SADHASIVAM

SADHASIVAM
அன்பே சிவம் -சிவம்ஜி வலைப்பூ

Saturday, 10 October 2015


·        மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு.... - நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது.
·        எலுமிச்சை. மருத்துவப் பயன்கள் )
·        எலுமிச்சைப்புல்மருத்துவப் பயன்கள்)
·        எலுமிச்சை மூலிகைகள்
எலுமிச்சை ஜுஸ் பயன்
1. மலையேறும்போது போதுமான ஆக்ஸிஷன் கிடைக்காமல் சிரமப்படுகிறவர்கள் கொஞ்சம் எலுமிச்சை ஜுஸ் கொண்டு போகலாம்.எலுமிச்சை ஜுஸ் குடித்தால் சுவாசம் சீராகும்.
2. எலுமிச்சையில் ௮௪.௬% நீர்ச்சத்து இருக்கிறது. வெயில் கால தாகத்தை தணிக்க இது உதவுகிறது.
3. எலுமிச்சை ஜூஸை குடித்து வருவதால் மலேரியா,காலரா போன்ற நோயின் வீரியம் குறையும்.
4. முடக்குவாத நோயை சரி செய்யவும்,எலும்பு தேய்மான பிரச்னை இருப்பவர்களின் நோய் தீவிரத்தைக் குறைக்கவும் எலுமிச்சையிலுள்ள
'விட்டமின் சி' சத்து உதவுகிறது.
5. எலுமிச்சைச் சாறை தண்ணீர் கலக்காமல் குடிக்கக் கூடாது. குடித்தால் பல் எனாமல் பாதிப்[படையும்.
6. வாயில் எச்சில் ஊறுதல், நெஞ்செரிச்சல்,செரிமானமின்மை,வாய்க்கசப்பு உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட, பூரண குணம் கிடைக்கும்.
7. பித்தம், வாய்க் கசப்பால் சாப்பாடு பிடிக்காமல் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை இலை பவுடரை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சட்டென்று நலம் பெறுவார்கள்.
8. சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். எலுமிச்சையில் தண்ணீர் சேர்த்துக் குடிப்பது தாகத்தைக் கட்டுப் படுத்தும்.
9. முழ வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சைம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இந்துப்பு (மலை உப்பு) தூவி வாயில் அடக்கிக் கொண்டால், விரைவில் குணமடைவார்கள்.
10. மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எலுமிச்சை ஜுஸ் கொடுத்தால் சோர்வில்லாமல் ப்ரெஷ்ஷாக இருப்பார்கள்.
11. பசும்பாலில் ஒரு துளி எலுமிச்சைச் சாறை கலந்து குடித்து வர ரத்த மூல நோய் குணமாகும்.

No comments:

Post a Comment