SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Thursday, 26 January 2017

இதுவும் கடந்து போகும்

என் வாழ்வின் துயரம் உயிர் பெற்றது 
என் வாழ்வின் சந்தோஷம் துயில் கொண்டது 

கஷ்டங்கள் யாவும் படையென வருகிறது 
துன்பங்கள் யாவும் உயிரென பரவுது 
என்று நினைக்கும் உன் நிமிடங்கள் 
வெற்றியின் சறுக்கு 

தாய்மையின் கண்ணீரில் தான் 
நாம் உயிர் பெற்றோம் 
தந்தையின் இரத்தத்தில் தான் 
நாம் சிகை அழகு கொண்டோம் 

அவர் அவர் கஷ்டங்களை நினைத்திருந்தால் 
நாம் பிறந்திருப்போமா 
துயரங்களை சந்தித்திருப்போமா 
வாழ்வை வாழ்ந்திருப்போமா 

சிந்திய வியர்வை உடலில் சேர்க்க முடியாது 
பண்ணிய பாவங்கள் மறைக்க முடியாது 

நடந்தது நடந்து விட்டது 
நேரும் நொடிகள் நாம் 
செதுக்கிய கல்லில் இருந்து வந்தது 

எதிர்த்து நில் 
அப்பொழுது அலையின் வேகத்தை பார்க்க முடியும் 
எதிர் நீச்சல் போட முடியும் 
பயந்து போனால் இழப்பது 
வாழ்வை அல்ல 
உயிரின் மதிப்பை 

இதுவும் கடந்து போகும் என நினை 
கஷ்டங்கள் கடந்து போகும் 
சந்தோஷம் கடந்து போகும் 
துயரம் கடந்து போகும் 
போதை கடந்து போகும் 
பயம் கடந்து போகும் 
சங்கடம் கடந்து போகும் 
தற்பெருமை கடந்து போகும் 

No comments:

Post a Comment