SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Thursday, 13 August 2015

தும்பைப் பூ போன்ற இட்லிக்கு !!!



வெள்ளை நிறத்திற்கு உலகமே மல்லிகைப் பூவை எடுத்துக்காட்டாக சொல்லும்போது எங்கள் ஊர் பக்கம்  தும்பைப் பூவைத்தான் உதாரணத்திற்கு சொல்லுவாங்க‌. இல்லையென்றால் பஞ்சை(பருத்தி) சொல்லுவாங்க‌. அப்படித்தான் இட்லியையும் எல்லோரும் ‘மல்லிகைப்பூ மாதிரி’ என சொல்லும்போது நாங்க மட்டும் ………. என்ன, கண்டுபிடிச்சிட்டீங்களா !!
ஆமாங்க, ‘தும்பைப்பூ மாதிரி இட்லி வெள்ளை வெளேர்னு வந்திருக்கு பாரு’ என்றுதான் சொல்லுவோம். அதனால்தான் தலைப்பைபும் அப்படியே வைத்துவிட்டேன்.
ஒருவேளை அந்தந்த ஊரில் விளையும் பொருட்களை வைத்தே உதாரணமும் வந்திருக்கலாம். மல்லிகைப் பூவுக்காவது காம்பு பகுதி கொஞ்சம் பசுமை கலந்த பழுப்பு நிறம் இருக்கும். ஆனால் தும்பைப்பூ பூ, காம்பு என எல்லாமும் பளீர் வெண்மையில் இருக்கும். பசுமையான செடியில் குட்டிகுட்டி வெள்ளைப்பூக்கள் ……..  பார்க்கவே கொள்ளை அழகாக இருக்கும்.
தும்பைப் பூ மாதிரி இட்லி மட்டுமில்லீங்க, இந்தப் பூவை வைத்து முறுக்குகூட சுடுவோம். ஊருக்குப் போனால் தும்பைப் பூவில் முறுக்கு சுட்டு அதை காமிராவிலும் சுட்டு எடுத்து வருகிறேன். இந்தப் பூவை பார்த்தவர்களுக்கு கட்டாயம் இந்த முறுக்கை எப்படி சுடுவது என்றும் தெரிந்திருக்கும். பார்க்க ‘கை முறுக்கு’ மாதிரியே இருக்கும். இத‌ன் ரெஸிபியெல்லாம் சொல்லக்கூடாது, பரம ரகசியம்.
ஏற்கனவே இட்லி செய்முறை இருந்தாலும் புளித்து(பொங்கி) வந்துள்ள மாவு படம் இல்லையாதலால் அது ஒரு மனக்குறையாகவே இருந்தது. அது இப்பதிவின் மூலம் தீர்ந்துவிட்டது.  நிறைய எழுத வேண்டுமே என்ற சோம்பலால் இவ்வளவு நாளும் எழுதாமலே விட்டிருந்தேன்.
தேவையான பொருள்கள்:
நல்ல புழுங்கல் அரிசி _ 4 கப் தலை வெட்டாமல் (குவித்து)
உளுந்து _  1/4 கப்
வெந்தயம் _ ஒரு டேபிள்ஸ்பூன் (1/2 டீஸ்பூன் கூட சேர்த்துக்கொள்ளலாம்)
அவல் (இருந்தால்) _ ஒரு கைப்பிடி

செய்முறை:
முதல் நாளிரவே வெந்தயத்தை அது ஊறும் அளவிற்கு தண்ணீர் விட்டு ஊற வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் காலை ஊறிய வெந்தயத்தை ஒரு ஸ்பூனால் கிளறி விடவும். இப்போது அடியில் உள்ள ஊறாத வெந்தயமும் ஊறிவிடும்.
அடுத்த நாள் காலை(சுமார் 7:00 மணி) அரிசியைத் தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற விடவும். குறைந்தது நான்கு மணி நேரமாவது ஊற வேண்டும்.
சுமார் 12:00 மணிக்கெல்லாம் ஊறிய வெந்தயம், மாவு அரைக்கத் தேவையான தண்ணீர் இரண்டையும் ஃப்ரிட்ஜினுள் எடுத்து வைத்து விடவும். இப்போதே உளுந்தையும் தோல் இல்லாமல் கழுவி ஃப்ரிட்ஜினுள் வைத்து விடவும். இவற்றை குறைந்தது அரை மணி நேரமாவது அதாவது ‘ஜில்’லுன்னு ஆகும்வரை ஃப்ரிட்ஜினுள் வைத்திருக்கவும். ஒருமணி நேரமானாலும் பரவாயில்லை.
சுமார் 1:00 மணிக்கெல்லாம் கிரைண்டரை துடைத்துவிட்டு உளுந்து & வெந்தயம் இரண்டையும் ஒன்றாகப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஆன் பண்ணவும். கிரைண்டரில் உள்ளவற்றின் அளவு குறைவாக இருப்பதால் முதலில் ஒரு நிமிடத்திற்காவது விடாமல் தள்ளிவிட வேண்டும்.
பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவைத் தள்ளிவிட்டு சுமார் அரை மணி நேரத்திற்கு ஓடவிடவும்(எங்கேன்னு எல்லாம் கேட்கக்கூடாது). மாவு பந்துபோல் பஞ்சு மாதிரி வரவேண்டும்.
பிற‌கு ஒரு பாத்திரத்தில் வழித்து கையால் நன்றாகக் கொடப்பவும். அப்போதுதான் அரிசி அரைத்து எடுப்பதற்குள் உளுந்துமாவு அமுங்காமல் இருக்கும்.
இப்போது கிரைண்டரில் அரிசியில் கொஞ்சம் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு ஓடவிட்டு மீதமுள்ள அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும்.
அரிசி ஓடும்போதே அவலை கழுவி சேர்த்து அரைக்கவும். அவல் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை.

அரிசி நன்றாக மசிந்ததும் உளுந்து மாவு உள்ள பாத்திரத்திலேயே வழித்தெடுத்து, தேவையான உப்பு போட்டு நன்றாக கொடப்பு கொடப்பு என கொடப்பவும். கரைக்கும்போதே காற்றுக் குமிழ்கள் தெரியும். மாவு உள்ள பாத்திரத்தை மூடி வெதுவெதுப்பான இடத்தில் வைத்து புளிக்க விடவும்.
நான் இங்கே அரைக்கும் நேரம் இது. நம்ம ஊர் என்றால் மாலையில் அரைத்தால்தான் சரிவரும். இல்லையென்றால் அடுத்த நாள் காலையில் பாத்திரத்தில் துளிமாவு இல்லாமல் எல்லாம் பொங்கிப்போய் தரையில் இருக்கும்.

ஹை, மாவு பொங்கி வந்தாச்சூஊஊஊ,  ஆனாலும்  கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்போமே !!
இனிமேலும் இப்படியே விட்டு வைக்கக்கூடாது. இட்லியை ஊற்றிவிட வேண்டியதுதான் !!
காலையில் இட்லி ஊற்றும்போது பொங்கி வந்த மாவைக் கரைத்து ஊற்றாமல் அப்படியே கரண்டியால் இட்லித் தட்டின் குழிகளில் அள்ளி வைக்க‌ வேண்டும். ம்ம்ம்…..இட்லி வேக வைப்பதெல்லாம் தெரியும்தானே !!
தோசை சுடுவதாக இருந்தால் இரண்டு தோசை அளவிற்கு மாவை தனியாக எடுத்து ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் தண்ணீர் சேர்த்து கலந்து ஊற்றலாம்.
இந்த இட்லியை வெள்ளை நிற தட்டில் வைத்துமட்டும் சாப்பிட ஆரம்பிச்சிடாதீங்க‌. அப்புறம் “ஆட்டை தோளின் மீது வைத்துக்கொன்டே …….. ” என்ற பழமொழிபோல் “தட்டு எது? இட்லி எது?” என தேட ஆரம்பிச்சிடுவீங்க.
ஹலோஓஓஒ …….. எங்கே யாரையுமே காணொம், …… ஓ …… வெந்தயம் ஊற வைக்க கெளம்பிட்டீங்களா !!
வெள்ளை நிறத்திற்கு உலகமே மல்லிகைப் பூவை எடுத்துக்காட்டாக சொல்லும்போது எங்கள் ஊர் பக்கம்  தும்பைப் பூவைத்தான் உதாரணத்திற்கு சொல்லுவாங்க‌. இல்லையென்றால் பஞ்சை(பருத்தி) சொல்லுவாங்க‌. அப்படித்தான் இட்லியையும் எல்லோரும் ‘மல்லிகைப்பூ மாதிரி’ என சொல்லும்போது நாங்க மட்டும் ………. என்ன, கண்டுபிடிச்சிட்டீங்களா !!
ஆமாங்க, ‘தும்பைப்பூ மாதிரி இட்லி வெள்ளை வெளேர்னு வந்திருக்கு பாரு’ என்றுதான் சொல்லுவோம். அதனால்தான் தலைப்பைபும் அப்படியே வைத்துவிட்டேன்.
ஒருவேளை அந்தந்த ஊரில் விளையும் பொருட்களை வைத்தே உதாரணமும் வந்திருக்கலாம். மல்லிகைப் பூவுக்காவது காம்பு பகுதி கொஞ்சம் பசுமை கலந்த பழுப்பு நிறம் இருக்கும். ஆனால் தும்பைப்பூ பூ, காம்பு என எல்லாமும் பளீர் வெண்மையில் இருக்கும். பசுமையான செடியில் குட்டிகுட்டி வெள்ளைப்பூக்கள் ……..  பார்க்கவே கொள்ளை அழகாக இருக்கும்.
தும்பைப் பூ மாதிரி இட்லி மட்டுமில்லீங்க, இந்தப் பூவை வைத்து முறுக்குகூட சுடுவோம். ஊருக்குப் போனால் தும்பைப் பூவில் முறுக்கு சுட்டு அதை காமிராவிலும் சுட்டு எடுத்து வருகிறேன். இந்தப் பூவை பார்த்தவர்களுக்கு கட்டாயம் இந்த முறுக்கை எப்படி சுடுவது என்றும் தெரிந்திருக்கும். பார்க்க ‘கை முறுக்கு’ மாதிரியே இருக்கும். இத‌ன் ரெஸிபியெல்லாம் சொல்லக்கூடாது, பரம ரகசியம்.
ஏற்கனவே இட்லி செய்முறை இருந்தாலும் புளித்து(பொங்கி) வந்துள்ள மாவு படம் இல்லையாதலால் அது ஒரு மனக்குறையாகவே இருந்தது. அது இப்பதிவின் மூலம் தீர்ந்துவிட்டது.  நிறைய எழுத வேண்டுமே என்ற சோம்பலால் இவ்வளவு நாளும் எழுதாமலே விட்டிருந்தேன்.
தேவையான பொருள்கள்:
நல்ல புழுங்கல் அரிசி _ 4 கப் தலை வெட்டாமல் (குவித்து)
உளுந்து _  1/4 கப்
வெந்தயம் _ ஒரு டேபிள்ஸ்பூன் (1/2 டீஸ்பூன் கூட சேர்த்துக்கொள்ளலாம்)
அவல் (இருந்தால்) _ ஒரு கைப்பிடி

செய்முறை:
முதல் நாளிரவே வெந்தயத்தை அது ஊறும் அளவிற்கு தண்ணீர் விட்டு ஊற வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் காலை ஊறிய வெந்தயத்தை ஒரு ஸ்பூனால் கிளறி விடவும். இப்போது அடியில் உள்ள ஊறாத வெந்தயமும் ஊறிவிடும்.
அடுத்த நாள் காலை(சுமார் 7:00 மணி) அரிசியைத் தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற விடவும். குறைந்தது நான்கு மணி நேரமாவது ஊற வேண்டும்.
சுமார் 12:00 மணிக்கெல்லாம் ஊறிய வெந்தயம், மாவு அரைக்கத் தேவையான தண்ணீர் இரண்டையும் ஃப்ரிட்ஜினுள் எடுத்து வைத்து விடவும். இப்போதே உளுந்தையும் தோல் இல்லாமல் கழுவி ஃப்ரிட்ஜினுள் வைத்து விடவும். இவற்றை குறைந்தது அரை மணி நேரமாவது அதாவது ‘ஜில்’லுன்னு ஆகும்வரை ஃப்ரிட்ஜினுள் வைத்திருக்கவும். ஒருமணி நேரமானாலும் பரவாயில்லை.
சுமார் 1:00 மணிக்கெல்லாம் கிரைண்டரை துடைத்துவிட்டு உளுந்து & வெந்தயம் இரண்டையும் ஒன்றாகப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஆன் பண்ணவும். கிரைண்டரில் உள்ளவற்றின் அளவு குறைவாக இருப்பதால் முதலில் ஒரு நிமிடத்திற்காவது விடாமல் தள்ளிவிட வேண்டும்.
பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து மாவைத் தள்ளிவிட்டு சுமார் அரை மணி நேரத்திற்கு ஓடவிடவும்(எங்கேன்னு எல்லாம் கேட்கக்கூடாது). மாவு பந்துபோல் பஞ்சு மாதிரி வரவேண்டும்.
பிற‌கு ஒரு பாத்திரத்தில் வழித்து கையால் நன்றாகக் கொடப்பவும். அப்போதுதான் அரிசி அரைத்து எடுப்பதற்குள் உளுந்துமாவு அமுங்காமல் இருக்கும்.
இப்போது கிரைண்டரில் அரிசியில் கொஞ்சம் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு ஓடவிட்டு மீதமுள்ள அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்கவும்.
அரிசி ஓடும்போதே அவலை கழுவி சேர்த்து அரைக்கவும். அவல் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை.
அரிசி நன்றாக மசிந்ததும் உளுந்து மாவு உள்ள பாத்திரத்திலேயே வழித்தெடுத்து, தேவையான உப்பு போட்டு நன்றாக கொடப்பு கொடப்பு என கொடப்பவும். கரைக்கும்போதே காற்றுக் குமிழ்கள் தெரியும். மாவு உள்ள பாத்திரத்தை மூடி வெதுவெதுப்பான இடத்தில் வைத்து புளிக்க விடவும்.
நான் இங்கே அரைக்கும் நேரம் இது. நம்ம ஊர் என்றால் மாலையில் அரைத்தால்தான் சரிவரும். இல்லையென்றால் அடுத்த நாள் காலையில் பாத்திரத்தில் துளிமாவு இல்லாமல் எல்லாம் பொங்கிப்போய் தரையில் இருக்கும்.
ஹை, மாவு பொங்கி வந்தாச்சூஊஊஊ,  ஆனாலும்  கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்போமே 
இனிமேலும் இப்படியே விட்டு வைக்கக்கூடாது. இட்லியை ஊற்றிவிட வேண்டியதுதான் !!
காலையில் இட்லி ஊற்றும்போது பொங்கி வந்த மாவைக் கரைத்து ஊற்றாமல் அப்படியே கரண்டியால் இட்லித் தட்டின் குழிகளில் அள்ளி வைக்க‌ வேண்டும். ம்ம்ம்…..இட்லி வேக வைப்பதெல்லாம் தெரியும்தானே !!
தோசை சுடுவதாக இருந்தால் இரண்டு தோசை அளவிற்கு மாவை தனியாக எடுத்து ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் தண்ணீர் சேர்த்து கலந்து ஊற்றலாம்.
இந்த இட்லியை வெள்ளை நிற தட்டில் வைத்துமட்டும் சாப்பிட ஆரம்பிச்சிடாதீங்க‌. அப்புறம் “ஆட்டை தோளின் மீது வைத்துக்கொன்டே …….. ” என்ற பழமொழிபோல் “தட்டு எது? இட்லி எது?” என தேட ஆரம்பிச்சிடுவீங்க.
ஹலோஓஓஒ …….. எங்கே யாரையுமே காணொம், …… ஓ …… வெந்தயம் ஊற வைக்க கெளம்பிட்டீங்களா !!

No comments:

Post a Comment