SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Thursday 2 July 2015

குருப்பெயர்ச்சி பலன்கள்2015-2016எளிய பரிகாரங்களுடன் !sadhasivam
குத்தறிவு சிந்தனை அதிகம் உள்ளவர் நீங்கள். குரு பகவான் 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டில் அமர்கிறார். இனி, உங்களுடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்தப் போகிறார். வீட்டில் சந்தோஷம் குடிகொள்ளும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்கள் மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாகும். 
குரு தனது 9ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால், முகப் பொலிவு கூடும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அடகில் இருந்த பத்திரங்கள், நகைகளை மீட்பீர்கள். சிலருக்கு நல்ல வேலை அமையும். சொத்து வாங்கும் முயற்சி பலிதமாகும்.
குரு பகவான் தனது 5ம் பார்வையால் 9ம் வீட்டைப் பார்ப்ப தால் இழுபறியான வேலைகள் முடிவடையும். புதிய யோசனைகள் உதயமாகும். தந்தை வழியில் ஆதரவு பெருகும். லாப வீடான 11ம் வீட்டை குரு தனது 7ம் பார்வையால் பார்ப்பதால், நிர்வாகத் திறமை கூடும். மூத்த சகோதர சகோதரிகளுடனான பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலமாக பணம் வரும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை கேதுவின் மகம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் சுபச் செலவுகள் அதிகமாகும். அசுவினி நட்சத் திரக்காரர்களுக்கு தூக்கம் குறையும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள்.
7.9.15 முதல் 16.11.15 வரை; 20.5.16 முதல் 9.7.16 வரை உங்கள் தனசப்தமாதிபதியான சுக்ரனின் பூர நட்சத்திரத்தில் குரு செல்வதால், அடிப்படை வசதிகள் பெருகும். பணவரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு பொறுமை அவசியம்.
17.11.15 முதல் 20.12.15 வரை; 10.7.16 முதல் 1.8.16 வரை பூர்வ புண்யாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் குரு செல்வதால், அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். எனினும், உங்களுடைய  மகளின் திருமணத்துக்காக கடன் வாங்க வேண்டியது இருக்கும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உங்கள் ராசிக்கு 6ல் குரு அமர்வதால், எதிர்ப்புகள், உங்களைப் பற்றிய வீண் விமர்சனங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது, பழைய கடனை நினைத்து மனம் கலங்குவீர்கள். எனினும், உங்கள் வளர்ச்சி தடைப்படாது.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குரு, உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள்.
7.2.16 முதல் 7.3.16 வரையிலும் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரம் அடைவதால் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வந்து நீங்கும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூர நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவிக்கு நெஞ்சு வலி, முழங்கால் வலி வந்து போகும்.
வியாபாரிகள் மாறுபட்ட அணுகு முறையால் சாதிப்பார்கள். தேங்கிக் கிடந்த சரக்குகளை விளம்பர யுக்தி களால் விற்றுத் தீர்ப்பீர்கள். உணவு, தங்கும் விடுதி, கமிஷன், பவர் ப்ராஜெக்ட், துணி வகைகளால் லாபம் உண்டு. பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தேடி வருவார்கள். உங்கள் கருத்துக்கு ஆதரவு தரும் புதிய பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வீர்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.    
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச் சுமைகள் குறையும். அலுவலகத்தில் உங்களின் கை ஓங்கும். உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப் படுவார். புதிதாக வந்து சேரும் அதிகாரி, உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார். உங்கள் மீதான அவதூறு வழக்கு, வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் இனி தடையின்றி கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்த அன்பர்களில் சிலர், உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவார்கள்.
கன்னிப்பெண்களுக்கு நல்ல வரன் அமையும். தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும். தாயாருடன் இருந்துவந்த கருத்து மோதல்கள் யாவும் விலகும்.
மாணவ  மாணவிகள், கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவார்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டுகள் கிடைக்கும். இந்த ராசியைச் சேர்ந்த கலைத் துறையினர், மக்கள் மத்தியில் பிரபலமாவார்கள். படைப்புகளால் அவர்களுக்கு புகழ் சேரும்.
ஒட்டுமொத்தத்தில், இந்த குருப்பெயர்ச்சி தாழ்வு மனப் பான்மையில் இருந்தும், சோகத்தில் இருந்தும் உங்களை விடுவிப்பதுடன், மகிழ்ச்சி, பண வரவு, செல்வாக்கு ஆகியவற்றை அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்:
பிரதோஷ நாட்களில், மதுரை மாவட்டம் திருவாதவூருக்குச் சென்று, ஸ்ரீ ஆரணவல்லி உடனுறை ஸ்ரீ திருமறைநாதரை அருகம்புல், வில்வ இலை, இளநீர் ஆகியவற்றைச் சமர்ப்பித்து வழிபடுங்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள்; நினைத்தது நிறைவேறும்.

அடிமனதில் ஆயிரம் திட்டங்களை கொண்டிருப்பவர் நீங்கள். குரு பகவான் இப்போது 5.7.15 முதல் 1.8.16 வரை 4வது வீட்டில் அமர்கிறார். உங்கள் அஷ்டமாதிபதியும் லாபாதி பதியுமான குரு 4ல் அமர்வதால், உங்களின் அடிப்படை நற்குணங்கள் மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். செலவும், வேலைச் சுமையும் அதிகரிக்கும்.
வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி சற்று தாமதமாக கிடைக்கும்.திருமணம், கிரகப் பிரவேசத்தை போராடி முடிக்க வேண்டி வரும்.அரசாங்க அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டவேண்டாம். தம்பதிக்கு இடையே வீண் சச்சரவுகள் ஏற்படலாம். அனுசரித்து போகவும். சொத்து ஆவணங்கள் தொலைந்துபோகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
குரு 5ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8ம் வீட்டைப் பார்ப்பதால் வேற்று நபர்களால் ஆதாயம் உண்டு. 10ம் வீட்டை குரு 7ம் பார்வையால் பார்ப்பதால் உத்தியோகத்தில் பிரச்னை கள் குறையும். சிலருக்கு புது வேலை,  கௌரவ பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குருபகவான் தனது 9ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12ம் வீட்டை குரு பார்ப்பதால், சுபச் செலவுகள் அதிகமாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குரு கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் செலவுகள் உண்டு. சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். 7.9.15 முதல் 16.11.15 மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை உங்கள் ராசி நாதனும், சஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், ஓரளவு பணம் வரும். சிலர் புது வாகனம் வாங்குவீர். திருமணம் கூடி வரும்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குரு உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதத்தில் செல்வதால், எதிர்ப்புகள் குறையும். தாயாருடன் வீண் விவாதங்கள் ஏற்படும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். தாய்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன் கையொப்பமிட வேண்டாம்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம், கன்னி ராசியில் செல்வதால், மன இறுக்கம் குறையும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்களுடனான மோதல்கள் விலகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குரு உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் ஓரளவு பணவரவு உண்டு. தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் மறைமுக எதிரி களால் ஆதாயம் அடைவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வங்கிக்கடன் உதவியும் கிடைக்கும். வழக்கு நெருக்கடிகள் நீங்கும். புது வேலைக்கான முயற்சி பலன் தரும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், தள்ளிப்போன காரியங்கள் முடிவடையும். கணவன்மனைவிக்குள் பனிப்போர் நீங்கும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்ய குறைந்த வட்டிக்குக் கடன் வாங்குவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். இந்த கால கட்டத்தில், இந்த ராசியைச் சேர்ந்த சில அன்பர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
வியாபாரிகள், தொழிலை விரிவுப் படுத்த கடன் வாங்க வேண்டாம். வணிக விஷயங்களில் கறார் தேவை. பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம், கூட்டுத் தொழில் துவங்குவது ஆகியவற்றுக்குமுன் வழக்கறிஞரை ஆலோசிக்கவும். ஹோட்டல், கெமிக்கல், எண்ணெய், மூலிகை, கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். தலைமை அதிகாரிகள் உங்களைப் பற்றி நன்கு புரிந்துவைத்திருந்தாலும், நேரடி அதிகாரி, உங்களை குறை கூறிக்கொண்டு இருப்பார். பதவி, சம்பள உயர்வுகள் சற்று தாமதமாகவே கிடைக்கும். இடமாறுதலும் ஏற்படலாம். சிலருக்கு, அயல் நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். குரு 10ம் வீட்டை பார்ப்பதால் சவால்களைச் சமாளிப்பீர்கள்.
கன்னிப்பெண்களுக்கு மனதுக்குப் பிடித்த மணாளன் அமைவார். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள் வகுப்பறையில் வீண் அரட்டை அடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். விரும்பிய பாடப்பிரிவில் சேர கொஞ்சம் போராட வேண்டியிருக்கும்.கலைத் துறையினர், வேற்று மொழி படைப்புகளால் புகழ் பெறுவார்கள். எனினும், உங்களைப் பற்றி வீண் வதந்திகளும் வந்துசேரும்; மனம் தளரவேண்டாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி இடமாற்றத்தையும் பணப் பற்றாக்குறையையும் தந்தாலும், உங்களுக்கு வாழ்வின் நெளிவுசுளிவுக்ளைக் கற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: ஏகாதசி திதி நடைபெறும் நாளில் திண்டுக்கல் அருகிலுள்ள வேடசந்தூர் சென்று, அங்கு அருளும் ஸ்ரீ நரசிம்மருக்கு துளசி மாலை சமர்ப்பித்து வணங்குங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்; எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

காலத்தால் அழியாத காரி யங்களைச் செய்வதில் வல்லவர்களான உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் மறைந்திருந்து, உங்களை நிம்மதி யில்லாமல் அலைக்கழித்த குருபகவான் 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாகத் தொடர இருப் பதால், பொறுப்புகளும், வேலைச் சுமையும் அதிகரிக்கத்தான் செய்யும். சில நேரங்களில் பெரிய நோய்கள் இருப்பது போன்ற பயம் வந்துபோகும். கணவன்மனைவிக்குள் ஈகோப் பிரச்னையால் பிரிவு வரக் கூடும். வேலைச்சுமையால் உடல் அசதி, சோர்வு வந்து போகும்.
குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பங்கு கைக்கு வரும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டைப் பார்ப்பதால், இழுபறியான வேலைகள் உடனே முடியும். ஜென்ம குருவால் கணவன்மனைவிக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் வந்தாலும், குருவின் பார்வையால் அன்பு குறையாது.
பாக்ய வீடான 9ம் வீட்டின் மீது குருபகவானின் பார்வை விழுவதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தையாரின் உடல்நிலை சீராகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், மகம் நட்சத்திரக்காரர்களுக்கு மஞ்சள் காமாலை, சோர்வு வந்து நீங்கும். வீண்பழி, குடும்பத்தின் மீது பற்றின்மை வந்து போகும். பூரம், உத்திரம் 1ம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை, பொருள் இழப்புகள், வீண் அலைச்சல் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள், இளைய சகோதர வகையில் சச்சரவுகள் வரக்கூடும். மகம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும்.  
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குருபகவான் உங்கள் ராசிநாதன் சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதத்தில் செல்வதால், அடிவயிற்றில் வலி, மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு, வந்து செல்லும். இக்காலக்கட்டத்தில் மகம், பூரம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஏமாற்றங்கள் குறையும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், திடீர் யோகம், பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், பணப்பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள்.  
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் உங்கள் ராசியிலேயே குரு வக்ரமடைவதால், பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், பிரபலங்களின் உதவியுடன் தள்ளிப் போன காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.
வியாபாரிகளே! தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற கவலை இருக்கும். புது முதலீடுகளோ, முயற்சிகளோ வேண்டாம். பல நேரங்களில் நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி என்ற வகையில் வேலை பார்க்க வேண்டி வரும்.  ரியல் எஸ்டேட், ஏற்றுமதிஇறக்குமதி, கமிஷன் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களே! ஓய்வெடுக்க முடியாதபடி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டி வரும். உங்களிடம் ஆலோசனைக் கேட்டுவிட்டு அதைத் தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற அச்சம் தினந்தோறும் எழும்.
மாணவமாணவிகளே! பொழுதுபோக்குகளில் மனதைச் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்தினால்தான், தேர்வுகளில் வெற்றி பெறமுடியும். சந்தேகங்களைத் தயங்காமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.
கலைத்துறையினரே! உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்த வண்ணம்தான் இருக்கும். அதைப் பொருட்படுத்த வேண்டாம். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.
மொத்தத்தில் இந்த குரு மாற்றம் உங்களை சூழ்நிலைக் கைதியாக மாற்றினாலும் அனுபவ அறிவாலும், விடாமுயற்சியாலும் இலக்கை எட்டிப்பிடிக்க வைக்கும். 

பரிகாரம்: அமாவாசை தினங்களில், தஞ்சை - கண்டீயூருக்கு அருகிலுள்ள திருவேதிக்குடிக்குச் சென்று, ஸ்ரீ மங்கையர்க்கரசி உடனுறை ஸ்ரீ வேதபுரீஸ்வரரை, வில்வத்தால் அர்சித்து வணங்குங்கள். இதய நோயாளிகளுக்கு உதவுங்கள்; வாழ்க்கை சிறக்கும்.



 காலத்தால் அழியாத காரி யங்களைச் செய்வதில் வல்லவர்களான உங்கள் ராசிக்கு 12வது 
வீட்டில் மறைந்திருந்து, உங்களை நிம்மதி யில்லாமல் அலைக்கழித்த குருபகவான் 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்ம குருவாகத் தொடர இருப் பதால், பொறுப்புகளும், வேலைச் சுமையும் அதிகரிக்கத்தான் செய்யும். சில நேரங்களில் பெரிய நோய்கள் இருப்பது போன்ற பயம் வந்துபோகும். கணவன்மனைவிக்குள் ஈகோப் பிரச்னையால் பிரிவு வரக் கூடும். வேலைச்சுமையால் உடல் அசதி, சோர்வு வந்து போகும்.
குருபகவான் தனது 5ம் பார்வையால் உங்களின் 5ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகள் பொறுப்பாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பங்கு கைக்கு வரும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டைப் பார்ப்பதால், இழுபறியான வேலைகள் உடனே முடியும். ஜென்ம குருவால் கணவன்மனைவிக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் வந்தாலும், குருவின் பார்வையால் அன்பு குறையாது.
பாக்ய வீடான 9ம் வீட்டின் மீது குருபகவானின் பார்வை விழுவதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தையாரின் உடல்நிலை சீராகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், மகம் நட்சத்திரக்காரர்களுக்கு மஞ்சள் காமாலை, சோர்வு வந்து நீங்கும். வீண்பழி, குடும்பத்தின் மீது பற்றின்மை வந்து போகும். பூரம், உத்திரம் 1ம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை, பொருள் இழப்புகள், வீண் அலைச்சல் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள், இளைய சகோதர வகையில் சச்சரவுகள் வரக்கூடும். மகம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும்.  
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குருபகவான் உங்கள் ராசிநாதன் சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதத்தில் செல்வதால், அடிவயிற்றில் வலி, மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு, வந்து செல்லும். இக்காலக்கட்டத்தில் மகம், பூரம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஏமாற்றங்கள் குறையும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், திடீர் யோகம், பணவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், பணப்பற்றாக்குறையைச் சமாளிப்பீர்கள்.  
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் உங்கள் ராசியிலேயே குரு வக்ரமடைவதால், பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், பிரபலங்களின் உதவியுடன் தள்ளிப் போன காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.
வியாபாரிகளே! தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற கவலை இருக்கும். புது முதலீடுகளோ, முயற்சிகளோ வேண்டாம். பல நேரங்களில் நீங்களே முதலாளி, நீங்களே தொழிலாளி என்ற வகையில் வேலை பார்க்க வேண்டி வரும்.  ரியல் எஸ்டேட், ஏற்றுமதிஇறக்குமதி, கமிஷன் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களே! ஓய்வெடுக்க முடியாதபடி எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டி வரும். உங்களிடம் ஆலோசனைக் கேட்டுவிட்டு அதைத் தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக் கொள்வார்கள். வேலையில் நீடிப்போமோ, நீடிக்க மாட்டோமோ என்ற அச்சம் தினந்தோறும் எழும்.
மாணவமாணவிகளே! பொழுதுபோக்குகளில் மனதைச் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்தினால்தான், தேர்வுகளில் வெற்றி பெறமுடியும். சந்தேகங்களைத் தயங்காமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.
கலைத்துறையினரே! உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்த வண்ணம்தான் இருக்கும். அதைப் பொருட்படுத்த வேண்டாம். பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.
மொத்தத்தில் இந்த குரு மாற்றம் உங்களை சூழ்நிலைக் கைதியாக மாற்றினாலும் அனுபவ அறிவாலும், விடாமுயற்சியாலும் இலக்கை எட்டிப்பிடிக்க வைக்கும். 

பரிகாரம்: அமாவாசை தினங்களில், தஞ்சை - கண்டீயூருக்கு அருகிலுள்ள திருவேதிக்குடிக்குச் சென்று, ஸ்ரீ மங்கையர்க்கரசி உடனுறை ஸ்ரீ வேதபுரீஸ்வரரை, வில்வத்தால் அர்சித்து வணங்குங்கள். இதய நோயாளிகளுக்கு உதவுங்கள்; வாழ்க்கை சிறக்கும்.


. இதயத்தில் இருப்பதை மறைக் காமல் பேசும் இயல்பு கொண்ட உங்களுக்கு இதுவரை 10ம் இடத்தில் இருந்து பலவகைகளிலும் பாடாய்ப்படுத்திய குருபகவான், 5.7.15 முதல் 1.8.16 வரை
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11ம் வீட்டில் அமர்வதால், பட்டுப் போன மரம் மீண்டும் துளிர்ப்பது போல இனி தொட்ட காரியங்கள் துலங்கும். குடும்ப வருமானம் உயரும். கணவன்மனைவியிடையே ஒற்றுமை நிலவும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் ஒருவழியாகத் தந்து முடிப்பீர்கள். மூத்த சகோதரர்கள் உதவுவர்கள்.  எதிர்ப்புகள் குறையும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள்.
உங்களுடைய 3ம் வீட்டை குரு பார்ப்பதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கு சாதகமாகும். எதிர்பாராத பணவரவு உண்டு. சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.  
குரு 5ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களுடைய அடிப்படை வசதிகள் பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலையும் கிடைக்கும். குரு தனது 9ம் பார்வையால் உங்களின் 7ம் வீட்டைப் பார்ப்பதால், விலை உயர்ந்த ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சோர்வு, சலிப்பு நீங்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு பெருகும்.    
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பணப்பற்றாக்குறை தீரும்.
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், இக்காலக்கட்டத்தில் திடீர் பணவரவு உண்டு. மனைவி வழியில் உதவி உண்டு.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குருபகவான், சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். அந்தஸ்து உயரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், திடீர்ப் பயணங்கள் உண்டு. உறவினர், நண்பர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அவ்வப்போது தூக்கம் குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், பல வேலை களையும் முழு மூச்சுடன் முடிப்பீர்கள். உற்றார், உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால், அடிவயிற்றில் வலி, வேலைச்சுமை, வந்து செல்லும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்கியம் சீராகும். கணவன்மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும்.
வியாபாரிகளே! பற்று வரவு உயரும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு சலுகைத் திட்டங்களை அறிவித்து லாபம் ஈட்டுவீர்கள். வர்த்தகர்கள் சங்கம், இயக்கம் இவற்றில் புதிய பொறுப்புகள், பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கண்ணாடி, அழகு சாதனப் பொருட்கள், ஹோட்டல், ஹார்டுவேர்ஸ் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.          
உத்தியோகஸ்தர்களே! உத்தியோகத்தில் இனி உங்கள் கை ஓங்கும். தடைப்பட்டுக் கொண்டிருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.
மாணவமாணவிகளே! படிப்பிலிருந்த மந்த நிலை மாறி அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! உங்கள் திறமைக்கேற்ற வாய்ப்புக்கள் கிடைக்கும். பணவரவும் அதிகரிக்கும்.
இந்த குரு மாற்றம் அடிமட்டத்தில் இருந்த உங்களை மலையென உயர்த்துவதுடன், சாதனைப் பட்டியலிலும் இடம்பெற வைக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் திருநெல்வேலி - புன்னைக் காயல் வழித்தடத்திலுள்ள சேர்ந்தபூமங்கலம் சென்று,ஸ்ரீ சிவகாமி அம்மன் உடனுறை கயிலாயநாதரை தும்பைப் பூ அல்லது மல்லிகை மாலை அணிவித்து வணங்குங்கள்.   பார்வை இல்லாதவர்களுக்கு உதவுங்கள்; வெற்றி பெறுவீர்கள்.

ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்கும் அசாத்திய திறமை கொண்ட உங்களுடைய ராசிக்கு இதுவரை 9வது வீட்டில் இருந்த குருபகவான் 5.7.15 முதல் 1.8.16 வரை உங்கள்  ராசிக்கு 10ம் இடத்துக்கு மாறுகிறார். ஆனாலும், பதற்றம் வேண்டாம்.உங்கள் யோகாதிபதியான சூரியனின் வீட்டில் குரு அமர்வதால், உங்களுக்கு கெடுபலன்கள் பெருமளவு குறையும். பிரச்னைகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். வெளிநாட்டில் சிலருக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் சின்னச் சின்ன சலசலப்புகள் வரும்.  
ஒரேநாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் அவ்வப்போது தலை தூக்கும். வழக்கு சம்பந்தமான விஷ யங்களில் பின்னடைவு ஏற்படும். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதைச் சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருத்தப் படுவீர்கள். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும்.
உங்கள் ராசிக்கு 2ம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால், எதிர்பார்த்திருந்த பணம் கிடைக்கும். சிறிதளவு பணம் சேமிக்கவும் முடியும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிதாக வண்டி வாங்குவீர்கள்.
குருபகவான் தனது 7ம் பார்வையால் சுக ஸ்தா னத்தைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நலம் சீராகும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.  
உங்களின் 6ம் வீட்டை குரு தனது 9ம் பார்வையால் பார்ப்பதால், எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
5.7.15 முதல் 6.9.15 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள். வாழ்வின் முன்னேற்றத்துக்குக் காரணமானவர்களைச் சந்திப்பீர்கள்.  
7.9.15 முதல் 16.11.15 வரை மற்றும் 20.5.16 முதல் 9.7.16 வரை, சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், திடீர்ப் பயணங்கள், செலவினங்கள் உண்டு. மனைவியின் ஆரோக்கியமும் பாதிக்கும்.
17.11.15 முதல் 20.12.15 வரை மற்றும் 10.7.16 முதல் 1.8.16 வரை குருபகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால், உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். அரசு காரியங்கள் உடனே முடியும். புது வேலை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
21.12.15 முதல் 19.1.16 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால், கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தடைப்பட்டு வந்த காரியங்களெல்லாம் முடிவடையும்.        
குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
20.1.16 முதல் 6.2.16 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால், பணவரவு அதிகரிக்கும். அரசால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் உதவுவார்கள்.
7.2.16 முதல் 7.3.16 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால், ஓய்வெடுக்க முடியாதபடி வேலைகளும், அலைச்சலும் இருக்கும். எதிர்ப்புகள் அடங்கும்.
8.3.16 முதல் 19.5.16 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால், சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியிலான சொத்துகள் கைக்கு வரும்.  
வியாபாரிகளே! சந்தை நிலவரங்களை அவ்வப்போது அறிந்து முதலீடு செய்யவும். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். மின்னணு, மின்சார சாதனங்கள், மளிகை, ஸ்டேஷனரி மற்றும் துணி வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும். சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துக்களை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த வாய்ப்பிருக்கிறது. பதவி உயர்வுக்காகப் போராட வேண்டி வரும்.  மாணவமாணவிகளே! படிப்பில் கவனம் தேவை. குறிப்பாக வேதியியல், உயிரியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
கலைத் துறையினரே! விமர்சனங்கள் வந்தாலும் முன்னேற்றம் தடைப்படாது. பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அவ்வப்போது ஏமாற்றங்களையும், இழப்புகளையும் தந்தாலும், சமயோசித புத்தியாலும் கடின உழைப்பாலும் வெற்றிபெற வைக்கும்.
பரிகாரம்: கார்த்திகை நட்சத்திர நாட்களில், மருதமலைக்குச் சென்று, ஸ்ரீ முருகப்பெருமானுக்கு 
நெய்தீபம் ஏற்றி வைத்து, வணங்கி வழிபட்டு வாருங்கள். ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு பொருளுதவி செய்யுங்கள்; மகிழ்ச்சி தங்கும்.

No comments:

Post a Comment