SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Saturday 30 May 2015

தமிழில் தட்டச்சு செய்யத் தடுமாறுகிறீர்களா? இனி வேண்டாம் அந்தத் தடுமாற்றம்.


20090324_10fதமிழில் தட்டச்சு செய்யத் தடுமாறுகிறீர்களா? இனி வேண்டாம் அந்தத் தடுமாற்றம்.
கீழுள்ள இணைப்பில் செல்வதன் மூலம் இணையத்திலே தமிழில் தட்டச்சு செய்து உங்களுக்கு தேவையான இடத்தில் Copy Past செய்துகொள்ளலாம்.
======> http://goo.gl/yoLTp7
கணனியில் இணைய இணைப்பில்லாத போதும் தட்டச்சு செய்ய வேண்டும் என்கிறீர்களா? அப்படியாயின் கீழுள்ள இணைப்பில் செல்க.
======> http://goo.gl/ANEq66

வாகனங்களில் அதிக மைலேஜ் பெற இந்த வழிமுறையை கடைபிடிங்க!.


aaa (1)மாதத் தவணையில் பெட்ரோல் விலை தாறுமாறாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. எகிறி வரும் பெட்ரோல் விலையால், குதிரை வாங்கியும், சாட்டை வாங்க முடியாத குறையாக பெட்ரோல் காரை வாங்கிய பலர் வீட்டில் அழகு பொருளாக நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.பெட்ரோல் விலை உயர்வு அதிகரித்தாலும், அலுவலகம், வர்த்தக தேவைகள், சுற்றுலாக்களுக்கு காரை பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று.
எனவே, காரில் செல்லும்போது சில எளிய நடைமுறைகளை கடைபிடித்தால், எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். கடந்த ஆண்டு எரிபொருள் சிக்கனத்திற்கான டிப்ஸ் செய்தியை வழங்கியிருந்தோம். இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த செய்தியை வழங்கினால் புதிய வாசகர்களுக்கு பயன்படும் என்ற நம்பிக்கையில் சில கூடுதல் தகவல்களுடன் தந்திருக்கிறோம்….!
தேவைக்கு மட்டும்
குறைந்த தூரம் செல்வதற்கு காரை பயன்படுத்துவதை தவிருங்கள். அடுத்த தெருவிற்கு செல்வதற்கும், தேவையில்லாமலும் காரை எடுப்பதை தவிர்ந்துக் கொள்ளுங்கள். நடந்தோ அல்லது சைக்கிளில் செல்ல பழகிக் கொள்ளுங்கள். கொஞ்சம் அதிகம் தூரம் என்றால் மோட்டார்சைக்கிளை பயன்படுத்துங்கள்.
மன கட்டுப்பாடு
சாலையில் உள்ள போக்குவரத்துக்கு தக்கவாறு வேகத்தை கட்டுப்படுத்தி ஓட்டப் பழகுங்கள். அடிக்கடி கியரை மாற்றும்போதும் கூடுதல் எரிபொருள் செலவாகும். கிளட்சையும் தேவையில்லாமல் மிதிப்பதாலும் கூடுதல் எரிபொருள் செலவாகும் என்பதை நினைவில் கொண்டு டிரைவிங் செய்யவும்.
சரியான கியர்
நிறுவனங்கள் கூறியுள்ளபடி, வேகத்திற்கு தக்கவாறு சரியான கியரில் காரை இயக்க பழகிக்கொள்ள வேண்டும். சிலர் கார் ஓட்டுவதில் நான் சூரப்புலி என்பதை காட்டுவதற்காக வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் உடனுக்குடன் கியரை மாற்றி வேகமெடுத்து திறமையை பறைசாற்றுவர். இது தவறான டிரைவிங் என்பது மட்டுமல்ல, எரிபொருள் செலவு கூடுதல் ஆவதற்கு முக்கிய காரணமே இதுவாகத்தான் இருக்கும்.
சிக்னலில்…
நகரங்களில் டிரைவிங் செய்பவர்கள் சிக்னல்களில் நிறுத்தும் சூழ்நிலை ஏற்படுகையில், 25 வினாடிகளுக்கு மேல் தாமதம் ஏற்படும் என்றால் மட்டுமே எஞ்சினை ஆப் செய்யவும். 25வினாடிகளுக்குள் எஞ்சினை ஆப் செய்து, திரும்ப ஸ்டார்ட் செய்யும்போது எரிபொருளை மிச்சப்படுத்த முடியாது.
சர்வீஸ்
புதிய காராக இருந்தால்,தயாரிப்பு நிறுவனங்கள் பரிந்துரைத்த கால அளவிலும், பழைய காராக இருந்தால் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது சர்வீஸ் செய்து விடுவது புத்திசாலித்தனம். இதேபோன்று, அடிக்கடி எஞ்சின் செக்கப் செய்வதும் 50 சதவீதம் எரிபொருள் சிக்கனத்தை உறுதி செய்யும்.
டயரில் காற்றழுத்தம்
காரை எடுப்பதற்கு முன் டயர்களில் காற்றின் அழுத்தம் சரியான அளவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கிளம்புங்கள். மாதத்திற்கு ஒரு முறையாவது, டயர்களில் சரியான அளவில் காற்று பிடிப்பது நல்லது. டயர்களில் காற்றின் அழுத்தம் குறைந்தால், எஞ்சினுக்கு கூடுதல் பளு ஏற்பட்டு 5 சதவீதம் எரிபொருள் கூடுதல் செலவாகும்.
கூடுதல் சுமை
சுற்றுலா அல்லது வெளியூர் பயணங்கள் செல்லும்போது, தேவையில்லாத பொருட்களை கேரியர் தலையில் ஏற்றாதீர். கேரியரில் ஏற்றப்படும் பொருட்களின் எடை காரணமாக எஞ்சின் கூடுதல் சிரமத்தை ஏற்பதால் அதிக எரிபொருள் செலவாகும்.
வேகம்
நெடுஞ்சாலை பயணங்களின்போது, 60 முதல் 80 கி.மீ., வேகத்தில் சென்றால் அதிக எரிபொருள் சிக்கனம் கிடைக்கும். அதற்கு மேல் செல்லும்போது 5 முதல் 10 சதவீதத்திற்கும் கூடுதலான எரிபொருளை எஞ்சின் விழுங்கும்.
அடிக்கடி பிரேக்
தேவையில்லாமல் அடிக்கடி பிரேக் பிடிப்பது, காரை நிறுத்துவது போன்றவற்றை தவிர்ப்பதாலும், எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். தவிர, அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்ப்பதால், டயர்கள் மற்றும் பிரேக்குளின் ஆயுட்காலமும் நீடிக்கும்.
ஏசி பயன்பாடு
குறைந்த வேகத்தில் செல்லும்போது ஏசியை ஆப் செய்துவிட்டு செல்லுங்கள். குறைந்த வேகத்தில் செல்லும்போது ஏசி ஆன் செய்திருந்தால் எஞ்சினுக்கு சுமை கூடும் என்பதால் அதிக எரிபொருளை எடுத்துக்கொள்ளும்.
வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் நேரம்…
வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்புவதற்கு அதிகாலை மற்றும் இரவு நேரம்தான ஏற்றது என்கின்றனர் ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள். பெட்ரோல் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டது. எனவே, குளிர்ச்சியான சமயங்களில் பெட்ரோல் நிரப்பும்போதுதான் அதன் அடர்த்தி சரியானதாக இருக்கும். பகல் வேளைகளில் வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும் என்பதால், அதன் அடர்த்தி குறையும். இதனால், நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்பும்போது அது சரியான அளவு இருக்கும் என்பது சந்தேகம்தான்.
காலி பண்ணாதீங்க
பெட்ரோல் டேங்க் காலியாகும் வரை காத்திருக்காமல் கால் டேங்க் இருக்கும்போதே நிரப்புவதும் நல்லது. முழுவதும் காலியாகும்போது பெட்ரோல் அதிகமாக ஆவியாக வாய்ப்பு அதிகம்.
அளவு முக்கியம்
பெட்ரோல் நிலையத்தில் டேங்கர் லாரியிலிருந்து தொட்டியில் பெட்ரோல் நிரப்பும்போது, அந்த தொட்டியிலிருந்து வரும் பெட்ரோலை நிரப்பாதீர்கள். அதில், தூசி தும்பட்டிகள் வரும் வாய்ப்பு உள்ளதோடு, மேலே நுரையாக இருக்கும் என்பதால், அளவும் சரியாக இருக்காது.
இதுவும் முக்கியம்
நீண்ட நேரம் வெளியில் காரை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முடிந்தவரை நிழலில் நிறுத்துவதும் முக்கியம்.
கார் பூலிங்
ஒரே இடத்திலிருந்து ஒரு பகுதியில் இருக்கும் அலுவலகங்களுக்கு செல்வோர் கார் பூலிங் அல்லது பைக் பூலிங் எனப்படும் பங்கீட்டு முறையை பின்பற்றி செல்வது போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவுவதோடு, எரிபொருள் செலவையும் கட்டுப்படுத்த முடியும்.
பெட்ரோல் பங்க்
அளவு மற்றும் தரத்தில் சிறந்த பெட்ரோல் நிலையங்களை இனம் கண்டுகொண்டு அங்கு பெட்ரோல் போடுங்கள்.
கியூ வேண்டாமே!
காரின் வேகத்தில்தான் எரிபொருள் சிக்கனத்திற்கான சூட்சுமம் அடங்கியுள்ளது. எனவே, சரியான வேகத்தில் காரை இயக்க பழகிக்கொண்டாலே போதும். அதிக எரிபொருள் சிக்கனத்தை பெறமுடியும். மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை நினைவில்கொண்டு டிரைவிங் செய்தால், அடிக்கடி பெட்ரோல் பங்க் கியூவில் நிற்பதை நிச்சயம் தவிர்க்கலாம்…

வயிற்றுக் கோளாறால் அடிக்கடி அவதியா? இதோ மருத்துவம்


சாப்பிட்ட உணவு சரியாக செரிமானம் அடையாவிட்டால் வயிற்றில் பலவித பிரச்சனைகள் வரும்.
வயிற்றில் எரிச்சல் இருந்தால் உணவுக்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு இரண்டு டீஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும்.
மிளகுத் தூளுடன் தேன்
ஒரு டீஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் சலித்துக் கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் தூள் எடுத்து அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். இதனால் செரிமானக் கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்று நோய் குணமாகும்.
இஞ்சியுடன் தேன்
இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து சிவக்கும்படி வறுக்க வேண்டும். அதில் ஒரு கப் நீரையும், இரண்டு டீஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்ச வேண்டும்.
சுண்டக் காய்ந்ததும் இறக்கி வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
அகத்திக் கீரையுடன் தேன்
அகத்திக் கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேகவைக்க வேண்டும். அதை சாறுபிழிந்து எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தினால் எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.
பாலுடன் தேன்
சிலருக்கு கை, கால்கள், விரல்கள், மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.
ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும் போது உண்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத்தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்த மருந்து இல்லை. தேனை துளசி சாறில் கலந்து உபயோகிப்பது சளி தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.
நெல்லிக்காயுடன் தேன்
நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காயவைக்க வேண்டும்.
பின்பு 1 டீஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்க வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும்.
நாற்பது வயதை கடந்தவர்கள் தினமும் தேனை அருந்தலாம். ஒரு டீஸ்பூன் தேனை சாப்பிட்டு வந்தால் அரை மணிநேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும்.
வெந்நீருடன் தேன்
1 டம்ளர் வெந்நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலுமிச்சைபழ சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண்காணாத இடத்திற்கு ஓடிவிடும், குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும், குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும்.
ஆலமர பாலுடன் தேன்
ஆலமரத்திலிருந்து ஒரு டீஸ்பூன் பால் எடுத்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும், வயிற்றிலுள்ள புண்களும் குணமாகும்.
குப்பை மேனியுடன் தேன்
குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும்.
ஆட்டுப்பாலுடன் தேன்
பத்து கொன்றை மரப்பூக்களை 100 மில்லி பசும்பாலில் இட்டு காய்ச்சி பூ நன்றாக வெந்ததும் வடிகட்டி அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து அருந்தலாம்.
இதனால் வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுபுண், குடற்புண் ஆகியன குணமாகும். சீதபேதியை குணப்படுத்த 100 மில்லி ஆட்டுபாலை ஒரு டீஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்
கொள்ளின் மகத்துவங்கள்
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.
கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
கொள்ளில் அதிகளவு அயர்ன் மற்ற பருப்புகளை விட அதிகமாக‌ உள்ளதால், இதை சாப்பிடுவது மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.
கொள்ளுடன் சீரகமும் சேர்த்து ஊறவைத்து அந்த நீரை வடித்து லேசாக காய்ச்சி குடிப்பது வயிற்றுக்கு மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால், கொள்ளினை சூப் செய்து சாப்பிடுவதன் மூலம் சளி குணமடையும்.
உடலில் உள்ள ஊளை சதைகளை குறைக்க கொள்ளுப் பருப்பு மிகவும் உதவும்.
சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.
இதயத்தை பாதுகாப்பாய் வைப்பதில் கொள்ளு பெரும் பங்கு வகிக்கின்றது.

இரத்த சோகை பிரச்சனையா? உங்களுக்கான சூப்பர் உணவு




காய்கறிகள் நமது அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது.
அதிலும் பச்சைகாய்கறிகளை சாப்பிடுவது ருசிக்கு மட்டுமின்றி அரோக்கியத்திற்கும் வழிவகுக்கும். அந்த பச்சை காய்கறிகளில் ஒன்றானது பீர்க்கங்காய்.
இதை நாம் வாடிக்கையாக உபயோக்கப்படுத்தாவிட்டாலும், வாரத்தில் ஒரு முறை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
பீர்க்கங்காயின் மகத்துவங்கள்
பீர்க்கங்காயில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது.ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உள்ளது.
இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.
பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். மேலும் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவு களை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.
பீர்க்கு இலைச் சாறு பித்தத்தை போக்குவது மட்டுமின்றி ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும்.
சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம்.
கசப்புச் சுவை அதிகமாய் இருப்பதால் இதைச் சமைத்துத்தான் சாப்பிடுவதன் மூலம் தோல் நோய்கள் வராமல் இருக்கும்.
மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

கொழுப்பை குறைக்கும் உணவுகள்!


தற்போது மாறிவரும் வாழ்க்கை முறையால் இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனால் ஒருவரின் வாழ்நாள் எண்ணிக்கையும் குறைகிறது. அதனால் முக்கியமாக இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாக உள்ளது.
இத்தகைய உணவுகள் இரத்த குழாயில் உள்ள கொழுப்பை குறைத்து இதயத்திற்கு வலுவூட்டுகின்றன.
heart_001
நெல்லிக்காய்
தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தாலே, இதய நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்.
வெறுமனே நெல்லிக்காய் சாப்பிட முடியாவிட்டால் நெல்லிக்காயுடன் இஞ்சி சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு கலந்து சர்க்கரை, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து, தண்ணீர் கலந்து சாப்பிடலாம். காலையில் டீ குடிப்பதற்குப் பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.
நாட்டு நெல்லி, மலை நெல்லி என்று சொல்லக்கூடிய, அளவில் உள்ள பெரிய நெல்லிக்காய்தான் வைத்தியத்திற்கானது. பொதுவாக, நெல்லிக்காய் இதயத்தைப் பாதுகாப்பதுடன் கொழுப்பைக் கரைக்கும். அந்த வகையில் கல்லீரல், கணையத்தில் வரக்கூடிய புற்றுநோய்களையும் சரிசெய்யக்கூடியது.
இஞ்சி
இஞ்சியை சரியான விகிதத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டால் அதன் பலன் சிறப்பானதாக இருக்கும். இஞ்சியை துவையல் செய்தோ, சாறு எடுத்தோ குடித்து வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம், ஜீரணக்கோளாறு, சளி பிரச்னை உள்ளிட்ட உடல்கோளாறுகள் சரியாகும். முக்கியமாக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிறிதளவு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் அடுத்த 5, 10 நிமிடத்தில் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வரும்.
heart_002
பூண்டு
பூண்டும் ரத்த அழுத்தத்தை சரிபண்ணக்கூடியது. வாய்வுக்கோளாறு உள்ளவர்கள் ஒரு முழு பூண்டை தீயில் சுட்டு வெந்ததும் சாப்பிட்டு வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இதே பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் உள்ள கொழுப்பை கரைப்பதோடு, இதயத்துக்கும் வலு கிடைக்கும்.
heart_003
உலர் திராட்சை
இதயம் பலவீனமாக இருப்பவர்கள் காய்ந்த திராட்சைப்பழத்தை பன்னீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து பிசைந்து வடிகட்டி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால், நிவாரணம் கிடைக்கும். இப்படி செய்தால் உடனடியாக இதய படபடப்பு அடங்குவதோடு காலப்போக்கில் இதயம் பலப்படும்.
heart_004

பூண்டு சாப்பிடுங்கள்


வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அலைல் சல்பைடு என்னும் பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
குறிப்பாக இரைப்பை புற்றுநோயை பூண்டு தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.
தினமும் பூண்டை உட்கொண்டு வருவதால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
மொத்தத்தில், உடலில் நச்சுகள் சேராமல் தடுப்பதில் பூண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. மாரடைப்பு மற்றும் இதர இதய நோய் பிரச்சினைகளில் இருந்து பூண்டு பாதுகாக்கிறது.
இதில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.
அதுமட்டுமின்றி, கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் பூண்டுக்கு உண்டு. தொண்டை பிரச்சினைகளுக்கு விடைகொடுக்கும் பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பொருட்கள், தொண்டை பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கிறது.
தொண்டை எரிச்சல்களைக் குணப்படுத்துவதுடன், சுவாசப் பாதை தொற்றுகளின் தீவிரத்தையும் குறைக்கிறது.
மேலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது. பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண குணங்கள் பல்வலிக்கு நிவாரணம் அளிக்கின்றன.

மட்டன் Tikka


Spicy-Mutton-Tikkah
தேவையான பொருட்கள்
2- மட்டன்
5 பூண்டு
மிளகுத்தூள்
புதினா
கொத்தமல்லி
உப்பு
1-தக்காளி
சிறிய துண்டு இஞ்சி
1 பெரிய வெங்காயம்
மிளகாய்த்தூள்
தேசிக்காய்
மஞ்சள்
3- பச்சைமிளகாய்
வாழை இலை
செய்முறை
பூண்டு, பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள்,உப்பு எல்லாவற்றைம் அரைத்து அக் கலவையை மட்டனில் எல்லாப் பாகத்திலும் தடவி 20-30 நிமிடம் ஊற விட்டு அதன் பின் Oven ஐ 260 degree c வெப்பநிலையில் வாழை இலையில் மட்டனை வைத்து 30 நிமிடம் வேக வைக்கவும். அதன் மேல் நறுக்கப்பட்ட புதினா, கொத்தமல்லி, தேசிப்புளி சேர்த்து பரிமாறவும் சுவையான tikka தயா

சில்லி சிக்கன்


39c163cb0305397916a41bcfec41d3f3-682x10243
தேவையான பொருட்கள்
கோழி (நெஞ்சுதுண்டு ) -2
இஞ்சி,பூண்டு -2tsp
மிளகாய் தூள் -2tsp
கரம் மசாலா -1/2 tsp
முட்டை -1
சோளம் ம -1 tsp
கேசரிப் பவுடர்
வினிகர் -1 tsp
குடை மிளகாய் -1 கப்
கறிவேப்பிலை
வெங்காயம் -1/2 கப்
மிளகாய் தூள்
Soya சோஸ்
செய்முறை
கோழியை சிறு துண்டுகளாக வெட்டி அதனுள் தேவையான பொருட்கள் சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் வைக்கவும். அதனை எண்ணெயில் இட்டு பொறித்து எடுக்கவும்.
பின் அதே எண்ணெயில் கறிவேப்பிலை, வெங்காயம், குடைமிளகாய் Soya சோஸ் மற்றும் பொறித்த கோழியை சேர்த்து வதக்கினால் சுவையான சில்லி சிக்கன் தயார்.

சர்க்கரை வியாதியும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும். .


3a6e77283c3a19ce91fb2491a5a7d354-682x102435
சர்க்கரை வியாதி என்றால் என்ன?
எப்பொழுதும் நம் உடலில் உள்ள இரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவு, ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. இது அளவிற்கு மீறிப் போகும் பொழுது வியர்வை, சிறுநீர் போன்றவற்றின் வழியாக வெளியாகிவிடும். அவ்வாறு வெளியாகாமல் எஞ்சிய சர்க்கரையானது இரத்ததுடன் நேரடியாகக் கலக்கும் பொழுது, அதனால் வரும் விளைவு தான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு வியாதியாகும்.
சர்க்கரை நோயைப் போக்குவதற்கான வழிமுறைகள். . .
உடற் பயிற்சி முறைகள். . .
தினமும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுவும் காலை, மாலை இருவேளையும், குறைந்தபட்சம் 1 மணி நேரமாவது நடக்க வேண்டும். இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், சுமார் அரைமணி நேரம் முதல் முக்கால் மணி நேரமாவது நடக்க வேண்டும். ஓடுதல் பயிற்சியைத் (ஜாகிங்) தவிர்த்தல் வேண்டும். யோகா செய்வது, மற்றும் பிராணாயாமம் செய்வது மிகவும் நல்லது. பொதுவாக, உடலில் உள்ள அதிகக் கலோரி மற்றும் சர்க்கரை எரிசக்தியாக மாறி வியர்வையாக வெளியேற வேண்டும். உடற்பயிற்சியின் நோக்கமே அது தான்.
உணவுக் கட்டுப்பாட்டு முறைகள். . .
ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களைச் சாப்பிடலாம். ஏனெனில், இவற்றில் நார்ச்சத்து அதிகம். மேலும், ஜீரணமாகி உடலில் உடனடியாகச் சர்க்கரையாக மாறி விடுவதில்லை. வாழைப்பழம் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மட்டுமே சாப்பிடவேண்டும். அன்னாசி, திராட்சை, சப்போட்டா, மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றைக் கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது.
காய்கறிகளில் கிழங்கு வகைகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். நார்ச் சத்துள்ள வாழைத்தண்டு, அவரை, புடலங்காய், கொத்தவரை போன்றவற்றையும் மற்றும் சௌசௌ, பாகற்காய், வெங்காயம், பூண்டு, கீரை போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கடலை வகைகள் உடலுக்கு மிகவும் நல்லது. சான்றாக, மொச்சைக்கடலை, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், தேங்காயை எக்காரணம் கொண்டும் சேர்க்கக் கூடாது.
கேழ்வரகுக் கஞ்சி, கூழ் போன்றவற்றைச் சாப்பிடுவதை விட, கோதுமைக் கஞ்சி சிறந்தது. ஆனால், நீட்டமாக உள்ள சம்பாக் கோதுமையையே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அதில் மட்டுமே மற்ற கோதுமை வகைகளை விட சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது.
பொதுவாக, நோய் வந்த பின் மருத்துவரை நாடி ஓடுவதை விட, வருமுன் காப்பதே சிறந்தது. பரம்பரை, பரம்பரையாக இந்நோயால் பாதிக்கப்படுபவர்களில், இளவயதில் இருப்பவர்கள், சிறு வயது முதலே சரியான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றி வந்தால், எதிர் காலத்தில் இந்நோயால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.
நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம். . .
சர்க்கரை நோயை முழுமையாகக் குணப்படுத்துதல் என்பது எளிதானது அல்ல. மாறாக, சர்க்கரையின் அளவை இன்சுலின் போன்றவற்றின் மூலமும், மற்றும் சில வழிமுறைகள் மூலமும் கட்டுக்குள் வைக்கலாம். குறைக்கலாம். அதற்கான வழிமுறைகள்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

பாவற்காய் பொரியல்


தேவையான பொருட்கள்:
பாவற்காய் பொரியல்
செ.தே.பொ :-
பாவற்காய் – 2
மஞ்சள்த்தூள் – 1/2 தே.க
மிளகாய்த்தூள் – 1 மே.க
உப்பு – தே.அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு
04-aloo-capsicum-curry7
தயார் செய்யும் முறை:
செய்முறை:-
* பாவற்காயை கழுவி, நீளவாக்கில் பாதியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பிறை போல மெல்லிய துண்டுகளாக வெட்டவும்.
* வெட்டிய பாவற்காய், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள் எல்லாவற்றையும் சேர்த்துப் பிரட்டி 5-10 நிமிடங்கள் வைக்கவும்.
* எண்ணெயை சூடாக்கி பொரித்துப் பரிமாறவும்.

புளியோதரை

புளியோதரை செய்வது இப்பொழுது ரொம்பவும் சுலபமாகிவிட்டது , ஏனென்றால் கடைகளில் தயார் நிலை பொடியும் , புளிக்காய்ச்சலும் கிடைக்கின்றது . இருந்தாலும் வீட்டில் செய்து சுவைப்பது ஒரு தனி சுவைதானே !!
04-aloo-capsicum-curry7
தேவையானவை:-
புளி 100 கிராம்
மிளகாய் வத்தல் 15
எண்ணை 100 கிராம்
மஞ்சள்பொடி 1 ஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தாளிக்க:-
பெருங்காயம்
கடுகு
உளுத்தம்பருப்பு
கடலைப்பருப்பு
கருவேப்பிலை
புலியை தண்ணீரில் சிறிதுநேரம் ஊறவைத்து நன்றாக கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்
வெத்த மிளகாய் இரண்டாக கிள்ளி வைத்துக்கொள்ளவும்
அடுப்பில் வாணலியில் மிதமான் சூட்டில் , 100 கிராம் எண்ணை விட்டு , முதலில் பெருங்காயம் பொரித்துக் கொண்டு , கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை , மிளகாய் வத்தல் ஒன்றன்பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும்.
அதன் பின் கரைத்து வைத்த புளித் தண்ணீரை அதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் ,இதனுடன் மஞ்சள் பொடி உப்பு சேர்க்கவும்
புளிக்கரைசல் கெட்டியாகி அதனுடன் இருக்கும் எண்ணை மேலே வரும் அளவு கொதிக்கவேண்டும் இதனுடன் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து கலக்கவும்.
இப்பொழுது புளியோதரை கலக்க புளிக்காய்ச்சல் தயார்.
2 ஆழாக்கு அரிசியை களைந்து நீர் ஊற்றி குக்கரில் 5 விசில் பதத்தில்
வடித்துகொள்ளவும் .
குக்கர் சத்தம் அடங்கியவுடன் , வடித்த சாதத்தை ஒரு வாயகன்ற
பத்திரத்தில் போட்டு சற்று ஆறவைக்கவும்.
சூடு சற்று ஆறியவுடன் தயார் நிலையில் உள்ள புளிக்காய்ச்சலை
போட்டு விரல்களால் தூவினாற்போல் கலக்கவும்.
இப்பொழுது சுவையான புளியோதரை சாதம் சுவைக்க தயார்
குறிப்பு:-
இதன் சுவை கூட்ட இதனுடன் வருத்த வேர்கடலை புளிக்காய்ச்சல்
ஊற்றி கலக்கும்போதே சேர்த்து சாதம் கலக்கலாம் .
கொண்டைக்கடலை சேர்க்கவேண்டும் என்றால் ஊறவைத்து
குக்கரில் வேகவைத்து இதனுடன் கலந்து சுவைக்கலாம்
ஸ்பெஷல் பொடி:
மிளகு,………………..…. 1 டீஸ்பூன்
மிளகாய்வற்றல்….4
கடலைப்பருப்பு…….2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு …..2 டீஸ்பூன்
தணியா ………………….2 டீஸ்பூன்
மேலே சொன்னவற்றை அடுப்பில் வாணலியில் கொஞ்சம்
எண்ணை விட்டு , இவற்றை வறுத்து , மிக்சியில் பொடி செய்து
புளிக்காய்ச்சல் விட்டு சாதம் கலந்த பின்பு , இந்த பொடியை
மேலே போட்டு நன்றாக கலந்தால் ….. இதுவே ஐயங்கார்
புளியோதரயாக மாறிவிடும் .
நல்ல உப்பு காரம் கூடிய பதத்தோடு செய்யப்படும் புளிக்காய்ச்சல்
சுமார் 1 மாதம் வரை பயன் படுத்த முடியும் .

மட்டன் கபாப்


தேவையான பொருட்கள் :
மட்டன் கொத்துக்கறி – 1 கிலோ
எண்ணெய் – தேவையான
அளவு
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது – 3 டேபிள் ஸ்பூன்
பப்பாளிக் காய் பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
04-aloo-capsicum-curry2
செய்முறை :
வெங்காயத்தை முதலில் பொடியாக நறுக்கிக் கொள் ளவும். பிறகு நன்கு சுத்தமாக கழுவிய ஆட்டிறைச்சி யை, (மட்ட‍ன் கொத்துக்கறியை) தண்ணீரில்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன்பின் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மட்டன், வெங்காயம், இஞ்சிபூண்டுவிழுது, வெண்ணெய், பப்பா ளிக்காய் பேஸ்ட், மிளகாய்த் தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்புசேர்த்துப் பிசைந்து வைத்துக்கொள்ளவும் .
பின் அந்த கலவையை இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு ஊற வைக்கவும்.
பிறகு அதனை எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத் து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றவு ம்.
எண்ணெயானது காய்ந்ததும், அந்த கலவையை கட்லட் போல் வட்டமாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான மட்டன்கபாப் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் புதினாவைத் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

மட்டன் கிரேவி


என்னென்ன தேவை?
மட்டன் – 1/2 கிலோ (எலும்புடன் கூடிய இறைச்சி)
தக்காளி – 2 (அரைத்தது)
வெங்காயம் – 2 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
பட்டை மற்றும் கிராம்பு பொடி – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
04-aloo-capsicum-curry2
எப்படிச் செய்வது?
முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட்டு தீயை குறைவில் வைத்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு, 5-7 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, தயிர், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, பட்டை மற்றும் கிராம்பு பொடி, எலுமிச்சை சாறு, ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து தீயை குறைவில் வைத்து, மட்டனைப் போட்டு, 10 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்தே 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.மட்டன் கிரேவி ரெடி.

தயிர் சாதம்


தேவையான பொருட்கள்:
சாதம் – 1 கப்
தயிர் – 1 கப்
பால் – 1/4 கப்
வெண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1/2 தேக்கரண்டி
கடலைபருப்பு – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
மோர் மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 ஆர்க்
பொடியாக நறுக்கிய மாங்காய் – 4 ஸ்பூன்
நறுக்கிய கொத்துமல்லி – 2 டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
04-aloo-capsicum-curry5
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு மோர் மிளகாயை பொரித்து தனியே எடுத்து வைக்கவும்..
பின்னர் கடுகு, கடலைபருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பால், தயிர், வெண்ணெய், உப்பு சேர்த்து க்ரீம் போன்று சாப்டாக வரும் வரை நன்கு கலக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய மாங்காய், நறுக்கிய கொத்துமல்லி, சாதம், 2 உதிர்த்த மோர்மிளகாய் சேர்த்து கலக்கவும்.
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

முட்டை மிளகு மசாலா

12-faster-beard-growing-tips13
தேவை?
வேகவைத்த முட்டை-12
நறுக்கிய பெரிய வெங்காயம்- 4
தக்காளி-3
பூண்டு- 6 முதல் 7(நறுக்கப்பட்டது)
மிளகு-2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
பட்டை,ஏலக்காய்-தேவையான அளவு
இஞ்சி- சிறிதளவு
தக்காளி சாஸ்-1/4 கப்
எப்படிச் செய்வது?
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி சாஸ், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி மிளகு பொடி, உப்பு சேர்த்து கிளறவும்.
கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பின்னர் முட்டையை இரண்டாக வெட்டி கிரேவியில் வைக்கவும்.
முட்டையில் கிரேவி படும்படி கிளறவும். சுவையான முட்டை மிளகு மசாலா ரெடி..

முட்டை மிளகு மசாலா


12-faster-beard-growing-tips13
தேவை?
வேகவைத்த முட்டை-12
நறுக்கிய பெரிய வெங்காயம்- 4
தக்காளி-3
பூண்டு- 6 முதல் 7(நறுக்கப்பட்டது)
மிளகு-2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
பட்டை,ஏலக்காய்-தேவையான அளவு
இஞ்சி- சிறிதளவு
தக்காளி சாஸ்-1/4 கப்
எப்படிச் செய்வது?
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி சாஸ், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி மிளகு பொடி, உப்பு சேர்த்து கிளறவும்.
கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பின்னர் முட்டையை இரண்டாக வெட்டி கிரேவியில் வைக்கவும்.
முட்டையில் கிரேவி படும்படி கிளறவும். சுவையான முட்டை மிளகு மசாலா ரெடி..

ஆட்டுக்கால் சூப்


sl114
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் – 2,
சின்ன வெங்காயம் – 6,
பூண்டு – 4 பல்,
மிளகு – 1 தேக்கரண்டி,
சீரகம் – 1 தேக்கரண்டி,
தனியா – 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை – 10,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஆட்டுக்காலை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மிளகு, சீரகம், தனியா, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
குக்கரில் ஆட்டுக்காலுடன் அரைத்த விழுது, உப்பு, 8 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 10,15 விசில் வரும் வரை விட்டு இறக்கவும்.
இதை முதல் நாள் இரவே கூட வைத்து விட்டு, மூடியை திறக்காமல் வைத்திருந்து, காலையில் சூடு செய்து குடிக்கலாம்.

ஆட்டுக்கறி (மட்டன்) பிரியாணி


download-1
தேவையானபொருள்கள்
பாசுமதி அரிசி – 1 cup
ஆட்டுக்கறி – 200 கிராம்
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
பட்டை – சுண்டு விரல் அளவு
பூண்டு – 4 பல்
இஞ்சி – ஒரு இன்ச் அளவு
தக்காளிப் பழம் – 2 (1 cup)
சின்ன வெங்காயம் – 10
பெரிய வெங்காயம் – 1
புளித்த தயிர் – 1/4 ka
தேங்காய் பால் – 1/4 கப்
மல்லி இலை – 1/4 கப்
புதினா இலை – 1/4 கப்
பச்சை மிளகாய் – 4
ingredients
நல்ல எண்ணெய் அல்லது நெய் – 100 மில்லி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
பாசுமதி அரிசியை தண்ணீரில் கழுவி வடிகட்டி வைக்கவும்.
தக்காளியை மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா இலை இவற்றை தனித் தனியாக சிறிது நீர் விட்டு கட்டியாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் மட்டனை சிறிதளவு தண்ணீர் விட்டு மூன்று விசில் வரும் வரை வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, நன்றாக காய்ந்தவுடன் பொடித்து வாய்த்த பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும். பின்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிறமாக வரும் வரை கிளறவும். இத்துடன், பொடியாக நறுக்கிய தக்காளியை போடவும். தக்காளி நன்றாக சேர்ந்தவுடன் அரைத்து வைத்த மசால் ஒவ்வொன்றாக சேர்த்து கிளறவும். எண்ணெய் பிரியும் வரை கிளறவும். இத்துடன் தேங்காய் பால் சேர்க்கவும். அதுவும் நன்றாக மசாலுடன் சேர்ந்தவுடன், மட்டன் சேர்க்கவும். பின்பு, தயிரையும் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
மற்றுமொரு அகண்ட பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் கொதிக்க விட்டு பாசுமதி அரிசியை போடவும். உப்பு சேர்க்கவும். அரிசி முக்கால் பாகம் வெந்தவுடன் வேகவைத்த மசாலில் சேர்க்கவும். பாத்து நிமிடங்கள் மிதமான தீயில் அடி பிடிக்காமல் கிளறி, பின்பு இறக்கவும்.
மற்றுமொரு முறையாக, எண்ணெயில் வேக வைத்த மசாலை குக்கரில் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து அதில் அரிசி மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கலாம். இது சற்று சீக்கிரம் முடியும்.
தயிர் வெங்காயம் (raitha) அல்லது தால்சா சேர்த்துச் சாப்பிட சுவையான பிரியாணி ரெடி

02
தேவையான பொருட்கள்
கோழி தொடை – 4
எண்ணெய் – 1/2 லிட்டர்
ஜிலேபி பவுடர் – சிறிது
மைதா மாவு – 50 கிராம்
கடலை மாவு – 50 கிராம்
சில்லி சிக்கன் பவுடர் – 50 கிராம்
எலுமிச்சை பழம் – 1
இஞ்சி,பூண்டு விழுது – 2 ஸ்பூ ன்
உப்பு – தேவையான அளவு
முட்டை – 1 (வெள்ளை கரு மட்டும்)
செய்முறை:-
கோழியை சுத்தம் செய்து அதில் கத்தியை வைத்து அங்கும் இங்கும் மாக சிறிது கீறல் போடவும்.(கறியில் மசாலா நன்கு சேர்வதற்க்காக)
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, சில்லி சிக்கன் பவுடர், இஞ்சி,பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அத்துடன் கலருக்காக சிறிது ஜிலேபி பவுடரையும் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர நன்கு கலக்கவும்.
இந்த கலவையில் கறியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும்.
எண்ணெய் நன்கு கொதிக்கும் போது கறியை அதில் போட்டு நன்கு வேக விடவும்.
கறி கோழி வேகும் போது திருப்பி திருப்பி போட வேண்டும்.
( மிக மிக முக்கியம் ) அடுப்பு குறைந்த அளவு வெப்பத்தில் இருக்க வேண்டும்.
கறி நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும்.
சுவையான தந்தூரி சிக்கன் தயார்
குறிப்பு:-
சில்லி சிக்கன் பவுடர் வேண்டாம் என்று நிங்கள் நினைத்தால் அதற்க்கு பதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து செய்யலாம்

மீன்/கோழி/நண்டு/முட்டை குழம்பு


DSC06249-300x225
ஒவ்வொரு ஊருக்கு ஒரு சமையல் அல்லது ருசி தனிபெயர் பெற்றதாக இருக்கும். காரைக்குடி ஆச்சி சமையல், குழிஅப்பம், அசைவ உணவுகள் ரொம்பவே பிரசித்தி பெற்றவை. முல்ஸ்ஊர் பிரியாணி (அட அதாங்க ஆம்பூர் பிரியாணி), கன்யாகுமரி, நாகர்கோயில் பக்கம் சாம்பாரில் கூட தேங்காய் அரைத்துவிடுவார்கள், சேலம் பக்கம் சாம்பார், குழம்பு எதுவாக இருந்தாலும் சர்க்கரை அல்லது வெல்லம் சிறிது சேர்பார்கள்.
இப்படி எந்த வகையிலும் தனிப்பட்ட முறையில் பிரசத்தி பெறாத ஊர் விழுப்புரம். சுற்றபுரங்களில் நிறைய கிராமங்கள் இருப்பதால், காய்கரி, கீரை வகைகள், தயிர் போன்றவை நன்றாக கிடைக்கும். அதனால் எங்கள் வீட்டு சமையலில் என்ன தனிப்பட்ட முறையில் ஸ்பெஷல் என்று சொல்ல தெரியவில்லை, இதுவரையில் சாப்பிட்ட அசல் ஊர் நண்பர்கள் சமையல் ருசி நன்றாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். என்னுடைய ஆயா தான் சமையல் எனக்கு சொல்லி கொடுத்திருக்கிறார்கள். அம்மா வீட்டில் சுத்த சைவம் (கவி -சைவம் அசைவம் இரண்டுக்கும் பிறந்த கிராஸ்), அப்படி சுத்தமான சைவ அம்மாவை அசைவமாக்கிய பெருமை ஆயாவை சேரும் என்பதை விடவும் அவர்களின் சமையல் ருசி, யாரையுமே எதையும் விட்டுவைக்காமல் சாப்பிட செய்துவிடும். :). ஆயா சொல்லிக்கொடுத்த சமையலிலிருந்து சில அசைவ உணவுகள் செய்முறையை எழுதிவைக்க நினைக்கிறேன்.
மீன் குழம்பு :
தேவையான பொருட்கள் :
மீன் – 1/2 கிலோ (குழம்பு மீன்)
புளி – 1 1/2 எலுமிச்சை பழம் அளவு (மீடியம் சைஸ் எலுமிச்சை)
தக்காளி – 2 (மீடியம் சைஸ், நாட்டு தக்காளி )
வெங்காயம் – சின்ன வெங்காயம் ஒரு பெரிய கைப்பிடி (அ) பெரியவெங்காயம் பெரியது ஒன்று
பூண்டு – 10
மிளகு – 10 (எண்ணெய்யில் லேசாக வருத்து அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும், பச்சையாகவும் அரைத்துக்கொள்ளலாம்)
மஞ்சல் பொடி – சிறிது
மிளகாய் பொடி – 4 டேபிள் ஸ்பூன் (இது தனியா +மிளகாய் சேர்ந்த தூள்) தேவைக்கேற்ப நீங்கள் காரத்தை குறைத்தும் கூட்டியும் கொள்ளலாம்
எண்ணெய் – தாளிக்க
உப்பு
வடகம் – 3/4 ஸ்பூன் (இது கடுகு, சீரகம்,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், இடிந்த சின்ன வெங்காயம் & பூண்டு + விளக்கெண்ணெய் சேர்த்து வருடத்திற்கு தாளிக்க தயார் செய்து வைத்துக்கொள்ளுவோம், இதற்கு தனியாக ஒரு செய்முறை உள்ளது, இது இல்லாதவர்கள் வெறும் கடுகு, சீரகம், வெந்தயம், உளந்து சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்)
செய்முறை : வெங்காயம் , பூண்டை தனித்தனியாக நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி வடகம் போடவும், இது இல்லாதவர்கள் கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம் (வெந்தயம் மட்டும் கொஞ்சம் அதிகமாக) போட்டு தாளிக்கவும். சிவக்கும் போது, நசுக்கிய பூண்டை போட்டு வதக்கவும். பூண்டு வாசனை வர சிவந்தவுடன், நசுக்கிய வெங்காயத்தை போடவும். நன்றாக வதங்கி லேசாக சிவக்கும் போது, பொடியாக நறுக்கிய தக்காளி, கருவேப்பிலை இலை சேர்த்து நன்கு வதங்கியவுடன், கரைத்து வடிக்கட்டிய புளித்தண்ணீரை விட்டு, மஞ்சள் பொடி, மிளகாய் தூள், மிளகு விழுது, உப்பு சேர்த்து மூடிவிடவும்.
DSC06249-300x225
குழம்பை இப்படி கூட்டி அடுப்பில் வைத்துவிட்டு, மீனை சுத்தம் செய்ய செல்லலாம். மீனை கழுவி சுத்தம் செய்வதற்குள் குழம்பு கொதித்துவிடும். குழம்பு மிளகாய் தூள் வெடுப்பு (வாசம்) போகும் வரை நன்றாக கொதிக்க வேண்டும். நன்கு கொதித்தவுடன், கழுவிய மீன்களை போட்டு, 3-4 நிமிடங்களுக்குள் இறக்கிவிடவேண்டும். மீன் சட்டென்று வெந்துவிடும், அதிக நேரம் வைத்தால் மீன் குழைந்துவிடும். இறக்கியவுடன் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி போட்டுவிடவும்.
மீன் குழம்பு ரெடி. :). மீன் குழம்பை சட்டியில் செய்தால் தனி ருசி.
***************************
நண்டு குழம்பு :
நண்டு சளிக்கு ரொம்பவே நல்லது. மார் சளி விடாது இருந்தால், ஆயா நண்டு குழம்பு வைத்துக்கொடுப்பார்கள். அதுவும் வயல் நண்டு. இது கருப்பு & சாம்பல் சேர்ந்த நிறத்தில் குட்டி குட்டியாக இருக்கும். இதை வயலில் வேலை செய்யும் பெண்களிடம் சொல்லி வாங்குவார்கள். உயிருடன் பிடித்து வந்து தருவார்கள், உயிருடன் இருப்பதால் சள சள வென அந்த பையில் சத்தம் கேட்கும் :). நண்டை சுத்தம் செய்து, அம்மியில் வைத்து ஒரு நசுக்கு நசுக்கி சமைக்க தயார் செய்து க்கொள்வார்கள். கடல் நண்டை நசுக்க மாட்டார்கள். இரண்டுக்கும் இது தான் சமைக்கும் போது உள்ள வித்தியாசம்.
தேவையான பொருட்கள்.:-
நண்டு – 4 (கடல் நண்டாக இருந்தால், வயல் நண்டு 7-10)
வெங்காயம் – சின்ன வெங்காயம் கை அளவு
பூண்டு – 10
தேங்காய் – அரை மூடியில் பாதி
தக்காளி- 2 (நாட்டு)
மிளகு – 20
வடகம் – 3/4 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி – சிறிது
உப்பு
செய்முறை : வெங்காயம், பூண்டு தனித்தனியாக நசுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். மிளகை வறுத்து விழுதாக்கிக்கொள்ள வேண்டும். வாணல் வைத்து, வடகம் வாசனை வர தாளித்து, முதலில் பூண்டு, பின் வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கி தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி, மிளகாய் தூள், மிளகு விழுது, உப்பு சேர்த்து நன்கு மிளகாய் வெடுப்பு (வாசனை) போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும் கொதித்தவுடன் சுத்தம் செய்த நண்டை போட்டு கொதிக்கவிடவும். நண்டு வெந்தவுடன், தேங்காயை அரைத்து ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, அதில் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி போட்டுவிடவும்.
நண்டு குழம்பு ரெடி. !
********************************
கோழி குழம்பு
தேவையான பொருட்கள் :
கோழி – 1/2 கிலோ
பூண்டு – 8
இஞ்சி – ஒரு பெரிய துண்டு
வெங்காயம் – பெரியது ஒன்று அல்லது சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி
தக்காளி – 2 (நாட்டு)
பச்சை மிளகாய் – 1 (அ) 2
மிளகாய் பொடி – 3 ஸ்பூன்
மிளகு – 6 (தேவைப்பட்டால், யாருக்காவது வீட்டில் சளி பிடித்திருந்தால் மட்டுமே இதை நான் சேர்ப்பது வழக்கம்)
மஞ்சள் பொடி – சிறிது
உருளை கிழங்கு – 3 (மீடியம் சைஸ்)
சோம்பு – 1 ஸ்பூன்
லவங்கம் – 3
பட்டை – சிறிது
பட்டை இலை – சிறிது
எண்ணெய்,
உப்பு
செய்முறை : இஞ்சி, பூண்டு, சோம்பு, லவங்கம் 2, மிளகு சேர்த்து நன்கு வெண்ணெய் போல் அரைத்துக்கொள்ளவும். வெங்காயம் நசுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். வாணல் வைத்து, லவங்கம் 1, பட்டை, பட்டை இலை போட்டு சிவந்தவுடன் அரைத்த இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதக்க வேண்டும். நன்கு வதங்கியவுடன், நசுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, பின் தக்காளி, நீட்டில் நறுக்கிய பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கி, உருளைக்கிழங்கை தோல் நீக்கி மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி , மஞ்சள் பொடி சேர்த்து சிறு தீயில் வைத்து நன்கு வதக்கவும்.
இது வதங்கும் சமயம் கோழியை சுத்தம் செய்து விடலாம். சுத்தம் செய்த கோழியை இதனுடன் சேர்த்து வதக்கவும். கோழி வதங்கியவுடன் குக்கரில் கொட்டி, லேசாக தண்ணீர் தெளித்து, மிளகாய் தூள், உப்பு சேர்த்து மூடிவிடவும். இரண்டு விசில் வந்தவுடன் இறக்கி, அதிலுள்ள 4-5 துண்டுகள் உருளைக்கிழங்கை மட்டும் கரண்டியால் மசித்துவிடவும். இப்படி செய்வதால் குழம்பு கெட்டியாக இருக்கும். தேங்காய் அரைத்து விட வேண்டியது இல்லை.
கொத்திமல்லி தழை தூவி இறக்கிவிடவும். கோழி குழம்பு ரெடி.
************************************
முட்டை குழம்பு :
இதற்கு மீன் குழம்புக்கு சொன்ன அத்தனை பொருட்களும் தேவை. மிளகு கிடையாது, தேங்காய் அரை மூடியில் பாதி தேவை, முட்டை – 4.
மிளகை தவிர்த்து மீன் குழம்பிற்கு சொன்னதை போன்று செய்து குழம்பு நன்கு கொதித்தவுடன், தேங்காய் அரைத்து ஊற்றிவிடவும். ஒரு கொதி வந்தவுடன், முட்டையை உடைத்து (வாணலில் வேறு வேறு இடத்தில்) ஊற்றி 2-3 நிமிடங்கள் கொதித்தவுடன் கரண்டியால் கிண்டாமல் இறக்கிவிடவும்.
கொத்தமல்லி தழை தூவிவிடவும்.
முட்டை குழம்பு ரெடி!
*******************************
அணில் குட்டி அனிதா: என்ன அம்மணி தீடீர்னு சமையல் பக்கம் இறங்கிட்ட்டாங்க…?!!… அவங்க ஆயா நல்லாத்தான் சமைப்பாங்க. .இவிங்க சமையலை பத்தி.. இவிங்க புள்ளக்கிட்டயும் இவிங்க ஹப்பி கிட்டயும் கேட்டாத்தான் தெரியும்… !!

முருங்கை இலையின் பருத்துவ குணங்கள்



38893சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்
பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.
முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர். முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று. இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
– அகத்தியர் குணபாடம்
வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.
கண்களைப் பாதுகாக்க
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.
ஞாபக சக்தியைத் தூண்ட
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.
இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பித்தம் குறைய
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
பெண்களுக்கு
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.
தாது புஷ்டிக்கு
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்