SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Monday 1 June 2015

வெற்றியின் இரகசியம், உங்களுக்குமட்டும் சொல்கிறேன், யாரிடமும் சொல்லாதீங்க ப்ளீஸ்

வெற்றியின் இரகசிய(ம்)த்தை உங்களுக்கு மட்டும் சொல்கிறேன் யாரிடமும் சொல்லாதீங்க ப்ளீஸ்

உங்களுடைய கவனம் முழுவதும் உங்களின் இலட்சி யத்தை நோக்கித்தான் இரு+க்க வேண்டும். தடைகள் எதிர்படும்பொழுதும் இலட்சியத்திலிருந்து உங்கள்
மனத்தையும், செயலையும் பின்வாங்கவிடாதீர்கள். இவையெல்லாம் உங்கள் உறுதியை சோதிகக வந்தவை என்று கருதி அந்தத் தடை களையும் தாண்டி உங்களுடை ய உயர்ந்த இலட்சியத்தை அடையுங்கள்.
வெற்றியைக் கற்பனையில் நம்பிக்கையுடன் பார்க்கும்திறன்,என்னால் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, உறுதியாக வெற் றி பெற வேண்டும் என்ற செயல்வேகம், எது வேண்டும் என்றாலும் பொறுமையுடன் விடா ப்பிடியாக முயற்சி செய்யும் குண ம், இந்த நான்கும் உள்ளவரே தன்னம் பிக்கையுள்ள மனிதர்.
நம்முடைய வெற்றி, தோல்வியை த் தீர்மானிப்பது மன வளர்ச்சி யோ, மனவளர்ச்சி இன்மையோ அல்ல. நல்ல தே நடக்கும் என்ற மனோபாவம்தான். எனவே எப் போதும் உண்மையான ஆர்வத்துடன் வெற்றிக்காக உழையுங்கள். நம்முடைய உழைக்கும் நேரம் நாள் தோறும் அதிகரிக்க வேண்டு ம். அதற்கு ஏற்றபடி நமது சிந்த னை, செயல்வேகம் ஆகியவை இருக்க வேண் டும். முயற்சியை எவனொ ருவன் எப்பொழுது கைவிடு கிறானோ அப்பொழுதே அவ னது சக்தி முழுவதும் அவனிடமிருந்து பறந்து போய் விடுகிறது.
அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல. விடாமுயற்சியினால்தான். வெற்றியின் இரகசியம் “கடின உழைப்பு” என்ற சொற்களில் தான் அடங்கி இருக்கிறது. நம்பிக்கையு ம் உற்சாகமும் மட் டும் இருந்தால் போதும். வெற்றி இலக்கை அடை ந்து விடலாம்.சிந்தனையைவிடச் செயல்தான் எல்லோரையும், எல் லாவற்றையும் மாற்றி அமைக்கும். முன்னே ற்றத்தையும் தரும். எப்போதும் சிந்தித்துக் கொண்டே மட்டும் இருக்காமல் செயல்பட்டுக் கொ ண்டெ இருங் கள்.
நீங்கள் பணிவுடன் பழகுபவர் என்றால் பலரை உங் கள் பக்கம் ஈர்த்து விடுவீர்கள். நேர்மை உள்ளம் கொ ண்டவர் என்றால் உங்களை எல்லோரும் நம்புவார் கள். விடாது முயற்சி செய்யும் அரிய குணத்தைப் பெற்றிருந்தால், எப்போது ம் நீங்கள் வெற்றி வீரனாகத் திகழ்வீர்கள். மனம் அமைதி யாக இருக்க வேண்டுமா னால் எதிர்மறை யான சிந்தனைக ளையும், பிறரது திற மைகளை சிறுமைபடுத்துவதையும், கீழ் த்தரமான முறையில் விமர்சி ப்பதையும் நிறுத்துங்கள். உங்கள் மனதை சுத்தப்படுத்துங்கள். ஊக்கமான சிந்த னைகளையே நிரப்புங்கள். எதிலேயும் நல்லதே நடக்கும் என்றே செயல்படுங்கள். இப்போது நீங்கள் தான் உலகிலேயே மிகவும் அமைதியான மனம் உடையவர்.
வெற்றி பெறுவோம்’ என்ற திட மான மன உறுதியில் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தொ டர்ந்துவிடாது செயலாற்றிக் கொண்டேயிருந்தால் மிக எளிதாக வெற்றிக்கனியைப் பறிக்கமுடியும். வாழ்க்கையில் உயர வேண்டும் என்று உங்கள் மனத்திற்கு கட்டளையிடுங் கள்.
கட்டளையை முழு வேகத்து டனும் விருப்பத்துடனும் அடிக்கடி இட்டால் நீங்கள் உண்மையில் அதை அடை ய செயலிலும் இறங்கிவிடு வீர்கள். தன்னம்பிக்கையே உலகின் மிகச்சிறந்த ஆயுத ம். இந்த ஆயுதம் இருந்தால் கஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டு அதற்கான கார ணகாரியத்தை ஆராய்ந்து தீர்வு காண முடியும். தன்ன ம்பிக்கையே நோய்களையும், உடல் வலியையும், மன வேதனைகளையும் நீக்குகிறது. தன்னம்பிக்கையே நீடி த்த நல்வாழ்க்கையை அமைத்துத் தருகிறது.
வெற்றி பெறுகிறவனின் ஒரே மந்திரச்சொல் “இப்பொழுது”. தோல்வி அடைகிறவனின் ஒரே சாபச்சொல் “பிறகு”. வெற்றி பெற்றே தீர வேண்டும். எ னவே எதையும் தள்ளிப் போ டாதிர்கள். பிரச்னைகள் தாம் மிகப் பெரிய சாதனைகளையு ம், உறுதிமிக்க சாதனையாளர் களையும் உருவாக்குகின்றன. எனவே பிரச்னைகளை விருப்ப த்துடன் எதிர்கொள்ளுங்கள்.
தோல்வி எனக்கு மனச்சோர்வை அளிப்பதில்லை. மாறாக அது என்னை மேலும் மேலும் ஊக்குவிக்கிறது. எவ்வளவுதான் கல்வியும், செல் வமும் இருந்தாலும் ஒருவனால் வெற்றி பெறமுடியாது. தோல்விக ளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து முயற்சி செய்யும் ஊக்கம் அவனிட ம் இருந்தால்தான் முன்னேற முடியு ம், வெற்றி பெற முடியும். இந்த ஊக்கம் இருந்தால், கல் வியறிவு இல்லாதவனும், பொ ருள்வசதி இல்லாதவனு ம் கூட முன்னேறுவது உறுதி.
முன்னேற முயற்சியை, உழைப் பை, அறிவை, ஒழுக்கத்தை நம்பு ங்கள். இதைத்தவிர  வேறு எதை நம்பினாலும் முன்னேற முடியாது. அறிவுக்கு இந்த உலகம் எப்போது ம் வணங்கும். திறமைக்கு இரு கரம் நீட்டி ஆதரவு தரும். தூய் மையான உள்ளத்திற்கு மிகுந்த வரவேற்பு தரும்.வேதனையை மனோபலத்துடன் எதிர் கொள்ள முடிந்தால், எப்படிப்பட்ட துக்கத்தையும் தாங்கிக்கொள்ள முடியும்.
வாழ்க்கையை அதன்போக்கில் ஏற்றுக்கொண்டு முடி ந்தவரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண் டும். பிரச்சனையை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக் காமல், அதை எதிர் கொள்வது எப்படி என்று நீங்கள் யோசிக்க ஆரம்பித்தாலே போ தும். குழப்பநிலையிலிருந்து நீங்கள் வெளியில் வந்து விட்டதாக அர்த்தம். இந்நிலை யில்தான் நீங்கள் சரியான முடி வுகளை, சரியான நேரத்தில் எடுக்க வேண்டியுருக்கும். பிரச்ச னைகளுக்குத் தீர்வு காணும் முன்பு மனதை சமநிலைப்படு த்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
மிகப்பெரிய எழுத்தாளராகத் தன்னைக் கற்பனை செய்து கொ ள்ளும் ஒருவன் தான் எழுதிக் கொண்டிரு க்கும் படைப்பு ‘எப்படி முடிந்தால் சிறப்பாக இருக்கும்’ என்பதை கற்பனையில் பார்த்து, அதற்கு ஏற்றபடி எழுதினால் நிகழ்காலத் தில் வெற்றி பெற முடியும். ஆக வே நாம் செய்து முடிக்க எடுத்து க்கொண்டுள்ள காரியங்களும் அதை கற்பனையில் பார்த்தபடி உருவாக்கும் குணமும் நம் வாழ் வில் நிச்சயம் பலம் சேர்க்கும். எனவே ‘ முடிவு இப்படி இருக்க வேண்டும்’ என்று உறுதியாக கற்பனையில் படமாகப் பார்த்து முடிவு செய்து கொண்டு தீவிராமாக உழைத்து வெற்றி அடையுங்கள். இதைப் பழக்கத்தில் கொண்டு வந்து தொடர்ந்து சாத னை புரியுங்கள்.
செயல்படுங்கள். காரியத்தி ல் இறங்குங்கள். அறிவுட ன் இருங்கள். காலத்தை வீண் அடிக்காதிர்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி. உறுதியாக நின்று, நானும் ஓர் ‘வெற்றி வீரனே’   ன்று காட்டுங்கள். வெற்றி வீரனா க செயல்படுங்கள்.
நிறைந்த முயற்சியை உடையவ ன், மலர்ந்த வாழ்வைப் பெறுவா ன்.ஆபத்திலிருந்து காப்பாற்றும் படி பிரார்த்திக்க மாட்டேன். ஆப த்துகளைச் சந்திக்க எனக்கு அஞ்சாமையைக் கொடு. நோய்களிலிருந்து காப்பாற்றும்படி யாசிக்கமாட்டேன். நோயைப் பொறுத்துக் கொண்டு வெற்றி கொள்ளும் மனதிடத்தை எனக்கு கொடு. வாழ்க்கை எனும்போரில் எனக்கு துணைகேட்க மாட் டேன். வெற்றியடைய சுயலாபத்தைக் கொடு.
எதிர்பார்ப்புகள் என்ன ஆகுமோ? என்ற பயத்திலிரு ந்து காப்பாற்று ம்படி வேண்ட மாட்டேன். நம்பிக்கையுடன் இருந்து வெற் றியடைய பொறுமையைக் கொடு.-தாகூர்
நிகழ்வதை கொண்டு நிகழ்ச்சி கள் உறுதிப்படுகின்றன. அக மகிழ்வதும், தோல்வியில் வருந்துதலும் சூழல் நிமித்தம். முழுமை பெறுவதே அமைதி .-தொல் காப்பியர்
எந்தப்பணியைநாம்மேற்கொள்கிறோம் என்பது முக்கி யமில்லை . அப்பணியில் நம்முடைய ஆற்றலை எப்படி செயல்படுத்துகி றோம் என்பதுதான் முக்கியம். நமக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளி ப்படுத்தி வளர்த்துக் கொள்வது நம்முடைய ஆர்வத்தையும் முயற்சிக ளையும் பொறுத்தே அமைகிறது. விரும்பியது கிடைக்க வில்லை யெனில், கிடைத்தை விரும்பக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பல்வேறு காரணங்களால் நமக் குள்ளே உருவாகும் தன்னம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை, அச்சம், சந்தேகம், எதிர் காலத்தைப் பற் றிய அவநம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக நம் மிடம் உள்ள ஆற்றல் செயல்பட முடியாமல் முடக்கி வைக் கப்பட்டு விடுகிறது. எல்லாவற்றுக்கு ம் மேலாக நம்மைப்பற்றி நமக்கென் று “ஒரு சுயமதிப்பீடு” இல்லா தற்போ து நம்முடைய ஆற்றலைப்பற்றிய உணர்வும் நமக்கில்லாமல் போய் விடுகிறது. என் னால் இது முடியுமா? என்று சந்தேகப்படுவதை விட்டு விட்டு, என் னால் முடியும் என்கிற நம்பிக்கையினை ப் பெறுகிறபோது ஆற்றலு ம் செயல் படத் தொடங்கு கிறது.
ஆற்றல் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் தான் வெளிப்பட வேண் டும் என்கிற அவசியமில்லை. எத்தனைத் துறைகளில்ஈடுபட்டாலும் அத்தனைத் துறைகளிலும் நம்முடைய ஆற்றலை நம்மால் வெளிப்ப டுத்த முடியும். ஆனால் அத்தனைத் துறைகளிலும் அக் கறை காட்டுகின்ற மனஉறுதி நமக்கிருப்பது அவசி யம். முயற்சிகள் தொடரும்போது ஆற்றல் வெளிப்படத் தொடங்குகிறது. முயற்சி விடா முயற்சியாகும் போது ஆற்றல் வலிமை பெறுகிறது. ஆற்றல் வலிமை பெறு கிறபோது மன தளவில் ஏற்பட்ட தடைகள் தகர் ந்து போகின்றன.
நான் விரும்பிய துறை கிடைக்க வில்லை. ஆகவே என்னுடைய ஆற்றல் வெளிப்பட வழியில்லை என எண்ணுவது தவறு. அவ்வாறு எண் ணுகின்ற மனிதன் தன்னுடைய ஆற்றலுக் குத் தானே தடை விதித்துக் கொள்ளுகிற வன் என்றுதான் கருத வேண்டும். கதவை த் தட்டி வாய்ப்புகள் தங்களை அறிவித்துக் கொள்வதில்லை. நாம்தான் வாய்ப்புகளி ன் கதவைத் தட்டி , திறக்க வைத்து அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப் பு சிறிதாயினும், பெரிதாயினும் உங்களு டைய முழுத் திறமையைக் காட்டி செயல்படுங் கள். அப்போது உங்கள் ஆற்றல் வளர்ந்து கூர்மையடைவதை உ ணரலாம்.
தன் திறமையில் சந்தேகம், பயம், சோம்பல், வேண்டா த வீணான கற்பனை, கீழ்நிலையில் உள்ளவர் களின் துன்பத்தைப் பற்றியே தொ டர்ந்து நினைத்துக் கொண்டிருப் பது, ஆரம்பத்திலேயே வெற்றியி ன் அறிகுறியை எதிர்பார்ப்பது, சிறு தடை என்றாலும் மனமுடை ந்து போவது, இவைபோன்ற பல காரணங்களால் ஒருவருக்குத் தோல்விமனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது. மன உறுதியென்பது நமக்கு நாமே  உண்மையோடும், நம்பிக்கையோடும் உண்டாக்கிக் கொள்வதுதான். விழுவ தில் தவறில்லை. விழுந்த பின்பும் அமைதியாய் இருப்பதுதான் தவறு. விழுந்த பின் மீண்டும் எழுந்து நடப்ப தில்தான், நமது வெற்றியின் ரகசிய மே உள்ளது என்பதைநினைவில் கொ ள்ளுங்கள்.
மூடிய கதவுகளை முறைத்துப் பார்த் துக்கொண்டிருக்காதிர்கள். அதையே நினைத்து நி னைத்து வேதனைப்பட்டுக் கொ ண்டிருக்காதிர்கள். திறந்திருக் கும் கதவுகளை தேட முயலுங் கள். ஒவ்வொரு வினாடியும் முன்னேற வேண்டும் என்பதற் காகத்தான் இறைவன் மனித னுடைய கால்களை முன்னோ க்கி நடக்கும் விதத்தில் அமைத்திருக்கின்றார்.
பார்க்கின்ற பொருட்களில் மகிழ் ச்சியில்லை. அந்தப் பொருளை பார்க்கின்ற மன நிலையில்தான் மகிழ்ச்சி இருக்கின்றது. முயற்சி என்னும் விளைநிலத்தில் உழை ப்பு எனும் இரயில் வெற்றி அனும் இடத்தை அடைய வேண்டுமானால் உற்சாகம் என்னும் பச்சை விளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டே இருக்க வெண்டும். தாமதிப்ப தால் நம் ஒளியை வீணாக் குகிறோம்.அது பகலில் விளக் குகளை எரிப்பதற்குச் சமம். தாமதம் செய்து கொண்டிருப்ப வர்களும், தடுமாறிக் கொண் டிருப்பவர்களும் ஒருபோதும் செயலில் துணிந்து இறங்க மாட்டார்கள்.
ஒரு முக்கியமான காரியத்தை நாம் விரும்பி ஏற்றுக் கொண்டுவிட்ட பின்பு, யாருடைய அபி ப்பிராயத்துக்காகவும் காத்துக்கொண் டு இருக்கக் கூடாது. யாருடைய பேச் சைக் கேட்டும் இடையில் காரியத்தை நிறுத்திவிடுவதும் சரியல்ல. நாம் மேற்கொள்ள வேண்டிய காரியங்க ளைப் பற்றி நாம் ஆலோசனை செய்து பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு.
முன்னேற்றப்பாதைக்கு, அகத்தூண்டுதல் ஒரு சதவிகி தம். வியர்வை சிந்துதல் 99 சதவிகிதம் .-எடிசன்
சுறுசுறுப்பு என்பது ஒரு செய லை நோக்கி தேக்கமி ல்லாமல், மந்தமில்லாமல் அதே சமயத்தி ல் அமைதி யோடு முன்னேறும் (முன்னேற்றும்) உன்னத நிலை யாகும். நாம் முன்னேற்றமடை ந்து உயர்வடைவதை நம்மைத்தவிர வேறு எவராலும் தடுத்துவிட முடியாது.
எந்தத் தொழிலும் வெற்றி பெறக் கூடியவ ர்கள் தங்க ளுடைய வேலை நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள விரும்புவார்கள் .-ஆண்ட்ரு கார்னீகி
ஊதியத்திற்கு மேற்பட்ட உழைப்பைச் செய்வதன் மூலம் நமக்கு நாமே பெரிய உதவியை செய்து கொள்கிறோம்.ஒரு இடத்திற்குப் போய் சேர வேண்டு மானால், இருக்கின்ற இடத்தைவிட்டுத்தான் செல்ல வேண்டும். ஆக உயர்ந்த குறிக் கோளை அடைய வே ண்டுமெனில் சில இன்பங்களை மறந்துதான் ஆக வேண்டும்.’இன்று’ என்பது நம்மிடம் உள்ள ஒரு பண நோட்டு போன்றது.
அதனை எப்படி வேண்டுமானாலும் நம்மால் செலவு செய்யகுடியும். ‘நாளை’ என்பது பின்தேதியிட்ட காசோலை போ ன்றது. அத் தேதி வரும்வரை நம்மால் அதனைக் காசாக்க முடியாது. இன்று அது வெறும் தாளுக்குச் சமம்.
தோல்வியை சந்திக்க நேரும்போது அதிருப்தி ஏற்படு வது இயற்கைதான். ஆனால் அந்த அதிருப்தியானது உங்களை இயலாதவர்களாக, அவமானப்பட்டவர்க ளாக உ ருமாற்றும் முன்பே அதை “பிடிவாதமாக” மாற்றிக் கொ ள்ளுங்கள். எதையோ சாதிப் பதற்காக நீங்கள் பிறந்திரு க்கிறீர்கள். அது என்னவென் று தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களு டைய வேதனைகளை நினைத்து வருத்தப்படாதீர்கள்.அப்படி வருத்தப்பட்டாலும் அதை வெளியி ல் சொல்லா தீர்கள். முக்கிய மாக ‘சுய இரக்கம்’ என்பது கூடாது. உங்களை யாராவது விரும்பாவிட்டால் அது அவர்க ளுடைய பிரச்சனை. அது பற்றி நீங்கள் வருத்தப்பட வேண்டிய தேவை இல்லை.
மற்றவர்கள் உங்களுடன் கழிக்கப் போகும் நேரம் ரொ ம்பக் குறைவுதான். ஆனால் உங்களுடன் நீங்கள் 24 மணி நேரம் கழிக்க வேண்டியிருக் கும். உங்களுடைய கம்பெனி உங்களுக்கு பிடித்தமானதா க இருக்க வேண்டும். விரும் பியதை யாராலும் பெறமுடி யும். முயன்றா ல் முடியாதது இல்லை.யாரையும் நம்மைவிட தாழ்ந்தவர்களாக எ ண்ணிவிடக் கூடாது. நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களை மிகவும் முக்கிய மானவராக, தவிர்க்க இய லாதவராக மாற்றிக் கொள் ளுங்கள். இனிமையான பேச்சுக்களின் மறுபதிப்பா க இருங்கள்.
ஒரு மனிதனுக்குத் தேவை தன்னம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கையே அவனை முழு வேகத்தில் செயல் பட வைத்து தடைகளையும் தாண்டி வலிமை யுடன் வெற்றியைச் சந்திக்க வை க்கிறது. எல்லாக் கவலைகளையு ம் மறக்கவும், கவலையே இல் லாமல் வாழவும் தன்னம்பிக்கை யுடன் சிந்தியுங்கள்.வழிபிறக்கும்.
தோல்வி உறுதி” என்கிற நிலையிலும் போராடத் துணிந்தவனே உண்மையான வீரன். “வெற்றி பெறுவோம்” என்று நம்பு ங்கள். இறுதி வரை போராடுங்கள். விடா மல் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெறு வீர்கள்.-முசோலினி தன் மேஜைமீது வை த்திருந்த பொன் மொழி
           
மனதைப் பழக்கப்படுத்திக் கொ ள்ள வேண்டும்.
இலட்சியத்தை அடையும்வரை, நமது மனமும் செயலும் இலட் சியத்தை நோக்கியே சென்று கொண்டிருக்க வேண்டும். முதலில் கடினமாகத் தோ ன்றினாலும் மனப்பழக்கத் தினால் நம்முடைய பணிக ளை வெகு எளிதாக தொடர்ந் து செய்யமுடியும். கடின மான வேலையைச் செய்வதில் மகி ழ்ச்சியை காணும் மனநிலை கொண்டவர்கள் எப்போதும் வெற்றியையும் அதன் மூலம் புகழையும் பெறுகிறார் கள்.
மனம் சோர்ந்து போனால் நீங் கள் இதுவரை பெற்ற வெற்றிகளை நினைத்துப் பாருங்கள். உங்கள் நண்பர்கள் உங்களைப் பாராட்டிய அம்சங்களை நினைவிற்குக் கொ ண்டு வாருங்கள். நாம் எழுந்து எழுந்து உறுதியுடன் எடுத்து வைக்கும் முயற்சிகளில் தான் நம்பிக் கையும் வெற்றியும் உள்ளன.
=> தன்னம்பிக்கை கௌதம்

No comments:

Post a Comment