SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Saturday 30 May 2015

மட்டன் கபாப்


தேவையான பொருட்கள் :
மட்டன் கொத்துக்கறி – 1 கிலோ
எண்ணெய் – தேவையான
அளவு
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது – 3 டேபிள் ஸ்பூன்
பப்பாளிக் காய் பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
04-aloo-capsicum-curry2
செய்முறை :
வெங்காயத்தை முதலில் பொடியாக நறுக்கிக் கொள் ளவும். பிறகு நன்கு சுத்தமாக கழுவிய ஆட்டிறைச்சி யை, (மட்ட‍ன் கொத்துக்கறியை) தண்ணீரில்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன்பின் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மட்டன், வெங்காயம், இஞ்சிபூண்டுவிழுது, வெண்ணெய், பப்பா ளிக்காய் பேஸ்ட், மிளகாய்த் தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்புசேர்த்துப் பிசைந்து வைத்துக்கொள்ளவும் .
பின் அந்த கலவையை இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு ஊற வைக்கவும்.
பிறகு அதனை எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத் து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றவு ம்.
எண்ணெயானது காய்ந்ததும், அந்த கலவையை கட்லட் போல் வட்டமாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான மட்டன்கபாப் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் புதினாவைத் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

No comments:

Post a Comment