சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு தயாரிக்கும் முறை.
இந்த பதிவில் சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு எப்படி செய்வது என்பது பற்றி கூறி இருக்கிறோம். நீங்களும் படித்து பயன்பெறுங்கள்.
பக்குவமாக மீன் குழம்பு வைத்தாலே போதும் வாசம் தெருமுனை வரை தூக்கும். அதிலும் இது செட்டிநாட்டு மீன் குழம்பு சொல்லவா வேணும்??
தேவையான பொருட்கள்
- மீன் –1/2 கிலோ
- வெங்காயம்-200 கிராம்
- தக்காளி-200 கிராம்
- பூண்டு(உரித்தது)-ஒரு கைப்பிடி அளவு
- மஞ்சள் தூள் –1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள்-2 டீஸ்பூன்
- தனியா தூள்-2 டீஸ்பூன்
- புளி-ஒரு எலுமிச்சை அளவு
- உப்பு,எண்ணெய்- தேவைக்கேற்ப
தாளிக்க: கடுகு,கருவேப்பிலை,காய்ந்த மிளகாய்
அரைக்க: தேங்காய்துருவல் –1/2 மூடி
முதலில் மீனை சுத்தம் செய்து தனியே எடுத்து கொள்ள வேண்டும்.புளியை கரைத்து அதிலே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,தனியாத்தூள்,உப்பு போட்டு கலக்கவும்.
ஒரு கடாயை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு,காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். புளிதண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அரைத்த தேங்காய் துருவலையும் அதனுடன் சேர்க்கவும். குழம்பு கொதிக்கும் போது மீனை போடவும்.
மேலே கொத்தமல்லி தூவி இறக்கவும்.இப்போது சுவையான செட்டிநாட்டு மீன் குழம்பு தயார்.
உங்கள் விமர்சனங்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment