SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Saturday 30 May 2015


02
தேவையான பொருட்கள்
கோழி தொடை – 4
எண்ணெய் – 1/2 லிட்டர்
ஜிலேபி பவுடர் – சிறிது
மைதா மாவு – 50 கிராம்
கடலை மாவு – 50 கிராம்
சில்லி சிக்கன் பவுடர் – 50 கிராம்
எலுமிச்சை பழம் – 1
இஞ்சி,பூண்டு விழுது – 2 ஸ்பூ ன்
உப்பு – தேவையான அளவு
முட்டை – 1 (வெள்ளை கரு மட்டும்)
செய்முறை:-
கோழியை சுத்தம் செய்து அதில் கத்தியை வைத்து அங்கும் இங்கும் மாக சிறிது கீறல் போடவும்.(கறியில் மசாலா நன்கு சேர்வதற்க்காக)
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, சில்லி சிக்கன் பவுடர், இஞ்சி,பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இந்த கலவையில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அத்துடன் கலருக்காக சிறிது ஜிலேபி பவுடரையும் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர நன்கு கலக்கவும்.
இந்த கலவையில் கறியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும்.
எண்ணெய் நன்கு கொதிக்கும் போது கறியை அதில் போட்டு நன்கு வேக விடவும்.
கறி கோழி வேகும் போது திருப்பி திருப்பி போட வேண்டும்.
( மிக மிக முக்கியம் ) அடுப்பு குறைந்த அளவு வெப்பத்தில் இருக்க வேண்டும்.
கறி நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும்.
சுவையான தந்தூரி சிக்கன் தயார்
குறிப்பு:-
சில்லி சிக்கன் பவுடர் வேண்டாம் என்று நிங்கள் நினைத்தால் அதற்க்கு பதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து செய்யலாம்

No comments:

Post a Comment