்ன வெங்காயம், வெந்தயம் தாளித்து, கடைசலில் சேர்க்க வேண்டும். 
பலன்கள்: பசலைக்கீரை மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு.ஆஸ்துமா உள்ளவர்கள் கோடைக்காலங்களில் மட்டுமே இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரைக்கீரை சின்ன வெங்காயக் குழம்பு
தேவையானவை: அரைக்கீரை, சின்ன வெங்காயம்,  கடுகு, மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், தனியா தூள், எண்ணெய்  தேவையான அளவு.
செய்முறை: கீரையில் சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்க வேண்டும். சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள், தனியா தூள், காய்ந்த மிளகாய் இவற்றை எண்ணெயில் தாளித்து, கீரைக் கடைசலில் கொட்ட வேண்டும். நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.
பலன்கள்: கண் பார்வையைத் தெளிவாக்கும். ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ரத்தக் குழாய்களைப் பாதுகாக்கும்.
கொத்தமல்லிப் பொடி
தேவையானவை: கொத்தமல்லி  ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு  2 டீஸ்பூன், பெருங்காயம்  3 சிட்டிகை, காய்ந்த மிளகாய்  2, புளி  சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு  தேவையான அளவு. 
செய்முறை: கொத்தமல்லியை மண் போக நன்றாக அலசி, செடியின் வேர்ப் பகுதியை நீக்கி, பொடியாக நறுக்கி, துணியில் போட்டு 4, 5 மணி நேரம் நிழலில் உலர்த்தி எடுக்கவும். ஒரு இரும்பு கடாயில் உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து, சிவக்க வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, அந்தச் சூட்டிலேயே புளியைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு வறுத்துக்கொள்ளவும்.
பருப்புக் கலவை, புளி, கொத்தமல்லி, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்ததை ஒரு தட்டில் பரப்பி, 3  4 நாட்கள் நிழலில் உலர்த்தி, காற்றுப் புகாத ஒரு டப்பாவில் போட்டுப் பத்திரப்படுத்தவும். சூடான சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டு, நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். தோசை, இட்லி மற்றும்  தயிர்சாதத்துக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
பலன்கள்: சிறுநீரகத்தை சுத்தம் செய்யும். உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றும். 
நச்சுக்கெட்ட கீரை கூட்டு
இந்தக் கீரையைப் பேச்சுவழக்கில், லஜ்ஜை கெட்ட கீரை’ என்றும் அழைப்பார்கள். ஆனால், உண்மையில் இதன் பெயர், நச்சகற்றி கீரை’ என்பதே.  வீடுகளின் முன்பக்கம் அழகுக்காக, குரோட்டன்ஸ் போல வளர்க்கப்படும் இந்தக் கீரை, சத்துக்களின் பெட்டகம்.
தேவையானவை: கீரை  2 கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு  அரை கப், உப்பு  தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம்  தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  2, எண்ணெய்  ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை ஊறவைக்கவும். கீரையை நன்றாக அலசிக் கழுவி, பொடியாக நறுக்கவும். கீரை, பருப்பு இரண்டையும் தண்ணீர் விட்டு வேகவைத்து தேவையான உப்பு சேர்க்கவும்.  எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, சீரகம், பெருங்காயம் சேர்த்து, மிளகாயைக் கிள்ளிப்போட்டு, கீரைக் கலவையில் சேர்க்கவும். நன்றாகக் கலந்து பரிமாறவும்.
பலன்கள்: உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி, ஆரோக்கியம் காக்கும். 
அகத்திக் கீரை சுண்டல்
தேவையானவை: அகத்திக் கீரை  2 கைப்பிடி, பாசிப்பருப்பு  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம்  தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  1, எண்ணெய்  ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். மிளகாயைக் கிள்ளிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய்விட்டு, தாளித்த பொருட்களைச் சேர்த்து வதக்கி, ஊறவைத்த பருப்பைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, மூடி போட்டு வேகவைக்கவும். மிகவும் குழைய வேகவிடக் கூடாது. பருப்பு வெந்ததும், கீரையை உப்பு சேர்த்து வதக்கி, மூடி போட்டு இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். 
குறிப்பு: அகத்திக் கீரை ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்கவில்லையெனில், கீரையைப் பக்குவப்படுத்தி உபயோகிக்கலாம். 
பக்குவப்படுத்தும் முறை: அகத்திக் கீரை அதிகமாகக் கிடைக்கும் சமயத்தில் வாங்கி, ஆய்ந்து, அலசி, ஒரு துணியில் போட்டு, வீட்டுக்குள்ளேயே நிழலான இடத்தில் 2  3 நாட்கள் உலரவைத்தால், ஈரம் இல்லாமல் காய்ந்துவிடும். அந்தக் கீரையை, காற்றுப் புகாத டப்பாவில் போட்டுப் பத்திரப்படுத்தலாம்.  தேவையான சமயங்களில் ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீரில் போட்டு, 2 மணி நேரம் ஊறவைத்தால், அப்போது பறித்த கீரை போல மாறிவிடும்.
பலன்கள்: எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.  குடல் புண்ணைப் போக்கும். மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து. 
தவசி கீரை பொரியல்
தேவையானவை: துளிரான தவசி கீரை  தேவையான அளவு, பெரிய வெங்காயம், தக்காளி  தலா 1, பச்சை மிளகாய்  2, உப்பு  தேவையான அளவு.  எண்ணெய்  ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம்  தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: கீரையைக் கழுவி நறுக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய துளிர் கீரையைப் போட்டு, உப்பு சேர்த்து இரண்டு முறை கிளறி, மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும். வெந்ததும் இறக்கி பரிமாறலாம்.
பலன்கள்: உடலைப் பலப்படுத்தும். சோர்வை நீக்கி, சுறுசுறுப்பைத் தரக்கூடியது.
முருங்கைக்கீரை ராகி கட்லெட்
தேவையானவை: இளசான முருங்கைக்கீரை  ஒரு கைப்பிடி, கேழ்வரகு மாவு  2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, பெரிய வெங்காயம், தக்காளி, வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய்   தலா 1, மிளகுத்தூள், சுக்குத்தூள்  தலா கால் டீஸ்பூன், பிரெட் தூள்  ஒரு கைப்பிடி, நல்லெண்ணெய்  தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை மசித்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், முருங்கைக்கீரையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிரெட் தூள் தவிர்த்து, மற்ற எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் தெளித்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும்.  பிறகு, கட்லெட்களாகத் தட்டி, பிரெட் தூளில் புரட்டி எடுத்து, தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபக்கமும் நன்றாக சிவக்கவைத்து எடுக்கவும்.
பலன்கள்:  ஆண்மை பலம் பெருகும்.  ரத்த உற்பத்திக்கு நல்லது.