SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Monday 22 February 2016


  1. சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! - 1

    சர்க்கரையை வெல்வோம் சமத்தாக!

    Thanks to Vikatan



    வரும்முன் காப்பதன் முக்கியத்துவம்பற்றி சொல்லாத மருத்துவ முறைகள் இல்லை. ஆனால், நோய்கள் நம்மை நெருங்கிவிடாதபடி வாழ்வது அவ்வளவு சுலபமானதா? ''சாத்தியம்தான்'' என்கிறார் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியின் உதவி விரிவுரையாளரும் சித்த மருத்துவருமான எஸ்.சுஜாதா ஜோசப். 

    'உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

    உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ குறிப்பிட்ட நோய் ஏன் வருகிறது? அதை எப்படித் தடுப்பது என்பதை அறிந்தால் திருமூலரின் உபாயம் நமக்கும் தெரியவரும். உணவே மருந்து என்ற அடிப்படையில் நல்ல பல சிகிச்சை முறைகளையும் தீர்வுகளையும் இந்தத் தொடர் உங்களுக்கு அளிக்க இருக்கிறது.

    சர்க்கரையை வெல்வோம் சமத்தாக!


    உலக அளவில் சர்க்கரை நோயில் சீனாவுக்கு அடுத்தபடியாக நமது இந்தியாவுக்குத்தான் இரண்டாம் இடம்.

    எப்படி ஏற்படுகிறது சர்க்கரை பாதிப்பு? நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட், உடலில் நடக்கும் ரசாயன மாறுதல்களால் குளுகோஸாக மாறுகிறது. குளுகோஸ் ரத்தத்தின் வழியாகச் செல்களை அடைந்து உடலை வளர்க்கவும் பாதுகாக்கவும் செய்கிறது.

    குளுகோஸை நமது செல்கள் உபயோகிப்பதற்கு உதவியாக இருப்பது கணையத்தில் சுரக்கும் இன்சுலின். மேலும் உபரியாக உள்ள குளுகோஸை, கிளைகோஜனாக மாற்றி உடலில் சேமித்துவைப்பதும் இந்த இன்சுலின்தான். இன்சுலின் சரியாகச் சுரக்காதபோது குளுக்கோஸ் ரத்தத்தில் அதிகரித்து சிறுநீர் மூலம் வெளிப்படுகிறது. இதுதான் சர்க்கரை நோய்.



    சர்க்கரை நோயில் இரண்டு வகை உண்டு. முதல் வகையில் இன்சுலின் குறைவாக சுரக்கும் அல்லது முற்றிலுமே சுரப்பது இல்லை.

    இரண்டாம் வகையிலும் மற்றும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் சர்க்கரை நோயின்போதும் உற்பத்தியாகும் இன்சுலினை உடலின் செல்கள் ஏற்றுக்கொள்வது இல்லை.

    மரபுரீதியிலான காரணங்கள், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளாதது, உடற்பயிற்சியின்மை முதலியவை சர்க்கரை நோய்க்கு முக்கியமான காரணங்கள்.

    ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது நமது ரத்தக் குழாய்கள் இதயம், சிறுநீரகம், கண்விழித்திரை உட்பட உடலின் பல பகுதிகளையும் பாதிக்கிறது. அதிகரித்த சர்க்கரையினால் கிருமிகளும் உற்சாகமாக உடலைத் தாக்குகின்றன. எனவே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக அவசியம்.

    சர்க்கரை நோய்க்கு சித்த மருத்துவம் கூறும் எளிய மருத்துவ முறைகள்:

     ''ஆவாரை, கொன்றை, நாவல், கடலழிஞ்சில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், மருதம்பட்டை இவற்றை ஒரே அளவில் சேர்த்து அத்துடன் எட்டுப் பங்கு நீரையும் சேர்த்து, எட்டில் ஒரு பங்கு ஆகும்படி காய்ச்சி அருந்த சர்க்கரை நோய் நீங்கும்; ரத்தத்தில் உள்ள உப்பும் குறையும் என்பது சித்தர்கள் வாக்கு.

    ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர், பிசின் முதலியவற்றில் ஆன்தோசயனின், டானின், ஃபீனால்கள் உள்ளதால் இவை சர்க்கரை நோயைப் போக்குவதில் சிறப்பாகச் செயல்படுகின்றன.

     தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ஐந்து நாவல் பழங்களைச் சாப்பிட வேண்டும். நாவல் பழத்தில் உள்ள ஆன்தோசயனின் மிகச் சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயினால் ரத்தக் குழாய்கள், கண்களின் விழித்திரை மற்றும் உடலின் அடிப்படைச் சவ்வுகளில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும்.

    நாவல் கொட்டைப் பொடியை 200 மி.கி. அளவு இரு வேளைகளும் உண்ண வேண்டும். இதில் உள்ள கிளைகோஸைடு ஜம்போலின் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

     பாகற்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். பாகற்காயில் உள்ள பாலிபெப்டைடு தாவர இன்சுலினாகச் செயல்படுகிறது. பாகற்காயில் உள்ள சாரன்டின், குளுகோஸை செல்கள் உபயோகிப்பதை ஊக்குவிக்கிறது.

     வெந்தயம் ஒரு டீஸ்பூன் இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். இதில் உள்ள ஹைட்ராக்ஸிலூஸின் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.

    ஆலமரத்தின் அனைத்துப் பாகங்களும் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். ஆலம்பட்டையை இடித்து 10 மடங்கு நீரில் ஊறவைத்து, வடித்து, அருந்த சர்க்கரைநோய் கட்டுப்படும்.

     கருங்காலி மரப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து நீர் சேர்த்து எட்டில் ஒரு பங்காக ஆகும் வரை காய்ச்சி அருந்தலாம்.

     சிறுகுறிஞ்சான் இலைப் பொடியை 500 மி.கி. இரு வேளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள ஜிம்னெமிக் அமிலம் சிறுகுடலில் உறிஞ்சப்படும் குளுகோஸின் அளவைக் குறைப்பது மட்டும் அல்லாமல் இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்கும்.


    என்ன சாப்பிடலாம்?

     இஞ்சி, வெங்காயம், பூண்டு, அவரைப் பிஞ்சு, பீன்ஸ், சோயாபீன்ஸ், சிவப்பு பீன்ஸ், வாழைத் தண்டு, வாழைப் பிஞ்சு, முழுத் தானியங்கள், ஓட்ஸ், சிகப்பரிசி, பச்சைக் காய்கறிகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஆரஞ்சு, கொய்யா, பசலைக் கீரை, பாதாம், பூசணி விதை இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


    என்ன தவிர்க்கலாம்?

     வெள்ளை அரிசி, ரொட்டி, கிழங்கு வகைகள், வாழைப் பழம், அதிகக் கொழுப்பு உணவுகள் போன்றவற்றை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

    சிகரெட் மற்றும் மதுவை அறவே விட்டொழிக்க வேண்டும்

  2. உயர் ரத்த அழுத்தம் குறைய...

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! - 2

    உயர் ரத்த அழுத்தம் குறைய...


    Thanks to Vikatan


  3. #4
    43

    பயமுறுத்துகிறதா பருமன்?

    பயமுறுத்துகிறதா பருமன்?

    Thanks to Vikatan



  4. #5
    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு - மூலம்


    Thanks to Doctor Vikatan







    ஆசனவாய்ப் பகுதியில் உள்ள திசுக்களில் ரத்த நாளங்கள் அதிகம். அவை நீண்டு, விரிவடைந்து, பெரிதாவதால் மூலம் ஏற்படுகிறது.

    கழிவறைக்குச் சென்று சுத்தம் செய்யும்போது கைக்குச் சிறு கட்டி போலத் தென்படுவது, மலத்தில் ரத்தம் கலந்திருப்பது, மலம் கழித்த பின்னரும் அந்த உணர்வு தொடர்வது, ஆசனவாய்ப் பகுதியில் அரிப்பு ஏற்படுவது, சளி போன்ற பொருள் மலத்தில் கலந்து வெளியேறுவது, மலம் கழிக்கும்போது வலியை உணர்வது, ஆசனவாய் சிவந்தும் புண்ணாகியும் காணப்படுவது, மலம் கழிக்க அதிகம் முக்குவது போன்றவை மூல வியாதியின் அறிகுறிகள்.

    தொடர்ந்த மலச்சிக்கல், தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு, அதிகமான பளுவைத் தொடர்ந்து தூக்குவது, கூடுதல் உடல் பருமன், கருவுற்று இருப்பது, ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து பணிபுரிவது போன்ற பல காரணங்களால் மூல வியாதி ஏற்படலாம்.


    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

    உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் வெளிப்பூச்சு ஆகிய இரு விதங்களிலும் மிக எளிதாக மூலத்தையும் ரத்தமூலத்தையும் குணமாக்கலாம்.

    உட்கொள்ளும் மருந்துகள்;

     கடுக்காய்ப் பிஞ்சைப் பொன் வறுவலாக வறுத்து, சிற்றாமணக்கு மற்றும் நெய் விட்டு அரைத்து, தினசரி 30 மி.கி. அளவு உட்கொள்ளலாம்.

     பிரண்டையைக் கணு போக்கி, நெய்விட்டு, வறுத்து, அரைத்துப் கொட்டைப்பாக்கு அளவு காலை மாலை உண்ணலாம்.

     நாயுருவி விதையைப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்து, மோரில் கலந்து அருந்தலாம்.

     ரோஜாப் பூ ஒரு பங்கு, கற்கண்டு மூன்று பங்கு சேர்த்து அரைத்து ஒரு ஸ்பூன் காலை மாலை உட்கொள்ள லாம்.

     அத்திப் பழங்களை நீரில் ஊறவைத்து, காலை, மாலை மூன்று பழங்கள் சாப்பிடலாம்.

     மிளகு 50 கிராம், பெருஞ்சீரகம் 70 கிராம் எடுத்து நுணுக்கி, தேன் 340 கிராம் சேர்த்து லேகியமாக்கிக் காலை, மாலை நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொள்ளலாம்.

     எள்ளை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்து, வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

     ஓமம், சுக்கு, கடுக்காய், இலவங்கப்பட்டை சம அளவு எடுத்து, பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடிக்கலாம்.

     துத்தி இலை, வெங்காயம், பச்சைப் பயறு, தக்காளி இவற்றை நெய்யில் வதக்கி, துவையல் செய்து சாப்பிடலாம்.

     நெய்தல் கிழங்கைப் பொடித்து, பாலில் கலந்து பருகலாம்.

     சீரகம் 200 கிராம், உலர்ந்த கற்றாழை 120 கிராம், பனை வெல்லம் 120 கிராம் இவற்றுடன் தேவையான பால், நெய் சேர்த்து லேகியமாகச் செய்து காலை, மாலை நெல்லிக்காய் அளவு சாப்பிடலாம்.

     சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டைப் பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஒடு, வெந்தயம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, கால் ஸ்பூன் காலை, மாலை மோரில் கலந்து பருகலாம்.

     குப்பைமேனி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, துவையல் செய்து சாப்பிடலாம்.

     வெந்தயத்தை வேகவைத்து, கடைந்து, ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து சாப்பிடலாம்.

     சேம்பு இலையைப் புளிசேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.

     இலந்தை இலையைப் பச்சையாக அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து சாப்பிடலாம்.

     கருணைக்கிழங்கைப் பால், தேன், நெய் சேர்த்து லேகியமாகச் செய்து, காலை, மாலை நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொள்ளலாம்.

     மாதுளம் பூவை உலர்த்திப் பொடி செய்து, சம அளவு வேலம் பிசின் சேர்த்து, கால் ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

     வில்வக்காயுடன் இஞ்சி, சோம்பு சேர்த்து நான்கு பங்கு நீரும் கலந்து, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

     அதிவிடயப் பொடியை மூன்று கிராம் எடுத்து வெண்ணெயில் கலந்து தினமும் மூன்று வேளை உண்ணலாம்.

    வெளிப்பூச்சாகப் பயன்படும் மருந்துகள்:

     கண்டங்கத்திரிப் பூவை வாதுமை மற்றும் நெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம்.

     ஆகாயத்தாமரை இலையை அரைத்துக்கட்டலாம்.

     கற்கடகசிங்கியைப் பொடித்து, நெருப்பில் இட்டுப் புகைக் காட்டலாம்.

     கம்பைச் சமைத்துத் தயிர்விட்டுப் பிசைந்து, முளை மூலத்தில் வைத்துப் பற்றுப் போடலாம்.

     சித்திர மூல வேரை நல்லெண்ணெய் விட்டு அரைத்துக் கட்டலாம்.


    சேர்க்கவேண்டிய உணவுகள்:

    வாழைப்பழம், பால், மோர், கீரைகள், ரத்த மூலத்துக்கு வாழைப்பிஞ்சு, வாழைப்பூ.

    தினசரி இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.


    தவிர்க்க வேண்டியவை:

    காரம், பொரித்த உணவுகள், கோழி இறைச்சி, வாழைக்காய்.

  5. #6
    43

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! - ஆஸ்துī

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! - ஆஸ்துமா


    Thanks to Doctor Vikatan





    ஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்டுசெல்லும் மூச்சுப்பாதை (Airway)வீங்கி (Inflammation) குறுகுவதால் ஏற்படுகிறது.

    ஆஸ்துமாவை ஏற்படுத்தும் காரணிகள்:

    ஒவ்வாமையின் விளைவாகவே பெரும்பாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது. தூசு, குளிர்ந்த காற்று, புகை, மூச்சுப்பாதையில் ஏற்படும் தொற்றுகள், ரசாயனப் பொருட்கள், புகைபிடித்தல், மகரந்தங்கள், வளர்ப்புப் பிராணிகளின் முடிகள், வாசனைத் திரவியங்கள் போன்றவை ஏற்படுத்தும் ஒவ்வாமையின் விளைவுதான் ஆஸ்துமாவின் வெளிப்பாடு.

    அறிகுறிகள்:

    சளியுடனோ அல்லது சளி இல்லாமலோ இருமல் தொடர்ந்து இருக்கும். ஒரு சுவாசத்துக்கும் அடுத்த சுவாசத்துக்கும் இடைப்பட்ட நேரம் குறைந்து காணப்படும். இழுப்பானது அதிகாலை மற்றும் இரவில் அதிகமாக இருக்கும்.





    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

    • முசுமுசுக்கை இலைப்பொடி, மற்றும் தூதுவளை இலைப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் தேன் சேர்த்து உண்ணலாம்.
    • உத்தாமணி இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் சேர்த்து அருந்தலாம்.
    • முட்சங்கன் இலையை அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலில் கலந்து சாப்பிடலாம்.
    • நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து அதில் 500 மிகி அளவு மூன்று வேளைகள் தேனில் குழைத்து அருந்தலாம்.
    • திப்பிலிப் பொடியுடன் கம்மாறு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.
    •  செடி, திப்பிலி, நாயுருவி விதை, சீரகம், இந்துப்பு சமஅளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்.
    • கோரைக்கிழங்கு, சுக்கு, கடுக்காய்த்தோல் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் கலந்து இருவேளை உண்ணலாம்.
    • சீந்தில் கொடி, ஆடாதோடை, கண்டங்கத்திரி இவற்றைச் சம அளவு எடுத்து, அரைத்து, அதில் நெய் சேர்த்துக் காய்ச்சித் தினசரி இருவேளை ஒரு ஸ்பூன் அருந்தலாம்.
    • லவங்கம், சாதிக்காய், திப்பிலி வகைக்கு 1 பங்கு, மிளகு 2 பங்கு, தான்றிக்காய் 3 பங்கு, சுக்கு 4 பங்கு சேர்த்துத் தூள் செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து அரை ஸ்பூன் காலை மாலை உண்ணலாம்.
    • இஞ்சிச்சாறு, மாதுளம்பூச்சாறு, தேன் சம அளவு கலந்து 30 மிலி இருவேளை பருகலாம்.
    • இம்பூறல் இலைப் பொடியுடன் இரண்டு பங்கு அரிசி மாவு சேர்த்து அடையாகச் செய்து சிற்றுண்டி போலச் சாப்பிடலாம்.
    • ஆடாதோடை இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து அருந்தலாம்.
    • மூங்கிலுப்பை வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் கொடுக்கலாம்.
    • மூக்கிரட்டை வேரை அரைக் கைப்பிடி எடுத்து ஒன்றிரண்டாகச் சிதைத்து, 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து இருவேளை அருந்தலாம்.
    • மிளகரணை இலையை உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து உண்ணலாம்.
    • சிற்றரத்தை, ஒமம், அக்கரகாரம் சம அளவு எடுத்துப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து சாப்பிடலாம்.
    • துளசி, தும்பை இலை சம அளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.


    தவிர்க்க வேண்டியவை:

    கிரீம் பிஸ்கட், குளிர்பானங்கள், கலர் சேர்க்கப்பட்ட உணவுகள், எண்ணெய், கொழுப்பு, வாழைப்பழம், திராட்சை, எலுமிச்சை, வாசனைத் திரவிங்கள், ஜஸ்கிரீம், கத்திரிக்காய், அதிகக் குளிர், பனி, குளிரூட்டப்பட்ட அறை.

    #7
  6. 43

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! - படர்தĬ

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! -படர்தாமரை


    Thanks To Doctor Vikatan





    டீனியா (Tinea) என்ற பூஞ்சையினால் ஏற்படும் தோல் நோய்தான் படர்தாமரை. சிவந்த படைகள் உடலில் ஏற்படுவதுதான் இதன் அறிகுறி. படர்தாமரை உடலின் கதகதப்பான மற்றும் ஈரப்பதம் நிறைந்த இடங்களில் விரைவாகத் தாக்கும். தலை, அக்குள், தொடை இடுக்குகள் மற்றும் பாதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தலையில் படர்தாமரை தாக்கும்போது ஆங்காங்கே வழுக்கையான திட்டுகள் காணப்படும். படர்தாமரை நகங்களைப் பாதிக்கும்போது நகங்கள் நிறம் மாறி எளிதில் உடையும். அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்தும். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் தொற்று நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சீப்பு, முகச்சவர உபகரணங்கள், ஆடைகள் மூலமாகவும், கழிவறைகள், குளியலறைகள், நீச்சல்குளம் மூலமாகவும் பரவும். செல்லப் பிராணிகள் மூலமாகவும் பரவும்.

    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

    • சீமை அகத்தி இலையை அரைத்துத் தேங்காய் எண்ணெயில் கலந்து பூசலாம்.


    • கடுக்காய்த் தோல், இந்துப்பு, கிரந்திதகரம், அறுகம்புல், கஞ்சாங்கோரை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, மோர்விட்டு அரைத்துப் பூசலாம்.


    • புங்கம் விதையை அரைத்துப் பூசலாம்.


    • பூண்டை அரைத்து தேன் சேர்த்துப் பூசலாம்.


    • அருகம்புல்லுடன் மஞ்சளை அரைத்துப் பூசலாம்.




    • நிலாவாரை இலையைக் காடி விட்டு அரைத்துப் பூசலாம்.


    • ஜாதிக்காயைத் தேன் விட்டு அரைத்துப் பூச, படர்தாமரை குணமாகும்.


    • சரக்கொன்றைத் துளிர், புளியந்துளிர், மிளகு சம அளவு எடுத்து, அரைத்துப் பூசலாம்.
    • பப்பாளி விதையைக் காடிநீர் விட்டு அரைத்துப் பூசலாம்.


    • சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச் சாறுவிட்டு அரைத்துப் பூசலாம்.


    • ஆகாயத் தாமரை இலையைக் காடி விட்டு அரைத்துப் பூசலாம்.


    • குந்திரிக்கம் நல்லெண்ணெய் வெள்ளை மெழுகு வகைக்கு 32 கி எடுத்து சிறு தீயில் இட்டு, உருக்கி, வடிகட்டி, ஆறிய பின் படர்தாமரை மீது பூசக் குணமாகும்.


    • யூகலிப்டஸ் இலையில் உள்ள சினியோல், பிசைமின் ஆகிய வேதிப்பொருட்கள் படர்தாமரையை உருவாக்கும் பூஞ்சையை அழிக்கின்றன. யூகலிப்டஸ் தைலத்தைப் படர்தாமரை மீது பூசக் குணமாகும்.


    • துளசி இலையை உப்புடன் சேர்த்துப் பூசலாம்.


    • சிவனார் வேம்பு இலையையும் பூவையும் அரைக் கைப்பிடி அளவு எடுத்து, சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்த, படர்தாமரை குணமாகும்.


    • மாதுளம் பழத்தோல், வல்லாரை இலை சம அளவு எடுத்து காடிவிட்டு அரைத்துப் பூசலாம்.


    • கிராம்பை நீர்விட்டு அரைத்துப் பூச, படர் தாமரை குணமாகும்.



    • லவங்கப் பட்டையை நீர் விட்டு மையாக அரைத்துப் பூசலாம். பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு, படர்தாமரையை அழிக்கும்.


    கடைப்பிடிக்க வேண்டியவை:


    • படர்தாமரை வராமல் தடுக்க தோல், நகங்கள், தலைமுடி ஆகியனவற்றைச் சுத்தமாகவும் உலர்வாகவும் பராமரிக்க வேண்டும்.



    • உலர்வான, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.


    • பிறர் பயன்படுத்திய ஆடைகள், உபகரணங்கள் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்
  7. சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!



    பெண்களின் பிறப்புறுப்பின் வழியே 'சளி’ போன்ற வெண்ணிறக் கசிவு வெளியேறுவதை வெள்ளைப்படுதல் நோய் (Leucorrhea) என்கிறோம். நுண்ணுயிர்த் தொற்று, சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று, கருப்பை வாய்ப்பகுதி வீங்குதல், கருப்பை மற்றும் யோனியில் புண், புற்றுநோய் போன்றவற்றால் வெள்ளைப்படும் நோய் ஏற்படலாம். சில சமயம் அந்தப் பகுதியில் நமைச்சலும் துர்நாற்றமும் ஏற்படும். 






    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

     கீழாநெல்லி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து 10 நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம்.

     அம்மான்பச்சரிசி இலையை அரைத்துச் சுண்டைக்காய் அளவு எடுத்து, தயிரில் கலந்து பருகலாம்.

     பொடுதலை இலையுடன், சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

     கைப்பிடி அளவு வெள்ளருகுடன் 5 மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து அரைத்து மோரில் கலந்து அருந்தலாம்.

     இரண்டு செம்பருத்தி பூவுடன், சிறு துண்டு வெண்பூசணி சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, சர்ககரை சேர்த்து அருந்தினால் ரத்தத்தோடு கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.

     ஜவ்வரிசியை வேகவைத்துப் பால் சேர்த்து 10 நாட்கள் அருந்த, வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.


     பொரித்த படிகாரம், மாசிக்காய், வால்மிளகு சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் கால் ஸ்பூன் எடுத்து வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் சீழ்வெள்ளை, ரத்த வெள்ளை குணமாகும்.

     இளநீரில் ஒரு ஸ்பூன் சந்தனத்தூளை ஊற வைத்து, அந்த நீரை வடித்துப் பருகி வரலாம். .

     திப்பிலி 5 பங்கு, தேற்றான் விதை 3 பங்கு கலந்து நன்றாய்ப் பொடித்து, அதில் 4 கிராம் எடுத்துக் கழுநீரில் 3 நாட்கள் சேர்த்து உண்ணலாம்.

     ஓரிதழ் தாமரை இலை, யானை நெருஞ்சில் இலை இவற்றைச் சம அளவு எடுத்து அரைத்து, நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து மோரில் கலந்து அருந்தலாம்.

     பரங்கிப்பட்டை, சுக்கு, மிளகு, நற்சீரகம் இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேங்காய் பாலில் கலந்து பருகலாம்.

     சப்ஜாவிதைப் பொடி ஒரு ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.


     ஒரு கைப்பிடி துத்தியிலையை இடித்து 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து அதில் பால், சர்க்கரை கலந்து பருகலாம்.

     சிறு துண்டு கற்றாழையைத் தோல் சீவி, கசப்பு நீங்கப் பத்து முறை நன்கு கழுவி சர்க்கரை சேர்த்து, தினமும் காலையில் சாப்பிட்டுவர வெள்ளை, ரத்த வெள்ளை, சீழ்வெள்ளை ஆகியன குணமாகும்.

     விஷ்ணு கிரந்திவேர், ஆவாரை வேர்ப்பட்டை சம அளவு எடுத்து அரைத்து அதில் நெல்லிக்காய் அளவு எடுத்துப் பாலில் உண்ணலாம்.

     தண்ணீர்விட்டான் இலையை அரைத்து 30 மி.லி. சாறு எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

     தென்னம்பூவை இடித்து, 30 மிலி சாறு எடுத்து, மோர் சேர்த்துப் பருகலாம்.


    உணவுகள்

    சேர்க்க வேண்டியவை: தர்பூசணி, வெண்பூசணி, வெள்ளரி, வெந்தயம், பசலைக்கீரை, தண்டுக்கீரை, பருப்புக்கீரை, இளநுங்கு, நாட்டு வாழைப்பழம், நல்லெண்ணய், பனங்கிழங்கு.


    தவிர்க்க வேண்டியவை:

    மசாலா மற்றும் காரம் நிறைந்த உணவுகள். எண்ணெயில் பொரித்த உணவுகள், கோழி இறைச்சி.







  8. இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.

    இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது.

    புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

    காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.



    அறிகுறிகள்:

    குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.


    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

     அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

     ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

     சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

     கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

     வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

     பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

     கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

     மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

     பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

     சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.


    சேர்க்க வேண்டியவை:

    கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.
    தவிர்க்க வேண்டியவை:

    அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி
    .

    கடைப்பிடிக்க வேண்டியவை:

     காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

     உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.

     பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.

     தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

     சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.
  9. 43

    சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு! - அதிஉதĬ


    பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந்தால் அதை அதிஉதிரப்போக்கு எனகிறோம்.

    காரணங்கள்:

    ரத்தம் உறைவதில் ஏற்படும் குறைஷ்பாடுகளினாலும், ரத்தசோகை, தைராய்டு நோய்கள், காசநோய், கருப்பைக் கட்டிகள், சினைப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொண்டதன் பின்விளைவுகள் போன்ற காரணங்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும்.




    சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

     அத்திப் பட்டையை மோர் சேர்த்து இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.

     அத்திப் பால் ஐந்து சொட்டு எடுத்து வெண்ணெய் சேர்த்து உண்ணலாம்.

     குங்கிலியத்தை நெய்விட்டுப் பொரித்து நீர் சேர்த்துக் குழைத்து, கால்ஸ்பூன் உண்ணலாம்.

     இளம் வாழைப்பூவை அவித்து 30 மில்லி சாறெடுத்துத் தேன் கலந்து உண்ணலாம்.

     இத்தியின் பிஞ்சை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு உண்ணலாம்.

     தொட்டாற்சிணுங்கியின் இலைச் சாற்றை 15 மி.லி. அருந்தலாம்.



     நாவல் பட்டை, ஆவாரைப் பட்டை சம அளவு எடுத்து நான்கு பங்கு நீர் சேர்த்து, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

     கால்ஸ்பூன் லவங்கப் பட்டைப் பொடியை எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

     கவிழ்தும்பை இலையைக் கைப்பிடி அளவு எடுத்துத் தேன் சேர்த்து, வதக்கி நீர் சேர்த்துக் காய்ச்சி அருந்தலாம்.

     அசோகப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.

     கட்டுக்கொடியின் இலைச்சாற்றை ஒரு டேபிள்ஸ்பூன் அருந்தலாம்.

     முள்இலவுப் பட்டை, தாமரைக் கிழங்கு, செம்பருத்தி வேர் இவற்றின் பொடியைக் கலந்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.

     மந்தாரைப் பூ மொக்கு ஐந்து எடுத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் காய்ச்சிக் கால் டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.

     அரசம்பட்டை, ஆலம்பட்டை சம அளவு எடுத்து சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.

     மாங்கொட்டைப் பருப்பின் பொடியை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து உண்ணலாம்.

     நிலப் பூசணிக் கிழங்கின் பொடியுடன் சர்க்கரை, வெண்ணெய்ச் சேர்த்துக் கிண்டி நெல்லிக்காய் அளவு உண்ணலாம்.

     வாலுளுவைப் பொடியை இரண்டு கிராம் எடுத்துத் தேனில் கலந்து உண்ணலாம்.

     திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் மூன்று பங்கு சேர்த்து அரைத்து அதில் நான்கு கிராம் நீராகாரத்தில் கலந்து, காலையில் குடிக்கலாம்.

     மாம்பிசின், விளாம்பிசின் பொடி சமஅளவு எடுத்து, அதில் கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.

     கீழாநெல்லியின் வேர்ப்பொடியை அரை ஸ்பூன் எடுத்து நீராகாரத்துடன் கலந்து உண்ணலாம்.


    சேர்க்க வேண்டியவை:

    துவர்ப்புச் சுவை உள்ள உணவுகள், அத்திப் பழம், பேரீச்சை, பால், தயிர், காளான், சிகப்புத் தண்டுக்கீரை, ஈரல்.


    நீக்க வேண்டியவை:

    இஞ்சி, பூண்டு, காயம், அன்னாசி, எள், பப்பாளி, நல்லெண்ணெய்.

No comments:

Post a Comment