SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Friday 26 June 2015


 நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்
கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால்ஆச்சரியமாகத்தானே இருக்கும்நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது.கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால்கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்றகுஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்தேவையான பொருட்கள் 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணிஇற்றுப்போன கட்டைமட்டைகாய்ந்த இலைஓலை போன்றநார்ப்பொருட்கள் கரையான் உற்பத்தி செய்முறை மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர்தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும்முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால்மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும்தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள்உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும்கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர்கொடுக்கக்கூடாதுஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானதுகிடைக்கும் கரையானின்அளவு இடத்திற்கு இடம் மாறுபடும்செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும்அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல்எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம்மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாககோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள்இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்கரையான்செயலாற்றும் முறை இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும்மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல்நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும்கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்கநுண்ணுயிரிகள் உண்டுகரையான் சக்திக்கு நார்ப்பொருளையும்புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ளபூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறதுபானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில்தாக்க ஏதுவாக அமையும்கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானைகவிழ்க்கப்படுகிறதுகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்ததுஎறும்புகள்தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்கரையான் சத்து மிக்கது.அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளனசில வகைகரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளதுஇதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது.கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால்காலம் காலமாக தென் தமிழ்நாட்டுமக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டதுஇச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள்ஏற்படுவது தெரியவந்ததுநன்மைகள் கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள்,வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லைபானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனைகரையான்களை கவர்ந்து ஈர்க்கும்ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லைபானையில் வைக்கும் நனைந்தபொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளனகரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக்குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம்அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப்பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவாமுடிவாக கரையான் உற்பத்தி என்ற எளியசெலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.

No comments:

Post a Comment